Home சமையல் குறிப்புகள் மணக்கும் மதுரை மட்டன் சுக்கா செய்வது எப்படி?

மணக்கும் மதுரை மட்டன் சுக்கா செய்வது எப்படி?

64

மட்டனை விதவிதமாக சமைத்து பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அதுவும் மதுரை மட்டன் சுக்கா என்றால் கூறும் போதே நாவில் எச்சில் ஊரும். அப்படிப்பட்ட மணக்கும் மதுரை மட்டன் சுக்கா செய்வது எப்படி?

**மட்டன் – 200 கிராம்

**சின்ன வெங்காயம் – 1/4 கப்

**பூண்டு – 10 பற்கள்

**தக்காளி – 1

**மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

**மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

**மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

**கெட்டியான தேங்காய் பால் – 2 டேபிள் ஸ்பூன்

**உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு:

சோம்பு – 1/2 டீஸ்பூன்., பட்டை – 1/4 இன்ச்., கிராம்பு – 2., பிரியாணி இலை – 1 கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – 2 டீஸ்பூன்..

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டன் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும். பின்பு அதில் சிறிது தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

அதன்பின்னர், வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் மீதமுள்ள மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மட்டனில் உள்ள தண்ணீர் வற்றியதும், அதில் தேங்காய் பால் சேர்த்து, தேங்காய் பாலும் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கினால், மதுரை மட்டன் சுக்கா ரெடி!!