Home சூடான செய்திகள் எப்போதும் காதலுடன் (ரொமான்ட்டிக்காக‌) இருக்க சில எளிய குறிப்புக்கள்

எப்போதும் காதலுடன் (ரொமான்ட்டிக்காக‌) இருக்க சில எளிய குறிப்புக்கள்

21

13-1423835367-couples-87-600என்ன‍தான் உருகி உருகி காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் அல்ல‍து காதலர்களாகவே இருந்தாலும்
எப்போதும் காதலுடன் அதாவது ரொமாண்டிக்காக யாராலும் இருக்க‍ முடிவதில்லை. காரணம், சிறு சிறு பிரச்சனைகளைகூட இருவரில் ஒருவர் பெரி தாக்கி பெரிதாக்கி, புல்லாக இருந்த பிரச்சனையை புடுங்கி எறிவதை விட்டுவிட்டு அதுவளர்ந்த விஷ விருட்சமானபிறகு கோடாரி எடுக்க‍ ஓடுவதைப் போல் தான் இன்றைய காதலர்களும் தம்பதிகளும் இருக்கிறார்கள். சரி! எப்போதும் காதலுடன் அதாவது ரொமாண்டிக்கா க இருக்க‍ என்னென்ன‍ செய்யவேண்டும் என்ப தை இங்கே கொடுத்துள்ளோம். அதனை செவ்வ னேசெய்து உங்களது காதலை என்றென்றும் தக்க‍ வைத்துக்கொள்ளுங்கள்.

1. காதல் என்பது ஒவ்வொருவரின் மனதை பொரு த்தது. அதிலும் காதல் சின்னங்களான ரோஜா, மெழுகுவர்த்திகள் மற்றும் சாக்லேட் மட்டுமே இதுவரை காதலில் ஒரு அறி குறியை கொடுத்துள்ளது. உண்மையில் காதலிப்ப வரை மகிழ்விப்பதற்கு, அவர்களின் காதல் உணர் வுகளைத் தூண்ட எது ஏதுவாயிருக்கும் என்று பாருங்கள். அவர்கள் எதை விரும்புகிறார் என்ப தை தெரிந்துகொள்ளுங்கள். அவர்களின் காதலை வெல்ல அவர்களின் விருப்பங்கள், வெறுப்புகள் அறிந்து கொள்வது மிக அவசியம். மேலும் உங்களது உலகில் மற்றவரை விட அவர்கள் எத்தனை முக்கிய மானவர் என்பதை நீங்கள் உணர ஆரம்பிக்கும்பொழு து, உங்கள் மனம் அவர்மீது அதிககவனத்தை செலுத் தும். இவ்வாறு செலுத்தும்போது, அவர்களது ஒவ்வொ ரு செயலையும் ரசிக்கத் தோன்றும்.
2. நீங்கள் ஒருவர் மீது ஈர்ப்பு கொண்டு அந்த காதலை அவர்களிடம் வெளி ப்படுத்த வேண்டும். மேலும் நீங்கள் அவர்களை கவர என்ன செய்ய வேண்டும்? நீங்கள் அவர்மீது ஆர்வம் கொண்டுள்ளீர் என்பதை எப்படி வெளிப்ப டுத்துவது? அவர்களை அன்பால் வெல்ல என்ன செய்யவேண்டும்? என்பதை யோசிக்கவேண்டியது அவசியம். அவர்களின் அன்பு மற்றும் காதலை பெற முயற்சிக்கவேண்டும். நீங்கள் முன்னமே காத ல் தோல்வி அடைந்தவ ரானால், அந்த தோல்வியைக் வெளிப்படுத்திக் கொண்டு ஒரு அனுதாபத்தை உண்டாக்கலாம். அப்படி செய்கையில் ஒரு காட்சியை உருவாக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் எத்தனை ஆசை வைத்திருந்தீர், காத லில் எத்தனை நம்பிக்கை கொண்டிருந்தீர்கள் என்ப தை விளக்கும்போது, உங்கள்மீது காதல் கொள்ள வாய் ப்பு உள்ளது.

3. காதல் செய்யும்போது ஆரம்பத்தில் எல்லாம் புதியதாக இருக்கும். ஆர ம்பத்தில் உங்கள் காதல், உற்சாகத்தை மற்றும் உத்வேகம் கொண்டு, நீண் ட நாள் உறவைத் தொடர நினைக்கும். நீங்கள் ஒருவரை சந்தித்து அவர்மீது காதல்கொண்டு, மீண்டும் மீண்டும் அவ ரை சந்திக்க மனம் ஏங்கும் மற்றும் உங்கள் தொடர்பு நீடிக் க-நாளை என்ன நடக்கும்? அடுத்த வாரம் என்ன நடக்கும்? அடுத்த மாதம் என்ன நடக்கும்? அவர் உங்களை அழைப்பா ரா?முத்தமிடுவாரா? அவர் வருவாரா? என்று பல உணர்ச் சிகளும் எதிர்ப்பார்ப்பும் நிகழும். இந்த உறவு உங்கள் வாழ்வில் ஒப்புக்கொண்ட பின், இது ஒரு வழக்கமான ஒன்றாக மாறிவிடும். அதனால் உங்கள் காதல் எப்போதும் புதிதான ஒன் றாக இருக்க வேண்டும் எனில், ஏதாவது புதிதாக செய்யுங்கள். ஆச்சரியப்படும்படி, எதிர்பார்க்கும் படி, அவர்களை என்றும் உற்சாகபடுத்தும்படி, அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினால், உங்கள் காதல் எப்போதுமே சிறப்பாக இருக்கும்.
4.காதல் என்பது ஒவ்வொரு நாளும் செய்ய வே ண்டும் என்ற கட்டாயமோ அல்லது அது ஒன்றும் காசு கொடுத்து வாங்கும் விலை உயர்ந்த பொரு ளாகவோ அல்லது உயர்தரமானதாக இருக்க வேண்டும் என்பதோ இல் லை. உண்மையில், சிலநேரங்களில், காதல் தருணங்கள் எளியதாகவும், மனதில் செய்ய வேண்டுமென்று தோன்றும் ஒரு உணர்வு. அதி லும் சில நேரங்களில் அந்த காதலை வெளிப் படுத்த “நான் உன்னை காத லிக்கிறேன், “நான் உனது பிரிவால் வாடுகிறே ன்” என்றெல்லாம் சொல்லி நம் உணர்ச்சியை வெளிப்படுத்தலாம். இல்லையெனில் அவர்க ளை மறைந்து நின்று பார்ப்பது, சத்தமாக காதலை சொல்வது, முத்தமிடுவது, கிண்டல் செ ய்வது, உணர்வை தொடும் வகையில் பேசுவது என்று காதலை வரம் பற்ற வழிகளில் வெளிப்ப டுத்தலாம். படைப்பாற்றல் மற்றும் வேடிக்கை யாக செய்தல் மிகவும் அவர்களை ஈர்க்கும்!
5. வாழ்வில் நீங்கள் விரும்பியவரை பெருமைப் படுத்த அல்லது பாராட்ட, நீங்கள் உண்மையிலேயே அவர்களை உங்க ளோடு இருக்க செய்தல் வேண்டும். அவர்களை உங்கள் சொந்தமாக்கிக் கொள்ள, உங்களின் முழுமுயற்சி எடுக்கும் பொழுது, அதில் அதிக சந்தோஷம் அடைவீர். நீங்கள் ஒவ்வொரு நாளும் அவர்களை தொட ர்ந்து பார்க்கும்போது, அதைவிட அற்புதமான சுழல் எதுவும் இல்லை. அவரை உங்களது வாழ்க்கை துணையாக அடைந்து உங்களின் அனைத்து உணர்ச்சிக ளையும் பகிர்ந்துகொள் ள, நீங்கள் கொடுத்து வைத்தவர் என்பதை மனமானது ஞாபகப்படுத்தி, மீண்டும் உங்கள் வாழ்க்கையில் காதலை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
இவையெல்லாம் சில அனுபவங்கள் தான். காதல் அனுபவிக்க வேண்டியது. போற்றப்பட வேண்டியது. வளர்க்கப்பட வேண்டியது. ஜாதி ஒழிந்து சமத்துவ சமுதாயம் மலர, மனிதநேயம் தளைக்க ஜாதி கடந்த காதல் திருமணங்கள் தேவை.