Home வீடியோ பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்! மர்மநபர் செய்த அட்டூழியம்!

பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்! மர்மநபர் செய்த அட்டூழியம்!

32

மணிப்பூரை சேர்ந்த இளம்பெண் ஆதிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் டெல்லியில் உள்ள கவுஜ் காஸ் என்ற கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறார்.
கிராமத்தில் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது இரவு 11.30 மணியளவில் அவ்வழியாக வந்த பைக்கில் வந்த அடையாளம் தெரியாத ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார். அவருடன் ஆதிஷா பைக்கில் சென்றிருக்கிறார்.
அப்போது டெல்லியில் உள்ள மான் பூங்கா அருகே வரும் போது பைக்கை நிறுத்திய அந்த மர்ம நபர், ஆதிஷாவை பூங்காவிற்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை எதிர்பார்க்காத ஆதிஷா, அந்த மர்மநபரிடம் இருந்து தப்பித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆதிஷாவின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், விரைவில் அடையாளம் தெரியாத நபர் கைது செய்யப்படுவார் என்று அவர் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.