Home சூடான செய்திகள் இளைய சமூதாயத்தினை தவறான வழிக்கு இட்டுச் செல்லும் போதை மருந்துகள்…!!

இளைய சமூதாயத்தினை தவறான வழிக்கு இட்டுச் செல்லும் போதை மருந்துகள்…!!

34

functioning alcoholic businessmanபல நாடுகளில் குறிப்பாக பதின்ம வயது ஆண்கள் தான் இது பெரிதும் பாதிப்புக்குள்ளக்கி அவர்களின் உணர்ச்சிகளை தூண்டி தவறான பாதைக்கு இட்டுச்செல்கிறது. இளைஞர்களே சமூகத்துடன் ஒன்றி காட்டுக்கோப்புடன் செயற்படுங்கள்.

மது பழக்கத்தால் சமூகத்தில் தலைகுனிவு ஏற்படுவதுடன் உடல் நலமும் சீர்கேடு அடைகிறது என்கிறார் சூரியா பாரத் மருத்துவ மனையின் சித்த – ஆங்கில மருத்துவ நிபுணர் மதுப்பழக்கம் மிக மோசமானது. அதிகப்படியானஆல்கஹால் போதையால் இளைஞர்களின் உணர்ச்சிகளை மிக வேகமாக தூண்டி விட்டு வெறி கொள்ளச் செய்கிறது.

பொதுவாக ஆண்களுக்கு உணர்ச்சிகள் இருக்கும். அந்த உணர்ச்சியை அடக்கிக் கொள்ளலாம். வெறியை அடக்க முடியாது. இந்த வெறியானது மது போதையால் வரக்கூடியது. ஒருவன் அதிகப்படியான மது போதையால் திடீரென உணர்ச்சியால் உந்தப்பட்டு கண்ணில் பார்க்க கூடியதை அடைய வெறி கொள்கிறான். இதற்காக அவனை வன்முறையில் ஈடுபடவும் தூண்டுகிறது. வெறிக்கும், ஆண்மைக்கும் வேறுபாடு உண்டு.

ஆண்மை இருப்பவன்தான் கற்பழிப்பில் ஈடுபடுகிறான் என்பது அல்ல. ஆண்மை எல்லோருக்கும் உண்டு. வெறிதான் ஒருவனை மிருகமாக்குகிறது. கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் வெறி பிடித்தவர்கள். அவர்களுக்கு மது போதை மற்றும் உணர்ச்சிகளை தூண்டும் செயல்கள்தான் வெறியைத் தூண்டுகிறது.

இது போன்ற மது போதை வெறியால் அவன் பார்க்கும் பெண்ணை அடையும் வெறி ஏற்பட்டு, அதற்கு தடையாக இருக்கும் போது அவர்களை தாக்கி பணிய வைக்கிறான். டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவமும் இந்த வெறியால் நடந்ததற்கு எடுத்துக்காட்டு. பிறகு அவன் தவறை உணர்ந்து செய்த தவறை நினைத்து வருத்தப்படுகிறான்.

அவனுக்கு தூக்கம் வராது. நாளடைவில் மனநிலை பாதிக்கப்பட்டு சைக்கோ நிலையை அடைந்து விடுகிறான். உடலில்நீர் பற்றாக்குறை, மயக்க நிலை, உடலுக்கு தேவையான ஆக்சிஜனை சுவாசிக்க முடியாமல் போவது போன்ற ஏராளமான பிரச்சினைகள் மதுவில் முக்கியமாக உள்ளன. எத்தனால் என்ற வேதிப் பொருள்தான் இத்தனை பாதிப்புகளுக்கும் காரணம். மது முதலில் உடலில் தாக்குவது நரம்பு மண்டலத்தைத் தான்.

அதன்பிறகு ஒவ்வொரு முக்கிய உறுப்பாகத் தாக்கி ஒட்டு மொத்த உடல் உறுப்புகளையும் செயல் இழக்கச் செய்யும். மதுவினால் உடலின் மிகப்பெரிய சுரப்பியான சுமார் 1 கிலோ எடையுள்ள கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இது 500 விதமான வேதியியல் மாற்றங்களை ஒரே நேரத்தில் செய்கிறது. கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து விடும்.

மது அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் பின் விளைவுகள் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தலைகுனிவு ஆகியவற்றை நன்கு அறிந்தும் கூட சிலர் தவிர்க்க முடியாமல் விருப்பத்திற்கு மாறாக, போதும் என்று கட்டப்படுத்த இயலாதவாறு தொடர்ந்து குடித்து, அந்த பழக்கத்தை விட முடியாமல் இருப்பார்கள். போதை மருந்துகளுக்கு அடிமையாவது போலவே, குடிப்பழக்கம் எனப்படும் இந்நோயும் மருத்துவத் துறையினரால் குணப்படுத்த முடியும் நோயாக வரையறுக்கப்படுகிறது.

இதுபோல் தான் கஞ்சா, அபின், பிரவுன்சுகர், புகை யிலை பழக்கங்களும் இவையும் ஹார்மோன் குறைபாடுகள், நரம்பு தளர்ச்சி, நரம்பில் உள்ள நியூட்ரான் செல்களின் குறைபாடு, நரம்பு இயக்க சக்தியின்மை, ஆண்மை குறைவு போன்ற குறைபாடுகளை உண்டு பண்ணுகிறது. கடைசியில் இதனால் மன வேதனைப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.

வடமாநிலங்களில் போஸ்கோ காய், பாங்கு இலை போன்றவை கிராமங்களில் அதிகமாக கிடைக்கிறது. இதுவும் போதை தரக்கூடிய மூலிகை வகைகள் இதனை வடநாட்டவர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் வட இந்தியாவில் போதையால்நடைபெறும் குற்றங்கள் அதிகம். பான்பராக், புகையிலை பழக்கத்தால் வாய்ப்புற்று நோய் வர வாய்ப்புள்ளது. இதற்கு ஒரே தீர்வு இளைஞர்களை மது போதையில் இருந்து விடுவித்து அவர்களை நல்வழிப்படுத்துவது தான்.

கஞ்சா, அபின், புகையிலை பழக்கம் உள்ளவர்களை அதில் இருந்து விடுவிக்க வேண்டும். அவர்களுக்காக ஆரோக்கியம் தரக்கூடிய புகையிலை பற்றி நான் தனிப்பட்ட முறையில் ஆராய்ச்சி செய்துள்ளேன். இந்த புகையிலையில் நிக்கோடின் இருக்காது. நிக்கோடின் சக்தி இல்லாத புகையிலை மூலம் அவர்களை அந்தப் பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கலாம்.

இந்த புகையிலையானது அவர்களுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடியது. இன்றைய கால கட்டத்தில் மது அருந்தும் பெண்கள், ஆண்களை விட அதன் தீய பாதிப்புகளுக்கு அதாவது உடல் ரீதியான மூளை பாதிப்பு, மன நிலை பாதிப்பு போன்ற இடர்பாடுகளுக்கு ஆளாகிறார்கள். திருமணம் ஆகாத பெண்கள் திருமணத்துக்கு முன் இது போன்ற பழக்கத்துக்கு ஆளாகும்போது அவர்களுக்கு ரத்தத்தில் `பிளெட்லெட்’ எண்ணிக்கை குறைந்து அனைத்து விதமான உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகிறது.

இதுபோல் சமீப காலமாக திருமணம் ஆகாத பெண்களையும் கர்ப்பபை புற்று நோய் தாக்குகிறது. அவர்கள் லேப்ராஸ்கோபி மூலம் கர்ப்பபை அறுவை சிகிச்சை செய்து வெளியில் தெரியாமல் மூடி மறைக்கிறார்கள். அதன்பின் திருமணம் செய்து குழந்தை இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்கள் ஆரம்ப கட்ட சிகிச்சை எடுத்துக் கொண்டால் அறுவை சிகிச்சை இன்றி குணப்படுத்தலாம்.

இதுபோல் பெண்களுக்கான கர்ப்பபை புற்று நோய்க்கும் சித்தா முறையில் `ஆன்டி வைரஸ் டிரக்ஸ்’ கண்டுபிடித்து அதற்கு தமிழக அரசின் மருந்து கட்டுப்பாடு மையத்தின் அனுமதி பெற்றுள்ளேன். ஆன்டி வைரஸ் டிரக்ஸ் மூலம் கரு சினைப்பையில் ஏற்படும் `எமரேஜிஸ்ட்’ ரத்தக் கட்டிகள், என்டோ மெட்ரியாசிஸ்ட், டெர்மாய்டு சிஸ்ட், இதனால் ஏற்படும் பெல்விக் இன்பிலமேசன் நோய்கள், பெண்களின் அந்தரங்க நுழைவாயிலில் ஏற்படக்கூடிய `வாட்’ நோய்கள், சர்வீக்ஸ் அல்சரேசன் நோய்கள், ஓவரின் காம்ப்ளக்ஸ் சிஸ்ட் நோய்கள் போன்றவைகளை கைனாலாஜி டாக்டர்கள் உதவியுடன் நோயின் தரத்தை கண்டறிந்து அதற்கு தகுந்த மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கலாம் என்கிறார் சித்த-அலோபதி டாக்டர் எஸ்.எஸ்.மணிகண்டன்.

முத்தமிட்டாலும் நோய் பரவும்…….

நகரங்களில் இளைஞர்கள், இளம்பெண்களிடையே மதுப்பழக்கம், ஓட்டல்களுக்கு சென்று `பப்’களில் நடனமாடுவது, நண்பர்களுடன் முத்தமிடுவது என கெட்ட பழக்கங்கள் பரவி வருகிறது. முன்பின் தெரியாத நபர்களுடன் முத்தமிடும் போதும் கிருமிகள் பரவும் வாய்ப்பு உள்ளது. இணைய தளங்களால் இளைஞர்களில் ஒரு பகுதியினர் தவறான பாதைக்கு செல்கிறார்கள்.

அவர்களை இயற்கையான செக்ஸ் முறையில் இருந்து தவறான வழிக்கு இட்டுச் செல்கிறது. இணைய தளங்களில் வரும் ஆபாச படங்கள் இளைஞர்களை தகாத உறவுகள் வைத்துக் கொள்ள தூண்டுகிறது. அவர்களுக்கு உணர்ச்சியை தூண்டி விட்டு வெறி ஏற்படுத்துகிறது.