Home ஆண்கள் ஆண்குறி ஆணுறுப்புப் பாதுகாப்பு முறை

ஆணுறுப்புப் பாதுகாப்பு முறை

54

உடலுறவுக்குப் பின் ஆழ்ந்த உறக்கம் தேவை.

பொதுவாகவே இரவில் உடலுறவு கொள்வது தான் சிறந்தது. ஏனெனில் உடலுறவுக்குப் பின் ஆண்பெண் இருவருக்குமே ஆழ்ந்த உறக்கம் தேவை.காரணம் உடலுறுப்புப் பகுதிக்கு ஆகிசிஜனேற்றம் கொண்ட ரத்த ஓட்டம் மிக மிக அவசியம். அது ஆழ்ந்த உறக்கத்தில் தான் கிடைக்கிறது. இரவில் எத்தனை முறை உடலுறவு கொண்டாலும் உடனே ஆழ்ந்த உறக்கம் கொள்ளுவதால் இந்த ஆகிச்ஜனேற்றம் பெற்ற ரத்தவோட்டம் மிகுகிறது.

இதனால் ஆணுறுப்பின் எழுச்சியும் பெண்ணுறுப்பின் கிள்டோரிஸ் எழுச்சியும் அதிகப்படுகிறது. அடுத்த நாள் உறவு கொள்ளும் போது புத்துணர்ச்சி பெற்று மீண்டும் எழுச்சிக்கு இந்த ஆழ்ந்த உறக்கம் அதிக உறுதுணை செய்கிறது.

எனவே இந்த டிப்ஸை எப்போதும் மறவாதீர்கள்.

ஒருசிலர் பகலில் உடலுறவு கொள்ள நேரிடுகிறது. குடும்பச்சூழல் காரணமாகவும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகும் சில நேரங்களில் இது தவிர்க்க முடியாததாகிறது..

அவர்களுக்கும் எனது அறிவுரை என்ன என்றால் குறைந்த பட்சம் அரைமணி நேரமாவது உடலுறவுக்குப் பின் உறங்கி எழுவது பயன் தருவதாகும்.

 

நீண்ட நேர விறைப்புக்கு சிகரெட்டை தவிர்ப்பது சிறந்த வழி.

ஆராய்ச்சிகள் கூறுவது என்ன என்றால் புகைப்பழக்கம் இல்லாதவர்களின் விறைப்பு நேரத்திற்கும் புகைப்பழக்கம் உள்ளவர்களின் விறைப்பு நேரத்திற்கும் கணிசமான வேறுபாடு உள்ளது என்பதே.

புகைப்பழக்கம் அதிகரிக்க அதிகரிக்க விறைப்புத்தன்மையும் குறைகிறது என்பதே ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து தெளிந்த உண்மை.

மேலும் புகைப்பழக்கம் இருந்தவர்கள் அதை விட்டொழிந்த ஒரே மாதகாலத்தில் விறைப்புத்தன்மையின் நேரம் கணிசமாக அதிகரித்ததையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

எனவே இல்லறசுகம் வேண்டுவோர் புகைப்பிடித்தலைத் தவிர்ப்பதே சிறந்த வழியாகும்.

ஆணுறுப்பின் மொட்டுப்பகுதி மிக மிக மென்மையானது.

ஆணுறுப்பின் மொட்டுப்பகுதியும் பெண்ணுறுப்பின் கிளிடோரிஸும் ஒரே வகையான திசுக்களாலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணர்விழைகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

இந்த மொட்டுப்பகுதி கடினமான தாக்குதலையும் கரடுமுரடான பொருளின் மேல் உராய்தலையும் சந்தித்தால் அப்பகுதியில் உணர்வுகள் இழப்பதோடு corposa cavernosa, the elongated “erectile chambers” எனப்படும் விறைப்புத்தன்மைக்கு காரணமான ரத்தக்குழாய் திசுக்கள் பாதிப்படைந்து விறைப்பு நிலை பாதிக்கப்படுகிறது.
மேலும் அந்தப்பகுதியில் ரத்தக்கட்டும் ரத்தக்கசிவும் மிகவும் ஆபத்தானது. எதேச்சையாக அடிபட்டாலோ ரத்தக்கசிவு நேர்ந்தாலோ 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை மேற்கொள்ளப்படாவிட்டால் ஆண் உறுப்பு சிதைந்தும் செயலற்றும் போக வாய்ப்பு இருக்கிறது. அதைப் பெட்டகம் போல் பாதுகாக்க வேண்டியது மிக அவசியம்.
ஒருசிலர் உடலுறவின் போது மிக மிக வேகமாக பெண்ணுறுப்புக்குள் இயங்குவார்கள். அச்சமயத்தில் பெண்களின் pelvic bone. எனப்படும் இடுப்பெலும்பு கூடும் இடமான பகுதியில் மிகுந்த பலமான தாக்குதலை மேற்கொண்டுவிட வாய்ப்பு இருக்கிறது. இதனாலும் ஆணுறுப்பு மொட்டு சிதைய வாய்ப்பிருக்கிறது.
பெண் ஆணின்மேல் இருந்து இயங்கும் போது இந்த தாக்குதல் நடக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதால் அந்த சமயத்தில் மிகுந்த கவனம் தேவை.
நிதானம் இந்த விஷயத்திலும் தேவைதானே..?
நடைப்பயிற்சியும் விறைப்புத்தன்மையும்.

தினந்தோறும் 20 நிமிடங்கள் அல்லது 2 கிலோமீட்டர் தூரம் நடப்பதால் ஆண் தன்மை அதிகரித்து விறைப்புத்தன்மை அதிகரிப்பதாக செக்ஸாலஜிஸ்ட்கள் கருதுகிறார்கள். இதை ஆய்விலும் நிரூபித்து இருக்கின்றனர்.

In one study, researchers found that men who walked just two miles a day had half the rate of erection problems of more sedentary men, says Goldstein.
வாங்க தினமும் 2 கிமீ நடப்போம்.. விறைப்பில் வாகை சூடுவோம்..
சர்க்கரை நோயும் விறைப்புத்தன்மையும்

ரத்தத்தில் சுகர் இருப்பவர்களுக்கு ஆண்மைத்தன்மை பறிபோகிறது. ரத்தத்தில் க்ளுகோசின் அளவு அதிகரிப்பதால் ஆர்ட்டிரியல் நோயை அதிகரிப்பதோடு உணர்வுகளைக் கூட்டும் நரம்புகளைப் பாதித்து விறைப்புத்தன்மை கணிசமாகக் குறைகிறது.

தக்க நேரத்தில் பரிசோதனையும் ரத்தத்தில் க்ளூகோஸ் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதும் இந்தப் பிரச்சினையைக் குறைக்கும்.

35 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருமே ரத்தத்தில் சுகர் அளவை பரிசோதித்து தக்க மருந்தை உட்கொள்வது இந்நிலையைத் தவிர்க்கும்.
ஆயில் மசாஜ்

தினமும் ஒருமுறை குறைந்தது இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஆலிவ் ஆயில், அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு ஆணுறுப்பை உருவிகொடுப்பதால் ஆண்குறிக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து புத்துணர்வை தருகிறது.