Home பாலியல் கட்டில் அறையில் பெண்களுக்கு பிடிக்காத தாம்பத்திய உறவு

கட்டில் அறையில் பெண்களுக்கு பிடிக்காத தாம்பத்திய உறவு

280

பெண்கள் பாலியல்:தாம்பத்திய உறவில் ஈடுபடும் ஆண்-பெண் இருவரும் உச்சம் அடைவதில் அவர்களின் ஆசைகளும் அடங்கியிருக்கிறது. இதில், ஆண்கள் உடல் ரீதியாகவும், பெண்கள் ஆசை ரீதியாகவும் உச்ச நிலையை எட்டுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலுறவை பொறுத்தவரை ஆண்கள் ஆபாச படங்களை பார்த்து பலான ஆசைகளை மனதில் வைத்திருப்பார்கள். ஆனால், உடலுறவில் தயக்கம் காட்டுவது பெண்களின் இயல்பு. ஆகவே, உடலுறவின்போது ஆண்கள் சில விஷயங்களில் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஆண்கள் பல்வேறு நிலைகளில் உடலுறவில் ஈடுபட விரும்புவர்கள். ஆனால், பெண்கள் ஒருசில நிலைகளில் ஈடுபடுவதை அசிங்கமாகவும், தவறாகும் நினைப்பார்கள். இதைப் புரிந்துக் கொண்டு பெண்களை நெருங்குவது நல்லது.

வெளிநாடுகளில் செக்ஸ் பொம்மைகளின் பயன்பாடு அதிகம். ஆனால், இந்திய, இலங்கை பெண்களிடையே செக்ஸ் பொம்மைகள் அவ்வளவு பிரபலம் இல்லை. சில ஆண்கள் இதை பயன்படுத்த முற்படும் போது பெண்கள் அதனை அவமானமாக கருதுகிறார்கள்.

உடலுறவின் போது பெண்களை உச்சமடைய செய்கிறேன் என கருதி, ஆபாசமாக பேசுவது, ஆபாச படங்களை காண்பிப்பது, பெண்களின் எண்ணத்தை திசைத்திருப்புவதுடன் உடலுறவின் மீதான ஈடுபாட்டையும் அது குறைக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உடல் துர்நாற்றம் என்பது இயல்பான ஒன்று தான். வியர்வை சுரப்பி அதிகமாக சுரக்கும் பட்சத்தில் அவர்கள் குளித்து விட்டு உடலுறவுக் கொண்டாலும் துர்நாற்றம் வரும். இதில், பெண்கள் தாம்பத்தியத்தின் போது தங்களிடம் இருந்து துர்நாற்றம் வெளிப்படுவதை அவமானாக கருதுவதாக கூறப்படுகிறது.

அதேபோல், உடலுறவுக்கு பெண் சம்மத தெரிவித்துவிட்டால், வெட்ட வெளிச்சமாக இருந்தாலும், இருட்டாக இருந்தாலும் ஆண்கள் இடத்தை பற்றி கவலைப்படமாட்டார்கள். ஆனால், 70% பெண்கள் இருட்டில், தனியறையில், அந்தரங்கமாக இருக்க வேண்டும் என்று கருதுவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

சில ஆண்கள் உடைகளை அகற்றிய நிலையில், தாம்பத்தியத்தில் ஈடுபட விரும்புவார்கள். கிராமப்புற பெண்கள் மட்டுமல்ல, சில நகர்ப்புற பெண்களும் கூட இதனை அருவருப்பாகவும், சங்கடமாகவும் கருதுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.