Home சூடான செய்திகள் தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு பிரச்சினை என்றால்

தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு பிரச்சினை என்றால்

23

images (3)குடும்ப வாழ்க்கை என்றாலே அங்கே கவலை மட்டுமே குடிகொள்ளும் என்று நினைப்பது தவறு. சந்தோ ஷமான குடும்ப வாழ்க்கைக்கு நாம் பின்பற்றும் வழிமுறைகளும் முக்கிய காரணம்.குடும்பத்தில் இணையக் கூடிய தம்பதிகள் நல் ல ஆரோக்கியமாக இருக்கிறார்க ளா என்பதையும், அவர்களுடைய ரத்தக் குறிப்பையும் அறிந்து கொள் வது நல்லது.
திருமணத்துக்குப் பிறகு, அதற்கு முன்பிருந்த உறவுகளை சொல்லி அத னால் பிரச்சினைகள் உருவாவதை தவிர்த்து விடவேண்டும். முன்பிருந் த காதல், பிரச்சினை, குழப்பங்களுக்கு வழி வகுத்துவிடும். ஆகவே அந்த மாதிரியான எண்ணங்களுக்கு முழுக்கு போட்டு விடுங்கள். திருமணத் துக்கு பிற கும் முந்தைய சில உறவுகளைத் தொட ர்ந்தால் அதுவே உங்கள் வாழ்க்கைக்கு எதிராக அமைந்து விடும். இன்றைய கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களு க்கு அடிப்படை காரணமே இந்த மாதி ரியான விஷயங்கள்தான்.

திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல் லும் பெண், அங்குள்ள கணவரின் உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரையும் ஏற்றுக் கொண்டு அன்பு, மரியாதை செலுத்த வேண்டும்.வெவ்வேறு இட ங்களில் இருந்த ஆணும், பெண்ணும் இணையும்போது பல்வேறு விஷய ங்களில் முரண்பாடுகள் ஏற்படவே செய்யும். அதை சரி செய்து ஒத்துப் போவது நல்லது.
வாழ்க்கை என்றால் நிறைய நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் அதையெல்லாம் சகஜமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களுடைய துணைவரிடம் நல்ல குணங்கள் இருக்கும்போது அதை கண்டு கொ ள்ளாமல், குறைபாடுகளை மட்டும் பெரிதாக் குவதை தவிர்க்க வேண்டும். இருவரது குறை பாடுகளையும் பரஸ்பரம் ஏற்றுக் கொண்டு அதற்கு நல்லதோர் தீர்வு காணலாம்.
மது, போதை மருந்து, புகையிலை, பான்பராக் போன்ற லாகிரி வஸ்து க்கள் எல்லாமே குடும் ப வாழ்க்கையை சிதைக்கும் தன்மை கொண் டவை. சுகத்தை விட இதில் சோகமே அதிகம்.
அதேபோல், வரவுக்கேற்றபடி செலவு செய்ய இருவரும் முன்வர வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்தவும் முயற்சிக்கவும். மாதந்தோறும் பட் ஜெட் தயார் செய்து தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல் லது.
பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சினைகள் உருவாக பெரியவர்களும் முக்கிய காரணம்.சுதந்திரமாக இருக்கும் இன் றைய தலைமுறையை… பெரியவர்கள் சிலர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கட்டுப்படுத்த நினைப்பதை தவிர்க்க வேண்டும்.
பெற்றோர் மற்றும் உறவினர்கள் குதர்க்கமான பேச்சு மூலம் தம்பதி களுக்குள் பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது.சந்தேகம், முன் கோபம், மது அருந்துதல் போன்றவை பிரச்சினை என்ற தீயில் மேலும் எண் ணையை ஊற்றுவது போல் ஆகிவிடும். இதற்கு கவுன்சிலிங் சிகிச்சை எடு த்துக் கொள்வது நல்லது.
எந்த செயலாக இருந்தாலும் எல்லோரும் ஒன் றாக அமர்ந்து பேசி, அதை செயல்படுத்தினால் பிரச்சினை ஏற்படாது. அதேமாதிரி, எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அனைவரும் அமர்ந்து பேசினால் பிரச்சினையை சமாளிக்க முடியும். உட ல்நிலையில் பாதிப்பு ஏற்படும்போது காட்டும் விசேஷ அக்கறை, தம்ப திகளுக்குள் ஒரு நல்ல இணக்கமான சூழ்நிலையை எற்படுத்தும்.
திருமணம் செய்துவிட்டு வெளிநாட்டுக் கு வேலைக்கு செல்வோர், தங்க ளுடைய மனநிலையை மேம்படுத்துவது நல்லது. வெளிநாட்டில் இருக்கும்போது தன்னு டைய மனைவியை யாராவது தவறாக சொன்னால் அதை நம்பி, தன்னுடைய வாழ்க்கையை பலி கொடுக்கத் துணிவது நல்லதல்ல.
இப்போது 65 சதவீதம் பேர் செக்ஸ் விஷ யத்தில் முழுமையானவர்களாக இல்லை . இதனால் ஏற்படும் தவறான கருத்துக ளும் குடும்ப வாழ்க்கைக்கு உலை வைத்துவிடும். எனவே குடும்ப வாழ் க்கையை தொடங்கும்போது, செக்ஸ் குறித்த முழுமையான அறிவு அவசியம்.
முக்கியமாக… குடும்பத்தில் தம்பதி களுக்குள் ஏதாவது பிரச்சினை என் றால் அதை இருவருமாக பேசி முடி க்க வேண்டும். அதைவிடுத்து மூன் றாவது மனிதரை இந்த விஷயத்து க்குள் நுழைய அனுமதிக்கவேண் டாம். அதேபோல், திருமணத்திற்கு பிறகு மனைவியை கவனிக்கும் பொ றுப்பை பெற்றோரிடம் ஒப்படைப்ப தும் தவறு. இதனால் பிரச்சினைகள் தான் தோன்றும். தம்பதிகளில் யாரா வது ஒருவருக்கு பிரச்சினை என்றால் அதை கனிவான அணுகுமுறை மூலம் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். இந்த நேரங்களில் பொறு மையான மனநிலையும் முக்கியம்.