Home சமையல் குறிப்புகள் மட்டன் கீமா புலாவ்

மட்டன் கீமா புலாவ்

25

26-soyapulaoமட்டன் வகை உணவுகளில் தனி ருசி இந்த மட்டன் கீமா புலாவ். இதன் அட்டகாச ருசியில் சாப்பிடும் போது நீங்களே அளவு தாண்டி விடுவீர்கள். செய்து பார்த்து ருசிப்போமா?

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – 2 கப்
கொத்துக்கறி – 300 கிராம்
தயிர் – 2 கப்
வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
லவங்கம் – 6
ஏலக்காய் – 8
மிளகு – 1/2 டீஸ்பூன்
பாதாம் – 1/4 கப்
பிஸ்தா – 1/4 கப்
காய்ந்த திராட்சை – 1/2 கப்
குங்குமப்பூ – 1/2 டீஸ்பூன்
நெய் – 5 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 5 டேபிள் ஸ்பூன் நெய் விடவும். நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் மிளகு, ஏலக்காய், லவங்கம், தயிர், இஞ்சி பூண்டு விழுது, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ், குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கொத்துக்

கறியை சேர்த்து வதக்கவும். போதுமான உப்பு சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் கறியை வேக விடவும்.

பிரஷர் போனதும் திறந்து பாசுமதி அரிசியை சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.

மட்டனும் அரிசியும் வெந்ததும் மூடியைத் திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவை பரிமாறவும். இதே முறைப்படி கொத்துக்கறிக்கு பதிலாக மட்டன் அல்லது சிக்கன் சேர்த்தும் மட்டன் புலாவ், சிக்கன் புலாவ் செய்யலாம்.