Home பெண்கள் தாய்மை நலம் தாய்ப்பால் நிறுத்தும் முறை

தாய்ப்பால் நிறுத்தும் முறை

24

மூன்று வயது வரை நல்ல உணவோடு தாய்ப்பாலும் கொடுக்கலாம் என்றாலும் 2 வயது வரை தாய்ப்பால் கொடுத்தாலே அதிர்ஷ்டம் எனக்கூறவேண்டியுள்ளது. தாய்ப்பாலை நிறுத்தவும் சட்டென முடியாது. குழந்தை அழும். அடம்பிடிக்கும். ஏங்கும்.

எனவே உணவின் அளவினை சற்று கூட்டுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் எண்ணிக்கையும் அளவையும் குறையுங்கள். விளையாட்டில் கவனத்தினை திருப்புங்கள். இக்கால கட்டத்தில் விளையாட்டே குழந்தைக்கு முக்கியமாய் இருப்பதால் எளிதில் தாய்ப்பாலை மறந்து விடும்.

அதைவிட்டு அடிக்கவோ கடும் சொல் கூறவோ செய்யாதீர்கள். ஒரு வயது வரை குழந்தைகளுக்கு பசும்பால் வேண்டாம். தாய்ப்பால் கொடுக்க முடியாவிடில் மருத்துவரால் சிபாரிசு செய்யப்படும் வகையினை சரியான அளவில் கலந்து கொடுக்கலாம்.

ஏனெனில் ஒரு வயது வரை குழந்தை பசும்பாலினை செரிக்கும் திறன் மிகவும் குறைந்தது. அலர்ஜி, இரத்த சோகை, வயிற்று வலி, வயிறு உப்பிசம் போன்றவை ஒரு வயதிற்குள் பசும் பால் கொடுக்கும் பொழுது ஏற்படலாம்.

ஒரு வயதிற்குப்பிற்கு குழந்தைக்கு 100 மில்லி முதல் சிறிது சிறிதாக பசும்பால் கொடுக்கலாம். பசும்பாலில் நல்ல புரதம், லக்டோஸ், வைட்டமின் பி வகைகள், ஏ,டி, ஸிங்க் போன்றவை உள்ளன. குழந்தை வளரும் பொழுது இவை தேவைப்படுகின்றன. இதனை ஒரு வயதிற்குப் பிறகு கூட்டிக் கொண்டே வரலாம்.