Home இரகசியகேள்வி-பதில் பெண்ணிற்கு பெண் மேல் செக்ஸ் ஆசை வருமா??

பெண்ணிற்கு பெண் மேல் செக்ஸ் ஆசை வருமா??

32

என் தோழியின் பிரச்னைக்கு தீர்வு வேண்டி, இக்கடிதம் எழுதுகிறேன்.

என் தோழிக்கு திருமணமாகி, 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது; அவள் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவளும் டிகிரி முடித்து, ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக

பணியாற்றுகிறாள். பெண்களைப் பார்த்து, பெண்களே மயங்குவ து கடினம். ஆனால், என் தோழி, பெண்களை விரும்புகிறாள். எல்லாப்பெண்களையும் இல்லை; சில குறிப்பிட்ட பெண்களை மட்டும்.

அவள் பள்ளியில் படிக்கும் போதே இப்படித்தான். ஏதா வது ஒரு பெண்ணை பிடித்து இருந்தால், அவளிடம் மிகுந் த அன்புடன் பழகுவாள். பின், அந்த அன்பு அவளுக்குள் விபரீத எண்ணத்தை ஏற்படுத்தி விடும். அதன் காரணமாக, அந்த பெண்ணை அனுபவிக்க எண்ணுவாள். ஆனால், இதுவரை அப்படி யாரிட மும் நடந்துகொண்டதில்லை. தொட மட்டுமே செய்வாள்; மற்ற படி வேறுஎதுவும் நடந்ததில்லை.

இந்த மாதிரி எண்ணம் அவளுக்கு இருக்கிறது என்று, அவள் கணவ ருக்கும் தெரியும். ஆனால், அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள் ளவில்லை. அவரும் இவள் மேல் அன்பாகத் தான் இருக்கிறார்.

என் தோழிக்கு இப்போது தான், தன் எண்ணம் தவறு என்று தோன்றுகிறது. இதனால், மிகவும் மனம் வேதனைப்படுகிறாள். தான் ஆணா, பெண்ணா என்றே குழ ம்புகிறாள். அவள் மன வேதனைக்கு, என்னால் தீர்வு சொல்ல இயலவில்லை.

யோகா செய்து, மனதை கட்டுப்படுத்துகிறாள். ஆனாலும், அவள் எண்ணம் திடீரென்று மாறி விடுகிறது. இதற்கு தீர்வு காண, மன நல மருத்துவரை அணுகவும் பயமாக இருக்கிறது. என்னிடம் முத லில் அப்படித்தான் இருந்தாள். இப்பொழுது அப்படி இல்லை. கார ணம், அவளை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

இப்பொழுது அவளின் பிரச்னை, எல்லாவற்றையும் என்னிடம் கூறியதால், என்னை வேறு மாதிரியாக நினைக்க அவளால் இய லவில்லை. என்னை தோழியாக மட்டுமே நினைக்கிறாள். அவ ளுக்கு இருப்பது பெண் குழந்தை. தன்னுடைய நடத்தையால், தன் குழந்தைக்கும் இம்மாதிரியான எண்ணம் வந்துவிடுமோ என்று பயப்படுகிறாள். அவளை எப்படி மாற்றுவது? இதற்கு தீர்வு சொல் லுங்கள்…

பின்குறிப்பு: அவள் மற்ற விஷயங்களில் நேர்மையாகத் தான் இருப்பாள். குடும்பத்தை சந்தோஷமாக நடத்துவது, பக்கத்தில் இருப்பவர்களிடம் சகஜமாக பேசுவது என்று, எல்லா விஷயத்தி லும் சரியாகத் தான் இருக்கிறாள்.

— இப்படிக்கு,
அன்பு மகள்.

பதில் :

அன்புள்ள மகளுக்கு —

உன் தோழியின் பிரச்னைக்கு வருவோம்.

*’ஆணா, பெண்ணா என்று குழம்புகிறாள்…’ என்று, எழுதியிருந் தாய்; கவலை வேண்டாம். அவளுக்கு, 5 வயதில் பெண் குழந்தை இருப்பதால், அவள் பெண்தான்.

ஒருசில குறிப்பிட்ட பெண்களையே விரும்புகிறாள் என்றால், அவர்களுடைய குணநலன்கள் பிடித்திருக்கலாம். தனித்து வாழ விருப்பம் இல்லாமல், மற்றவர்களுடன் கூடி இருப்பதை விரும்பு கிறவளாக உன்தோழி இருக்கிறாள். எல்லா பெண்களும், ஒரே மாதிரியாக தங்களின் அன்பை வெளிப்படுத்த மாட்டார்கள். அதிக மாக அன்பு செலுத்துவது, உன் தோழிக்கு பழக்கமாய் இருக்கிற து.

* ‘இதுவரை அப்படி யாரிடமும் நடந்து கொள்ளவில்லை. ஆனா ல், ஒரு பெண்ணை அனுபவிக்க எண்ணுகிறாள்…’ என்று கூறியி ருக்கிறாய். இதை, ‘செக்சுவல் பேன்டசி’ என்பர். இத்தகையோர் தங்களுடைய ஆசைகளை வேறுவிதமான சில்மிஷ விளையாட் டுகளினால் திருப்திப்படுத்திக் கொள்வர். நீயே குறிப்பிட்டது மாதிரி தொடவும், குழந்தையாக இருந்தால், கன்னத்தில் முத்தமி ட்டு, கட்டி அணைத்து தங்கள் ஆசைகளை, நிறைவேற்றிக் கொ ள்வர்.

இது எல்லையை தாண்டும் வரை, பிரச்னை இல்லை. அப்படி கிடைக்காத பட்சத்தில், சமுதாய வரைமுறைகளையெல்லாம் புறக்கணித்து, வேறு நபரிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆசை பட்டால், அவளது நடத்தையை குறை சொல்லி, பலர் அவளை அனுபவிக்க நினைக்கலாம். இது, அப்பெண்ணின் வாழ்கையை மட்டுமல்ல, அவளின் பெண் குழந்தையின் எதிர்காலத்தையும் பாதிப்படையச் செய்யும்.

மனநல மருத்துவரிடம் செல்ல பயம் வேண்டாம். ஆண் மனநல மருத்துவரிடம், இதை பற்றி சொல்ல தயக்கமாக இருந்தால், பெண் மனநல மருத்துவரை தாராளமாக அணுகலாம். அரசு மரு த்துவமனைகளில் இலவசமாக சிகிச்சையும், மனநல ஆலோச னைகளும் தருகின்றனர்.

மனதை ஒருநிலைப்படுத்த, உடலை ஆரோக்கியமாக வைத்திரு க்க யோகா அவசியம் தான். அத்துடன், மனநல ஆலோசகரின் உத வியை பெறுவதன் மூலம், திடீரென்று வரும், ‘அந்த மாதிரியான’ எண்ணங்களை, படிப்படியாக குறைக்கலாம்.

‘கணவனின் துணையோடுதான் காமனை வென்றாக வேண்டு ம்…’ என்கிறார் கவிஞர் கண்ணதாசன். உன் தோழியிடம் இதை, விளக்கிச் சொல். உன் தோழிக்கு வந்திருப்பது, ‘செக்ஸ் கனவுக ள்’தானே தவிர, பயப்படும் மாதிரி வேறு ஒன்றுமில்லை. அவளிட ம் நீ அன்பு செலுத்தி, அரவணைத்து, முடிந்தால், நல்ல மனநல ம ருத்துவரின்உதவியால், சாதிக்கும்பெண்ணாக அவளை மாற்று.

இவை யாவும் தோழியாகிய உன்னிடம் தான் இருக்கிறது. உன் னால் செய்து காண்பிக்க முடியவில்லை என்றால், வேறு யாரால் செய்ய முடியும்?
கேள்வி:
அன்பு சகோதரிக்கு —
திருமணத்தை எதிர்நோக்கியுள்ள, 28 வயது பெண் நான்; உடலுறவு தொடர்பான விஷயத்திற்கு பய ப்படுகிறேன். காரணம், கல்லூரியில் படிக்கும் போது, சக மாணவியர் செக்ஸ் பற்றி பேசுகையில், இவ்விஷயம் பெண்ணுக்கு ரொம் பவும் கஷ்டம் என்றும், வலி ஏற்படும் அப்படி, இப்படி என்று,
பயமுறுத்தும் விதமாக பேசுவர்.
வயதுக்கு மீறிய உடற்கட்டுடன் இருக்கும் நான் மிகவும் கவனமாக இருக்க விரும்புபவள் ;இருமுறைகாதல் வலை வீசப்பட்டும் அதில் அகப் படாமல் தப்பித்திருக்கிறேன். காரணம் கணவனை மட்டுமே காதலிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள் நான்.
என் நெருங்கிய உறவினர் ஒருவர் நான் தனிமையில் இருக்கும் போது அடிக்கடி வந்து பேசுவார். அப்போது அவர் பார்வையில் தென்படும் விரசத்தை கவனித்து நழுவி விடுவேன்.
ஆனால் அவரது மனைவி பிறரிடம் என்னைப் பற்றி பேசும் போது ‘இவ எப்படிப்பட்டவ தெரியுமா… சேலயே உடுத்த மாட்றா… மாடர்ன் டிரஸ் போட்டுக் கிட்டு அலட்டறா… என என் காது பட பேசுகிறார். என்னை எப்போது பார்த்தாலும் முகத்தை ‘கடுகடு ‘வென வைத்துக் கொள்வதுடன் நான் என்ன செய்தாலும் கிண்டல் செய்கிறார்.
அவரின் இத்தகைய செயல் எனக்கு மனக் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. உறவினர்களின் விசேஷங்களில் இவர்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதால் இவர்களை தவிர்க்கவும் முடியவில்லை. இப்பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?
மிகவும் அமைதியான சுபாவம் உடைய நான் நல்ல கணவனை எதிர்பார்க்கிறேன். ஆனால் என் உறவினர் நண்பர் வட்டத்திற்குள் உள்ள ஆடவ ர்களில் ஒருவர் கூட மனைவியை பிரியமாய் நடத்துவதாக தெரியவில்லை. எல்லாருமே மனைவிமீது தங்கள் அதிகாரத்தைச் செலுத்துபவராக உள்ளனர். என் தந்தைகூட அப்படி த்தான்.
என் எதிர்பார்ப்பால் தானே இத்தனை சங்கடங்கள்… இந்த எண்ணங்களை அழிப்பது எப்படி?
எனக்கு நல்ல வழிகாட்டுங்கள் ப்ளீஸ்.

பதில் :
அன்பு சகோதரி—
தங்கள் பிரச்னையை புரிந்து கொண்டேன். முதல் பிரச்னை உன் மனம் சம்பந்தப்பட்ட பிரச்னையே தவிர உடல் சம்பந்தப்பட்டது அல்ல. இளம்பருவத்தில் உன்னிட ம் மிகத் தவறான கருத்துகளும் சினிமா உதாரணங்களும் சொல்லப்பட்டு இருக்கின்றன. நீ நினைப்பது போல ‘செக்ஸ்’ அவ்வளவு வலியை தரக் கூடியது அல்ல.
ஆனால் அது பற்றிய பயமோ கவலையோ உனக்கு அதிகமாக இருந்தால் அருகில் இருக்கும் மகப்பேறு மருத்துவரிடம் சென்று உண்மைகளை விவரமாக எடுத்துக் கூறினால் அவர்கள் ஆலோசனையும வழிகாட்டுதலும் கூறுவர்.
இரண்டாவது பிரச்னை அழகாக டிரஸ் செய்து கொள்வதால் சொந்தக்காரரின் மனைவி உன்னை கிண்டல் செய்வதாக எழுதியிருந்தாய்.
விதவிதமான ஆடை அணி கலன்களை அணிய பெண்கள் விரும்புவது இயல்பே! நீ கூ றியிருப்பது போல வயதிற்கு மீறிய உடற் கட்டுடைய நீஇ ஆடைஇ அணிகலன்ளை அணியும் போதுஇ இன்னும் ‘ஸ்மார்ட்’ ஆக இருக்கிறாய் போலும். அது மற்ற வர்களின் கண்க ளைஇ ஏன் பெண்களின் கண்களையே உறுத்துகிறது. நீ அப்படி ‘ஸ்மார் ட்’டாக இருப்பது இறைவன் உனக்கு தந்த கிப்ட்!
இருமுறை காதல் வலை வீசப்பட்டும் அதிலிருந்து தப்பித்திருக்கிறாய் என்றால் உன் மன உறுதியையும் ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்று பேசும் முறையை என்னால் உணர முடிகிறது. அப்படிப்ப ட்ட பெண் ஏன் மற்றவர்களின் கிண்டல்களை சமாளிக் கவோஇ ‘டேக் இட் ஈஸி’யாக எடுத்துக் கொள்ளவோ முடியவில் லை?
சகோதரி நீ செய்யும் காரியம் சரி என்று உனக்கு தெரிந்தால் அதை தைரியமாக செய்; ஆனால் செய்த காரியத்திற்காக மனம் வருந்தக் கூ டாது. அதுதான் பின்னால் பிரச்னை வளர வித்திடும். நீ நீயாகவே இரு; பிறரைப் பற்றி அவர்கள் அடிக்கும் கிண்டல்க ளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
‘ஆடவர் ஒருவர்கூட தங்கள் மனைவியை பிரியமாய் நடத்தியதாக தெரியவில்லை… எல்லாருமே தங்கள் அதிகாரத்தை செலுத்து பவராக உள்ளனர்; – என் தந்தை உட்பட.’ என்று கூறியிருக்கிறாய்.
நடைமுறைக்கு ஒத்துவராத எதிர்பார்ப்புகள் உனக்கு அதிகம் இருப்பதையே இது காட்டுகிறது; ஆண்கள் உலகத்தை கலர் கண்ணாடி அணிந்து பார்ப்பதை தவிர். ‘ஆண்களே இப்படித்தான்…’ என நினைக்கும் நினைப்பை மாற்றிக்கொள்.
குறைகளும் நிறைகளும் ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது; இத்தனைசொல்கிறாயே ஏன் உன்னிடம் குறை என்று எதுவுமே இல் லையா… யோசி. மனிதர்களிடம் இருக்கும் நல்லனவற்றை நேசி; அப்போது தான் மனதிற்கு அமைதியும் சந்தோஷமும் கிடைக்கும். ஆண்கள் பற்றிய உன் தேவையில்லாத பயத்தை தூக்கி எறிந்து மன மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொள்.
உன் திருமண வாழ்க்கை நல்ல படியாக அமைய