Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பம் அடைந்த பெண்ணை கட்டில் உறவுக்கு அழைக்கலாமா?

கர்ப்பம் அடைந்த பெண்ணை கட்டில் உறவுக்கு அழைக்கலாமா?

475

தாய் நலம்:கர்ப்பகால துன்பங்களை விட பெரிய துன்பம் கணவன் ஏமாற்றுவதுதான் என்கின்றனர் பெண்கள். குடும்ப வாரிசை சுமந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணை ஆண் ஏமாற்றுவது என்பது பாவம். கணவன் ஏமாற்றுவது தெரிந்தால் பெண் மனமுடைந்து போவதோடு கருவிற்கு பாதிப்பு ஏற்படும் என ஆய்வுகள் கூறுகின்றன.

கர்ப்பகாலத்தில் ஆண்கள் நாட்டம் குறைய பெண்களால் ஆண்களை இந்த நேரத்தில் திருப்திபடுத்த முடிவதில்லை என்பதே முக்கிய காரணம். ஏழு முதல் ஒன்பது மாதம் வரை பெண்களின் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களால், உடல் எடை அதிகரிக்கிறது வெளி தோற்ற அழகில் மட்டுமன்றி மனரீதியான மாற்றங்களாலும் உடலுறவில் நாட்டமும் குறைந்து கணவனை திருப்திப்படுத்த முடியாத நிலையை அடைகின்றனர்.

ஆண்களில் மூன்று வகை

முதல் வகை – தங்களது மனைவியின் மீது காதல் அன்பு, அக்கறை கொண்டிருப்பார்கள் திருமண பந்தம் காதல், விட்டுக் கொடுத்து செல்லுதல், புரிதல், உடலுறவு கொள்ளுவது போன்ற அனைத்தும் அடங்கியது. உடலுறவு மட்டுமே திருமண வாழ்க்கை கிடையாது. இதனை புரிந்து கொண்டவர்கள் இவர்கள். மனைவியின் மீதும் கருவில் உள்ள குழந்தையின் மீதும் அதீத அன்பை காட்டுவார்கள். வயிற்றில் வளரும் குழந்தையை துன்புறுத்த கூடாது என்று நினைப்பதால் உடலுறவையும் தவிர்ப்பார்கள் (கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்காது). மனைவிக்கு உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உதவிகரமாக இருப்பார்கள்.

மன ரீதியாக கர்ப்ப கால உடலுறவு ஒரு பெண்ணுக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுதலை அளிக்கிறது கணவனின் ஒத்துழைப்பு கிடைத்துவிட்டால் பிரசவம் ஒரு பெண்ணுக்கு, மகிழ்ச்சியாக அமைவதோடு மட்டுமன்றி, திருமண வாழ்க்கையும் இன்பமாக இருக்கும்.

இரண்டாம் வகை- சுயநலம்

இந்த வகை ஆண்களுக்கு தேவையானது எல்லாம் உடலுறவு மட்டும் தான். மனைவி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போதும், வாந்தி எடுத்து சிரமப்படுவது பற்றியும் சற்றும் கவலை கொள்ள மாட்டார்கள். மனைவியின் கர்ப்ப கால பிரச்சனை குறித்து விசாரித்துக் கூட தெரிந்து கொள்ள மாட்டார்கள். இவர்களிடத்தில் அன்பையும், அக்கறையையும், நேர்மையையும் எதிர்பார்ப்பது வீண்!

மூன்றாம் வகை : மனைவி கர்ப்பமாக உள்ள காரணத்தில் தங்களது உடலுறவு சார்ந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வார்கள். மனைவிக்கு கர்ப்ப காலத்தில் உறுதுணையாக இருப்பார்கள். கர்ப்ப காலம் பற்றி எப்படி இருக்கும் என்பது பற்றி தெரியாமல் இருந்தாலும் கூட, கர்ப்பமாக இருக்கும் போது, என்னென்ன மாற்றங்கள் உடலில் நிகழும், அதை எதிர்கொள்வது எப்படி, கணவனாக தான் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வார்கள். தனது மனைவியின் உடலில் உண்டாகும் மாற்றங்களை கூட இதுவும் ஒருவித அழகு தான் என்று நினைப்பார்கள்.

சிறந்த தந்தை

குழந்தை பிறந்த பிறகு குழந்தையை பராமரிக்க நேரம் ஒதுக்குவார்கள். மிகச்சிறந்த தந்தையாக இருப்பார்கள். தான் ஆண் என கூறிக்கொண்டு குழந்தையை கவனிக்கும் பொறுப்பை பெண்ணிடமே விட்டுவிடாமல், தானும் குழந்தையை பராமரிப்பதில் மனைவிக்கு உதவுவார்கள்.