Home சூடான செய்திகள் அழகோ, அழகு… பேரழகு.. தமன்னா முகத்தை சிவக்க வைத்த சிரஞ்சீவி!

அழகோ, அழகு… பேரழகு.. தமன்னா முகத்தை சிவக்க வைத்த சிரஞ்சீவி!

30

நடிகை தமன்னாவின் அழகைப் பற்றி புகழ்ந்து பேசி அவரை முகம் சிவக்க வைத்துவிட்டாராம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவும், தமன்னாவும் நடித்துள்ள ரட்சா படத்தின் இசை வெளியீ்ட்டு விழா அண்மையில் நடந்தது. விழாவிற்கு வந்திருந்த சிரஞ்சீவி தமன்னாவின் அழகை சகட்டுமேனிக்கு புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது,

ஆஹா, தமன்னா இவ்வளவு அழகாக இருக்கிறார்களே. அவர்களைப் பார்க்கையில் எனது 150வது படத்தை உடனே துவங்கி அவரையே எனக்கு ஜோடியாக போட்டுவிடலாம் போலிருக்கிறதே. என்ன என் மகனுக்கு அவர் ஜோடியாக நடித்துள்ளதால் நான் அவருடன் நடிக்க முடியாது என்று வருத்தமாக கூறியுள்ளார்.

இப்படி சிரஞ்சீவி புகழ்ந்து தள்ள தமன்னாவுக்கோ வெட்கத்தில் முகம் சிவந்து விட்டதாம். மேலும் தமன்னாவுக்கும் மழைக்கும் அவ்வளவு பொருத்தமாக உள்ளது. அவர் நடிக்கும் படங்களில் ஒரு பாட்டிலாவது வெள்ளை நிற ஆடையைக் கொடுத்து மழையில் கிளுகிளுவென நனையவிடுகிறார்கள். அப்படி அவர் ஆட்டம் போட்ட அடடா, மழைடா அடைமழைடா பாடல் இன்னும் பலருக்கு பிடித்த பாடலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமன்னாவின் தெலுங்குக் காட்டில் அடை மழைதான் போல, நனையட்டும், நல்லா நனையட்டும்…!