தாண்டவம் படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது. |
கொலிவுட்டில் அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டு விக்ரம் நடித்த ராஜபாட்டை திரைப்படம், மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
இதற்கிடையில் பாண்டிராஜ் இயக்கிய மெரினா, திரையுலகில் வெற்றி பெற்றதையடுத்து, அவருக்கு வரவேற்பு நிலவிவருகிறது. இயக்குனர் பாண்டிராஜ், விக்ரமிடம் நகைச்சுவை கலந்த கதை ஒன்றை கூறியுள்ளார். இக்கதை சீயானுக்கு பிடிக்க, உடனே இருவரும் ஒப்பந்தமாகிவிட்டார்கள். இதையடுத்து தாண்டவம் படத்தை முடித்த பின்பு சீயான் விக்ரம், பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கொலிவுட்டில் கூறுகிறார்கள். |