Home சூடான செய்திகள் எந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைப்பார்கள்?…

எந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைப்பார்கள்?…

37

உடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகு அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி / கணவன் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும்.

அனைவருக்கும் இப்படி அமைவது சாத்தியமற்றது. அழகை ரசிக்கத் தெரியாதவர்களுக்கு தான் அழகான மனைவி கிடைப்பார்கள்.

அதேபோல சில சுமார் மூஞ்சி குமார்களுக்கு தான் அழகான, அறிவான பெண்கள் அமைவார்கள். இதெல்லாம் அவரவர் செய்த புண்ணியம் போல. ஜாதகத்தில் கட்டம் சரியாக இருந்தால், நீங்கள் எதிர்பார்க்காமலேயே அழகான பெண் உங்களுக்கு அமையுமாம்.

குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் போன்றவர்கள் 7 ஆம் இடத்தில் அமர்தல், போன்றவை நம்முடைய ஜாதகத்தில் இருந்தால் அழகான, அறிவான மனைவி/கணவன் அமைய வாய்ப்புள்ளதாம்…

துலாம் ராசிக்காரர்கள் அனுபவிக்கப் பிறந்தவர்கள். இந்த உலகில் இவர்களுக்கு வாய்க்கும் அனைத்தையும் அனுபவித்து, ரசித்து வாழ்வார்கள். உணவாக இருந்தாலும் கூட நல்ல ருசியாக இருக்க வேண்டும், சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள்.

ரிஷப ராசிக்காரர்கள் மனைவி விஷயத்தில் மிகவும் உஷாராக இருப்பார்கள் . அதனால் இவர்களுக்கு அழகான மனைவி/கணவன் கிடைப்பது நிச்சயம்.

தனுசு, துலாம், கடகம் ராசிக்காரர்கள் ஆண்/பெண் விஷயத்தில் பெரிய ஆய்வாளர்களாக இருப்பார்கள். இவர்கள் மிக ரசனையான ஆட்கள். புன்னகை, பேச்சு, கண்கள், மூக்கு என ஒவ்வொரு பாகத்தையும் ரசித்து காதலித்து திருமணம் செய்பவர்களாக இருப்பார்கள் இவர்கள்.

மகரம், கும்பம், சிம்மம், மேஷம், விருச்சிகம் போன்ற ராசிக்காரர்கள் இஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று கூறுவதை விட மிகவும் கஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று கூறலாம்.

நல்ல நேரம் வந்தால் திருமணம் நடக்கும். இவர்கள் ஒருபக்கம் வேலையை பார்க்க, சுப லக்னம் ஏழாமிடத்தில் இருந்தால் இவர்களுக்கும் அழகான வாழ்க்கை துணை அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

கன்னி, மீனம் ராசிகாரர்களுக்கும் மிதுனம் ராசிகாரர்களும் எதுவாக இருந்தாலும் கணக்குப் போட்டுப் பார்த்து செயலில் இறங்குபவர்கள். இவர்கள் இவர்களுக்கான துணையைத் தேர்வு செய்வதிலும் கூட இப்படித்தான் செயல்படுவார்கள்.

இந்த ராசிக்காரர்கள் ஒருவரது குணாதிசயங்கள், அவரது குடும்பம், என எல்லாவற்றையும் தெரிந்துக் கொண்டு தான் திருமணம் செய்துக் கொள்ள இறங்குவார்கள். இவர்களுக்கு அழகு என்பது இரண்டாம் பட்சம்தான். அறிவும், திறமையும் தான் இவர்கள் எதிர்பார்ப்பது.