Home பெண்கள் அழகு குறிப்பு முகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..!!

முகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..!!

19

பெரும்பாலான பெண்கள் தங்கள் முகத்தில், மற்றும் உடலில் உள்ள தழும்புகளை மறைய வைக்க மிகவும் சிரமப்படுகின்றனர். வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை உபயோகப்படுத்தி எளிய முறையில் தழும்புகளை நீக்கலாம். தழும்புகளை நீக்கும் எளிய முறையைப் பற்றி இப்பதிப்பில் அறியலாம், வாருங்கள் பெண்களே!

தழும்புகள் மறைய

உருளைக்கிழங்கை தோல் சீவி அரைத்து நன்றாக பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மேசைக்கரண்டி உருளைக்கிழங்கு சாறும் 2 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 2 மேசைக்கரண்டி முல்தானி மெட்டி கலந்து முகத்தில் பூசுங்கள். சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் ஒரு முறை இப்படிச் செய்வதால் தழும்புகள் மறைந்திடும்.

முகப்பூச்சு

உருளைக்கிழங்கை வேகவைத்து அதனை பேஸ்ட்டாக நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பூசினால் இயற்கை முகப்பூச்சு தயார். இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடங்களில் கழுவிவிடலாம்.

பரு அல்லது பருத் தழும்புகள் மறைய

முகத்தில் தோன்றும் பரு அல்லது பருத் தழும்புகள் இருந்தால் வேகவைத்த உருளைக்கிழங்கை அப்படியே முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள். தொடர்ந்து இப்படி ஒரு மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைத்திடும்.

நிற மாற்றத்தை சரி செய்ய..

உருளைக்கிழங்கை தோல் சீவி முகத்தில் அரைத்து முகத்தில் பூசினால் சூரிய ஒளியால் ஏற்படம் நிற மாற்றத்தை சரி செய்திடலாம். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம்.

சுருக்கங்களை தவிர்க்க…,

முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க, உருளைக்கிழங்கு பேஸ் ஒரு மேசைக்கரண்டி, தயிர் ஒரு மேசைக்கரண்டி மற்றும் ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்திடுங்கள் பின்னர் அதனை முகத்தில் பூசி நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.

கருவளையத்தை போக்க

கண்களைச் சுற்றி வரும் கருவளையத்தை போக்க, உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு மேசைக்கரண்டி தேன் கலந்து கண்களைச் சுற்றி தடவி, அது காய்ந்ததும் கழுவி விடலாம். இவை கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும்.

சரும பொலிவிற்கு

உருளைக்கிழங்கு அத்துடன் வெள்ளரி இரண்டு சேர்த்து அரைத்து முகத்தில் பூசினால் இயற்கை டோனர் போல செயல்படும். இதை வாரம் இரண்டு முறை செய்திடலாம். சரும பொலிவிற்கும் இது வழி வகுக்கும்.

தலைமுடி மிருதுவாக

உருளைக்கிழங்கின் தோலை தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும், பின்னர் அந்த தோலை எடுத்து விட்டு அந்த நீரைக்கொண்டு தலைமுடியை அலசினால் தலைமுடி மிருதுவாக இருக்கும்