Home வீடியோ தாய்ப்பால் சுரக்க இதையெல்லாம் செஞ்சு பாருங்க

தாய்ப்பால் சுரக்க இதையெல்லாம் செஞ்சு பாருங்க

35

தாய்ப்பால் குறைவாக இருப்பது குழந்தைக்கும் தாய்க்கும் சேர்த்தே தொல்லை. ஆரோக்கியமான உணவை, முறையாக சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், தாய்ப்பால் குறையும்.

1. அம்மான் பச்சரிசிக் கீரையின் பூக்களை (50 கிராம்) நன்றாக அரைத்து பாலில் கலந்து குடித்தால் 3 நாள்களில் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

2. பிஞ்சு நுால்கோலைச் சமைத்து, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அடிக்கடி கொடுத்தால் பால் அதிகமாக சுரக்கும்.

3. பால் சுரப்பு குறைவாக உள்ள பெண்கள், மார்பகங்கள் மீது பாகல் இலையை அரைத்துப் பற்றுப்போட்டால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

4. ஆலமர விதையையும், ஆலமர கொழுந்து இலையையும் சம அளவு எடுத்து அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்தால், தாய்ப்பால் பற்றாக்குறை தீரும்.

5. சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரில் பசும்பாலைக் கலந்து சிறிது கற்கண்டையும் சேர்த்துக் குடித்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.

6. தினசரி உணவுடன், பப்பாளிப் பழம் சாப்பிடுவதுடன் பப்பாளிக் காயையும் சமைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

7. அதிகமான பால் சுரப்பு உள்ள பெண்கள், தாய்ப்பால் தேவையில்லாதபோது, மார்பகங்கள் மீது மல்லிகைப் பூக்களைச் சுற்றிக் கட்டிக்கொண்டால், பால் சுரப்பு குறையும்.