Home இரகசியகேள்வி-பதில் “என் மனைவியை கண்டிப்பதா?, வேண்டாமா?”

“என் மனைவியை கண்டிப்பதா?, வேண்டாமா?”

73

என் வயது, 30; என் எதிர் வீட்டில் குடியிருக்கும் அவருக்கு வயது, 40. எங்கள் இருவருக்குமே திரு மணமாகி, குழந்தைகள் உள்ள னர். நாங்கள், 12 வருடமாக எதிர் எதிர் வீட்டில் வசிக்கிறோம். எங் களுக்குள் எந்த விதமான பழக்க மும் இல்லை. சென்ற இரண்டு வருடத்திற்குமுன், ஒருநாள், ஜன் னல் வழியாக என்னை பார்த்து சிரித்தார். அதன்பின், அதேபோல் இரண்டு அல்லது
மூன்று முறை நடந்திருக்கும்.
அதன் பின், எனக்கும் அவரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. தின மும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொ ள்கிறோம். சில சமயம், அவர், என் னை பத்து நாள் கூட பார்க்காமல் இ ருப்பார். என்னால் ஒருநாள் கூட அவ ரைப் பார்க்காமல் இருக்க முடியாது; துடித்துப் போய் விடுவேன்.
இதுவரையில், பார்வையால் மட்டுமே பேசிக் கொண்டோமே ஒழிய, எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனாலும், என்னால் அவரை மறக்கமுடியவில் லை. அவரை மறக்க வேண்டும் என்பதற்காகவே யோகா செய் கிறேன். இருந்தாலும், தூங்கி எழுந்தவுடன் அவர் முகம் தான், நினைவிற்கு வருகிறது.
இவர் ஞாபகமாகவே இருப்பதா ல், என்னால், யாரிடமும் அன்பா க இருக்க முடியவில்லை. ஆ னால், அவர் மிக இயல்பாகவே நடந்து கொள்கிறார். என்னால் தான் அப்படி இருக்க முடியவி ல்லை. தயவு செய்து, எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.

— உங்கள் சகோதரி.

அன்பு சகோதரிக்கு —

திருமணம் முடிந்து, வாழ்க்கையில் நல்ல நிலையில் இருந்த போதிலு ம், உனக்கு எதிர் வீட்டு ஆணின் மேல் காதல். அவரை மறக்க முடிய வில்லை என்று புலம்புகிறாய்.
உன் எதிர்வீட்டு ஆணிடம், உனக்கு பிடித்த நபரின் சாயலை, அணு குமுறையை கவனித்து, அதனால், நீ மகிழ்ச்சியடைந்திருக்கலாம். இதில், ‘உடல் உறவு, செக்ஸ்’ போன்ற விஷயங்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல் லை.
‘எந்த தவறும் செய்யவில்லை… ஆ னாலும், அவரை மறக்க முடியவில் லை…’ என்று, ஆதங்கப்பட்டு எழுதியி ருக்கிறாய்.
நன்றாக காற்று அடித்த பந்தை எவ்வளவுதான் நீருக்குள் அமுக் கினாலும், அது வெளியே வரத் தானே செய்யும். நீ எவ்வளவு அழு த்தம் கொடுத்து அமுக்குகிறா யோ அதே அளவு, அதிக சக்தியுட ன் வெளியே நீரை கிழித்துக் கொ ண்டுதான் வரும். பிரச்னையின் அடிப்படைக் காரணத்தை கண்டு பிடிக்கும் வரை, மீண்டும் மீண் டும் உனக்கு தொல்லை தரத்தான் செய்யும்.
‘அவர் மிகவும் இயல்பாக இருக்கி றார்… அவர் நினைவால் இருக்கு ம் எனக்குத்தான் யாரிடமும் அன் பாக இருக்க முடியவில்லை…’ எ ன்று கூறியிருக்கிறாய். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றா ல், நீ மாத்திரம் ஒருதலைப் பட்சமாக அன்பு செலுத்திக் கொண்டி ருக்கிறாய். எனவே, இதை, பிரச்னை என்று நினைப்பதும், நினை க்காமல் இருப்பதும் உன் கையில் தான் இருக் கிறது.
‘நிலங்களை உழுவது போல் உள்ளத் தை உழுங்கள்’ என்று, மனிதர்களுக் கு ஏசு பிரான் கூறுகிறார். நீ, தனியாக அமர்ந்து, உன் எண் ணம் சரிதானா… பக்கத்து வீட்டு ஆணின் பார்வைக்கு நீ ஏங்குவ தைப் போல், உன் கணவன், அடுத்த வீட்டுப் பெண்ணின் பார்வைக்கு ஏங்கி, குடும்ப கடமையை மறந்து தவித்துக் கொண் டிருந் தால், உன் மன நிலை எப்படியிருக்கும் என்பதை, உனக்கு நீயே சுயபரிசோதனை செய்.
நடைமுறைக்கு ஒத்து வருகிற நினைப்பு, செயல்களை மாத்திரம் வைத்துக் கொண்டு, நடைமுறைக்கு ஒத்து வராத செயல்களை தவிர்க்க முயற்சி செய்.
வாழ்வியல் நீதி கருத்துள்ள புத்தகங்களை படி; நீ படித்ததில் உள்ள நல்ல விஷயங்களை பிள்ளைகளிடமும், கணவனி டமும் பகிர்ந்து கொள்; தமக்கு கிடைத்தது எதுவோ, அதை வைத்து திரு ப்தி கொள்ளவும், அதில் சந்தோஷம் காணத் தெ ரிந்தவர்களே வா ழ்க்கையை அனுபவிக்க தெரிந்தவர்கள். நீ, உனக்கு கிடைத்த வாழ்க் கையை, உனக்கு மட்டுமே சொந்தமான உறவுகளை நேசி; விட்டு க் கொடு; அதில் சந்தோஷம் கொள். அதை விடுத்து, பக்கத் து வீட்டு ஆணின் பார்வையை நினைத்து, பாயைப் பிராண்டி, உன் வாழ்வை நீயே கெடுத்துக் கொள்ளாதே…
ரொம்பவும் கஷ்டமாக இருக் கிறது… தாங்க முடியவில்லை என் று நினைக்கும் பட்சத்தில் திறமையான உளவியல் நிபு ணர்களையோ, மனநல மருத் துவரையோ சந்திக்கலாம். அ வர்கள் ‘ஹிப்னா சிஸ்’ அல்ல து ‘பிகேவியர் தெரபி’ போன்ற நவீன சைக்கோ சிகிச்சை மு றைகள் மூலம் பிரச்னைகளு க்கு தீர்வு தரலாம்.
எஞ்சியிருக்கும் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கவும், ஆ டிக் காற்றில் அம்மி பறப்பது போல உன் அனைத்துப் பிரச் னைகளும் பறந்து, நிம்மதியா ன வாழ்க்கை மேற்கொள்ள வாழ்த்துகிறேன்.

 

அன்புள்ள சகோதரிக்கு—
என் வயது 60, என் மனைவி வயது 48, இதுவரை அதாவது, சென்ற மாதம் வரை, எந்த பிரச்னையும் இல்லை.
பதினைந்து வருடங்களுக்கு முன், ஒரு நபர், எங்கள் வீட்டில் தங்கி சாப்பிட்டார். ஐந்து வருடங்க ள் தங்கி, எங்கள் குடும்பத்தி னர் மீது, அதிக பாசம் வைத்து, பண <உதவியும் செய்தார். சில உடல் கோளா று காரணமாக, அவர் திருமணம் செய்து கொ ள்ளவில்லை. அப்போது எனக் குத் தெரியாமல், என் மனை விக்கும், அவருக்கும் தொடர் பு ஏற்பட்டு விட்டது. அதாவது, தாம்பத்ய உறவு மட்டும் இல் லை; அவரால் அதில் ஈடுபட வும் முடியாது. கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்ப தோடு சரி, வேறு ஒன்றும் நடக்கவில் லை என, என் மனைவி கூறு கிறாள்.
இத்தனை வருடங்கள் கழித்து, இப்போதுதான் எனக்கு உண்மை தெரியும். எங்கள் குடும்பத்துக்கு நிறைய பண உதவி செய்துள்ளார். இப்போது, அவர் வயது 58. என் மனைவியும் அவரும், தினசரி போ னில் பேசிக் கொள்கின்றனர்.
இத்தொடர்பை விட்டு விடும்படி என் மனைவியை கண்டிப்பதா, வே ண்டாமா? எனக்கு துரோகம் செய்யவில்லை என கூறுகிறாள். என் ன செய்வது?
— இப்படிக்கு
அன்பு சகோதரன்.
அன்புள்ள சகோதரருக்கு —
கடிதத்தில் உங்கள் குழந்தைகள் பற்றிய தகவல்கள் ஏதுமில்லை. நீங்கள் என்ன பணியில் இருந்து ஓய்வு பெற்றீர்கள், உங்கள் மனை வி இல்லத்தரசியா அல்லது பணிபுரிகிறாரா போன்ற விவரங்களை யும் தெரிவிக்க வில்லை. ஆனால், உங்கள் குடும்பம், பொருளா தாரத்தில் மிக மிக பின்தங்கிய குடும்பம் என உணர்கிறேன்.
உங்கள் வீட்டில், ஐந்து வருடங்கள் தங்கி சாப்பிட்ட நபர், தொடர்ந்து பண உதவி செய்து வந்திருக்கிறார். அவருடைய நிர்பந்தம் காரண மாகவோ அல்லது அவரின் உதவிகளுக்கு நன்றிகடனாகவோ, உங் கள் மனைவி, அந்த நபருடன் கள்ளத்தொடர்பு கொண்டிருக்கக் கூடும்.
“அந்த நபர், உடல் கோளாறு காரணமாக திருமணம் செய்து கொள் ளவில்லை. அவர், “அந்த’ உறவுக்கு தகுதியானவர் அல்ல…’ என்ற, உங்கள் மனைவியின் கூற்று, பொய் என்று நம்புகிறேன். அப்படி இல் லாமல், மெய்யாலுமே அந்த நண்பர் ஆண்மையற்றவர் என ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், உங்கள் மனைவி, பிற நபரை கட்டியணைத்து முத்தமிட்டது, நடத்தை கெட்ட செயலே. அதை, உங்கள் மனைவி நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல் ல.
ஐந்து வருடம் தங்கியிருந்த நபர், பின் என்ன காரணத்திற்காக உங் கள் வீட்டை விட்டு வெளியேறினார்? உங்கள் மனைவியின் கள்ளத் தொடர்பு பற்றிய உண்மை, 15 வருடங்களுக்கு பின், தற்சமயம் தான் தெரியும் என கூறியிருக்கிறீர்கள்; எப்படி தெரிந்து கொண்டீர்கள்? உங்கள் மனைவியே ஒப்புதல் வாக்குமூலம் தந்தாரா? போன்ற கேள் விகளுக்கு, உங்கள் கடிதத்தில் பதில் இல்லை.
தற்சமயம், உங்கள் மனைவியும், அந்த நபரும் தினசரி தொலைபே சியில் காதல் வசனம் பரிமாறிக் கொள்கின்றனர் என்கிறீர்கள். எனக் கொரு சந்தேகம்…
அந்த நபர், உங்கள் வீட்டில் ஐந்து வருடம் தங்கியிருந்து, சாப்பிட்டு உங்கள் மனைவியுடன் கள்ளத்தொடர்பு கொண்டிருந்தது, உங்களு க்கு அரசல் புரசலாய் தெரிந்திருக்கிறது. அந்த நபரின் பண உதவி களுக்காக, அந்த கள்ள உறவை சகித்திருந்திருக்கிறீர்கள். உங்கள் மனைவியின் சமாதானம், நொண்டி சமாதானம் என தெரிந்தும், அதை உண்மை என்று ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.
நீங்கள், வேலைக்கு செல்லாத, பொறுப்பற்ற கணவராய் இருந்தீ ர்களோ என சந்தேகிக்கிறேன். உங்கள் பலவீனம் தான், உங்கள் மனை வியின் பலம்.
உங்கள் கடித கடைசியில், சில கேள்விகள் கேட்டுள்ளீர்கள்.
மனைவியின் கள்ளத்தொடர்பை கண்டிப்பதா, வேண்டாமா? என்பது முதல் கேள்வி. உங்கள் கேள்வியை, பொது அறிவிப்பாய் வெளியி ட்டு, மக்களிடம் அபிப்ராயம் கேட்போமா? நீங்கள் அப்பாவியா அல் லது அப்பாவி போல் நடிப்பவரா? பல வருடங்களாக நடந்த தவறு க்கு, ஒரு மவுன பார்வையாளராக இருந்துவிட்டு, இப்போது ஒரு ஒப்புக்கு கேள்வி கேட்கிறீர்கள் என்று @தான்றுகிறது.
உங்கள் மனைவி, உங்கள் மீது வைத்திருப்பதாக சொல்லும் பாசம், வெறும் வெளி வேஷம். அவர் உங்களுக்கு துரோகம் செய்யவில் லை எனக் கூறுவது, சோற்றில் மறைத்த முழுப் பூசணிக்காய்.
மனைவி விஷயத்தில், என்ன செய்வது என்பது, உங்கள் இறுதி கேள்வி. உங்கள் பக்கம் கொஞ்சமாவது உண்மை இருந்தால், உங் கள் மனைவியின் கள்ளத்தொடர்பை தயவு தாட்சண்யமில்லாமல், கத்தரித்து விடுங்கள். அந்த நபர் செய்யும் பண உதவிகளை ஏற்காதீ ர்.
அவருடனான பழக்கத்தை முழுவதுமாக கத்தரித்துக் கொள்ள உங்கள் மனைவிக்கு கண்டிப்பான உத்தரவிடுங்கள்.
மொத்தத்தில், ஒரு குடும்பத் தலைவனுக்குள்ள பொறுப்புகளுடன் நடந்து, மீதமிருக்கும் வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்குங்க ள் சகோதரரே!