Home உறவு-காதல் திருமணத்தின் பின்னர் சுவாரஷ்யம் வேண்டுமா !!

திருமணத்தின் பின்னர் சுவாரஷ்யம் வேண்டுமா !!

24

இன்றைய நவீன கால கட்டங்களில் கட்டாயமாகிப் போன பணிச்சுமை உள்ளிட்ட சில தவிர்க்க முடியாத சிக்கல்களில் சிக்கிக் கொள்வதும் , திருமணமானதும் குழந்தைகளைப் பெற்று விடுவதும் தம்பதியர் இடையே சின்னச் சின்ன ரொமான்ஸ் கூட செய்வதற்கு கூட நேரமில்லாமல் போகக் காரணமாகி விடுகிறது.

இதனால் சில நேரங்களில் வாழ்க்கையில் வெறுப்பும், வேதனையும்தான் மிஞ்சுகிறது. கிடைக்கும் சொற்ப நேரத்திலும் தம்பதியர் தங்களின் காதல் உணர்வுகளை உயிர்ப்பித்துக் கொள்வது அவசியம். அதற்காக சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்

காதலிக்கும் போதுதான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள டேட்டிங் போகவேண்டும் என்றில்லை. திருமணத்திற்குப் பின்னரும் உறவுப் பிணைப்பை அதிகரிக்க டேட்டிங் போகலாம் தப்பில்லை. துணையின் எண்ணங்களை, உணர்வுகளை புரிந்து கொள்ள அது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும்.