Home பெண்கள் அழகு குறிப்பு தலையில் உண்டாகும் கொப்புளங்களுக்கு தீர்வு !!

தலையில் உண்டாகும் கொப்புளங்களுக்கு தீர்வு !!

32

தலையில் உண்டாகும் பொடுகு, வறட்சி , அரிப்பு போலவே, பருக்கள் போல் கொப்புளங்கள் உண்டாகும். அவற்றை குனப்படுத்த இயற்கை வழியில் எப்படி சிகிச்சை தரலாம் என்பதன் கட்டுரை இது.

அதிக சூட்டினால் அல்லது வியர்வையினால் பருக்கள் போன்ரு தலையில் எழுவதுண்டு. முகப்பருகக்ள் போல் தலையிலும் உண்டாகும். இது கிருமிகளினாலும், அதிக வெப்பத்தினாலும் உண்டாகக்கூடியது.

வேப்பிலை நீர் : வேப்பிலை கைப்பிடி எடுத்து நீரில் கொதிக்க விடுங்கள். பின்னர் ஆறியதும் வடிகட்டி அந்த நீரினால் அலசினால் அந்த பருக்கள் மாயமாகிவிடும். வாரம் 3 நாட்கள் செய்தால் போதும். விரைவில் பலன் தெரியும்.

வெந்தய இலை : வெந்தய இலை குளிர்ச்சி தரும். சூட்டினாலும் வரும் கொப்புளங்களை ஆற்றும். வெந்தய இலையை நீர் சேர்த்து அரைத்து அதனை தலையில் தேய்க்கவும். காய்ந்த்தும் தலைமுடியை அலசுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெய் : ஆலிவ் எண்ணெய் கூந்தலுக்கு தேவையான அளவு எடுத்து அதனுடன் சில துளி தேயிலை மர எண்ணெயை கலந்து தலையில் தேய்க்கவும். மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.

பட்டை மற்றும் தேன் : கால் கல் பாலில் தேன் 1 ஸ்பூன் மற்றும் அரை ஸ்பூன் பட்டைப் பொடியை கலந்து முகத்தில் தேய்க்கவும். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசுங்கள்.

எலுமிச்சை மற்றும் நீர் : எலுமிச்சை சாறை எடுத்து அதில் நீர் சேர்த்து தலையில் த்டவுங்கள். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேட்ணும். வாரம் ஒருமுறை செய்தால் போதும்