Home உறவு-காதல் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன?

லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன?

527

பெண்களின் ஓரினச்சேர்க்கையை லெஸ்பியனிஸம் என்கிறோம். ஆண்களின் ஓரிச்சேர்க்கையை ‘கே’ என்கிறோம். இந்த இரண்டையும் சேர்த்து பொதுவாக ஹேமாசெக்ஸ் என்று கூறுகிறோம். வெகு காலத்திற்கு இந்த ஓரினச்சேர்க்கையானது மனிதர்களுக்கு மட்டுமான ஒரு விசித்திர மனமாற்றம் என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள்.

ஆனால் இப்போது இந்த ஓரினச்சேர்க்கை வண்டு, ஆடு, குரங்கு மாதிரியான பல்வேறு விலங்குகளில் காணப்படுவதால் இது வெறும் மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு அல்ல என்பது புரிய வந்துள்ளது. ஆக பல ஜீவராசிகளும் ஓரினச்சேர்க்கை புரிகின்றனவே…ஏன் என்றால் இதற்கு ஒரே ஒரு காரணம் என்று எதையும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை.

மரபணுக்கள், சிசு வளரும் போது கர்ப்பப் பையினுள் ஊறும் ரசாயனங்கள், குழந்தையின் மூளையில் ஊறும் ஹார்மோன்கள் என்று பல காரணங்கள் இருக்கலாம். இது தவிர வளர்ப்பு முறை, அனுபவம், வாழ்க்கை, கல்வி போன்ற பல காரணங்களும் பாலியல் நடத்தையை நிர்ணயிக்கின்றன.

உதாரணத்திற்கு கருவில் இருக்கும் குழந்தையின் ஆண்பால், பெண்பால் மரபணுக்களின் எண்ணிக்கை மாறுவதால் பாலியல் தடுமாற்றங்கள் ஏற்படலாம். அதுபோக மரபணு சரியாக இயங்கினாலும் அது உற்பத்தி செய்ய வேண்டிய ஆண் மற்-றும் பெண்பால் ரசாயனம் சரியாக இயங்காவிட்டாலும் இந்த பிரச்சனை வரலாம்.

இது எல்லாமே சரியாக அமைந்தும் சிறு வயதிலேயே ஓரினச்சேர்க்கை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் இதுவே பிடித்து போவதால் அதிலே ஈடுபடுகின்றனர்.

ஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன? ht2394உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது. உச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவகாரத்திற்காக நீதிமன்றங்களை நாடுவதில்லை என்பதிலேயே நாம் இதனை நன்கு புரிந்து கொள்ளலாம்.

அதனால் சிற்றின்பம் என்ற காமத்தில், காதல் என்பதை கலந்து பேரின்பம் என்ற உச்சகட்டத்தை அடைவதே ஒவ்வொரு மனிதனின் வாழ்விற்கும் இன்பம் தரக்கூடியது ஆகும். உச்சகட்டத்தை பார்க்காத ஆண் மற்றும் பெண்ணை வாழ்வில் முழுமை பெற்றவர்களாக கருதவே முடியாது என்பதற்கு கீழ்காணும் சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு.

பன்னாட்டு நிறுவனத்தில் உயர்பதவி வகிக்கும் ஒரு பெண், அலுவலகத்தில் மிகச் சிறப்பாக பணி புரிந்து நற்பெயரை பெற்றார். ஆனால் வீட்டுக்கு வந்ததும் சிடுசிடுவென பேசுவதும், குழந்தைகளை அடிப்பதும், மற்றவர்களிடம் எரிச்சலை காட்டுவதும், கோபப்படுவது மேலும் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செயல்படுவது என்று தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டார். நிலைமை தலைக்கு மேல் செல்லவே, வேறு வழியின்றி மருத்துவரிடம் சென்றார்.

அவரை ஆய்வு செய்த மருத்துவர் உடல்நலம், மனநலம் போன்றவை நன்றாக இருந்தாலும் அவருக்கு பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆம், அவர் ஆசைப்பட்டப்படி எல்லாம் அவரால் கணவருடன் உறவில் இன்பத்தை அனுபவிக்க முடியவில்லை. அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் அதாவது Libidonal Energy காரணமாகவே சிக்கல் ஏற்பட்டு அப்பெண் அசாதரணமாக நடந்து கொண்டது கண்டறியப்பட்டது.

அந்த பெண் அதிகாரி படித்தவராக இருந்தாலும், கலவியில் உச்சகட்டம் என்ற ஒன்று உண்டு என்று தெரிந்தாலும், அதை எப்படி பெறுவது என்று தெரியாமல் அத்தனை ஆசைகளையும் மனதில் பூட்டி வைத்த காரணத்தாலேயே இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்.

அவர் மட்டுமல்ல, நம் இந்திய பெண்களில் சுமார் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட பெண்கள், உச்சகட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல், கலவி இன்பம் அனுபவிக்கிறார்கள் என்பது தான் கொடுமை. இனியும் தொடரலாமா இந்த நிலைமை சிந்தியுங்கள் தம்பதியரே… சிந்தித்து செயல்படுங்கள்… ஆற்றல் மிகு உச்சகட்டத்தில் ஆனந்தம் பெறுங்கள்…