Home சூடான செய்திகள் உறவின் போது ஆண் பெண் நிலை

உறவின் போது ஆண் பெண் நிலை

19

387190_f520உடலுறவில் கிடைக்கும் பரவசமான சுகம் எப்படி இருக்கும்? என்று வர்ணிக்க முயன்றவர்கள் எல்லோரும் தோற்றுப்போய் இருக்கிறார்கள்.
உறவில் ஆணுக்கு விந்தண வெளியேறுவதால் சுகம் கிடைக்கிறது. இந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று பெண்ணுக்கு தெரியாது. பெண்ணுக்கு இதுபோல் எந்த திரவமும் வெளியேறுவதில்லை. ஆனாலும் அவள் சுகம் அடைகிறாள். அது எப்படிப்பட்ட பரவச இன்பம் என்பது ஆணுக்கு தெரியாது.
பரவசம் கிடைத்ததுமே பெண்ணிடம் இருந்து ஆண் விடுபட முயற்சிப்பான். ஆனால் பெண் விடமாட்டாள். இறுக்கி அணைத்து இன்னும் வேண்டும் என்று செயல்படுவாள்.

உடலுறவில் ஆண்களுக்கம் பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. ஆண்களுக்கு விந்து வெளியேறியதும் கட்டாயம் ஓய்வு வேண்டும். மீண்டும் உறவு மேற்கொள்ளும்போது தொடக்கத்தில் இருந்து தொடங்க வேண்டும். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. உறவுக்கு முந்தைய விளையாட்டில் தாமதமாக உணர்ச்சி வசப்பட்டாலும் கூட, உறவில் அவர்களிடமிருந்து திரவமாக எதுவும் வெளியேறுவது நடைபெறாத காரணத்தால் ஒரே நிமிடத்தி்ல் கூட திரும்பவும் இன்னொரு முறை உறவில் உச்சகட்டத்தை அடைய அவர்களால் முடியும். இதனால் தான் உறவு முடிந்ததும் விலக முயற்சிக்கும் ஆணை இறுக்கமாக அணைத்துக்கொள்கிறார்கள் என்று நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

செக்ஸ் உறவு முடிந்த உடனே குறட்டை விட்டு தூங்கிவிடும் பழக்கம் பல ஆண்களிடம் இருக்கிறது. இந்தியர்கள் பலர் தங்கள் மனைவியை தூக்க மாத்திரையாகத்தான் பயன்படுத்துகிறார்கள் என்று செக்ஸ் நிபுணர்கள் கிண்டலிக்கிறார்கள். இது மிகவும் தவறு. உறவு முடிந்த களைப்பில் மனைவிக்கு முதுகு காட்டி திரும்பி படுக்கக்கூடாது. இரண்டு பேரும் அன்போடு கட்டித்தழுவி முத்தத்தை பரிமாறிக்கொள்ள வேண்டும். பரவசத்தை தூண்டும் வெறித்தனமான முத்தம் தேவையில்லை. ஒரு குழந்தையை முத்தமிடும் போது காட்டும் களங்கமற்ற அன்பு தான் அதில் காட்ட வேண்டும். இந்த சமயத்தில் மனம்விட்டு பேச வேண்டும். இப்படி பேசுவதுதான் இருவர் மனதிலும் அன்பை ஊற்றெடுக்க வைக்கும், பாசப்பிணைப்பை அதிகரிக்கும்.