Home சூடான செய்திகள் உறவில் இயற்கையை விரும்பும் பெண்கள்…

உறவில் இயற்கையை விரும்பும் பெண்கள்…

37

lust-500x500நீதான் என் உசுரு, மத்தவிங்க எல்லாம் எனக்கு முக்கியமே இல்ல தெரியுமா? என்பது போன்ற சில வாக்கியங்களை கேட்கும் போது, மிகையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும் கூட பெண்கள் அதிக சந்தோஷம் அடைவார்கள். மற்றும் இது போன்ற வாக்கியங்கள் தங்கள் துணையின் திருவாயில் இருந்து வராதா என ஏங்குவார்கள்.
பெரும்பாலான ஆண்கள் திருமணத்திற்கு முன்னர் கவிஞனாக வாழ்ந்தாலும், திருமணத்திற்கு பிறகு அந்த வேலையை ராஜினாமா செய்துவிடுகிறார்கள். சும்மா இருந்த புள்ளைய கிள்ளிவிட்டுட்டு, இப்போ ஒண்ணும் பேசாம இருந்தா எப்படி பாஸ். சில விஷயங்கள அறுபது வயசானாலும் செய்யனும்.
இல்லறம் எப்பவும் நல்லறமா இருக்க, உங்க துணையின் முகத்தில் பூரிப்பு பூரி போல பெருசா எப்பவும் இருக்க இதெல்லாம் அப்பப்போ சொல்லுங்கள்….
செலவுகள்
காஸ்மெடிக்ஸ், ஃபேஷன் போன்றவற்றில் அதிக ஈர்ப்பு இல்லாமல் இருப்பார்கள். அவை இயற்கைக்கு மாறானவை என கருதி பயன்படுத்த மறுப்பார்கள். இதனால், செலவு குறைவாக தான் செய்வார்கள்.
வாழ்க்கை
மதிப்பு வாழ்க்கையின் மதிப்பு என்ன, வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும். கடின சூழல் எனிலும், அதை எப்படி தாண்டி வர வேண்டும் என்ற மனப்பக்குவம் இருக்கும்.
இதயத்தை பின்தொடர்
மூளை சொல்வதை தவிர்த்து, இதயம் கூறுவதை கேட்டு உணர்வின் பால் வாழ்க்கை மற்றும் உறவு சார்ந்த முடிவுகள் எடுப்பார்கள். இதனால், உறவில் பெரிதாக எந்த பிரச்சனையும் எழாது.
தொடர்பில் இருப்பது
மனிதர்கள் என்று மட்டுமின்றி மரம், செடி, கொடி, விலங்குகள் என அனைவரிடமும் அன்பு காட்டுதல், அக்கறை செலுத்துதல் என தொடர்பில் இருப்பார்கள்.
சாதாரணம்
வெற்றி, தோல்வி, இன்ப துன்பங்கள் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு தலைகனம் இல்லாமலும், துவண்டு போகாமலும் இருப்பார்கள். வாழ்க்கையை எளிமையாக பார்க்கும் குணம் கொண்டிருப்பார்கள்.
சூழ்நிலை
எந்த சூழல் கடினமாக இருக்கும், அதற்கு ஏற்றார் போல எப்படி தயாராக வேண்டும் என சூழ்நிலை அறிந்து திட்டமிடுதல், வாழ்க்கை நடத்துதல் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.
முழுமையான காதல்
நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே காதலிக்கும் தன்மை கொண்டிருப்பார்கள். எதற்காகவும், உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என அடம் பிடிக்க மாட்டார்கள்.