Home அந்தரங்கம் இந்த விஷயங்களில் பெண்களை பற்றிய எண்ணங்களை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்!

இந்த விஷயங்களில் பெண்களை பற்றிய எண்ணங்களை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்!

124

ஆண்களை இருவகைகளாக பிரிப்பது எளிது, பெண்களை புகழ்வோர், இகழ்வோர். என்றோ, எங்கோ யாருக்கோ ஏதுனும் தவறு இழைக்கப்பட்டது என்ற காரணத்திற்காக நாம், அனைவரையும் அவ்வாறு எண்ணுவது தவறு. அதுவும், தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் இருந்து பெண்களை இகழும் போக்கு அதிகரித்து வருவது கூட இதற்கு ஓர் காரணமாக கூறலாம்.

நம் வீட்டிலும், உடன்பிறந்தோர், தாய், அண்ணி என எவ்வளவோ பெண்கள் இருக்க, நாம் மற்ற வீட்டு பெண்களை மிகவும் தரம் தாழ்த்திக் குறிப்பிடுவது, எண்ணுவது தவறு என்பதை விட அறியாமை என்று தான் கூற வேண்டும். கலாச்சார மாற்றத்தில் ஆண்கள் பங்கெடுத்துக் கொண்டதைப் போல, பெண்களும் பங்கெடுத்துக்கொள்ள நூறு சதவீத உரிமை உண்டு.

அத்துமீறல்கள் தவறு தான். ஆனால் வற்புறுத்துதல், அடக்கியாள நினைப்பது அதை விட தவறான அணுகுமுறை. பன்னாட்டு நிறுவனங்களில் பணிப்புரிவோர், ஷாப்பிங் மால்களில் பணிப்புரிவோர் போன்றவர்கள் தான் பல வன்கொடுமைகளுக்கும், தகாத வார்த்தைகளுக்கும் ஆளாகின்றனர். உண்மையில், அவர்களில் பலர் தான் வீட்டிற்காகவும், தன்னிலை உயர்வதற்காகவும் உழைத்து வருகின்றனர்….

இனி, எந்த சில விஷயங்களில் பெண்களை பற்றிய எண்ணங்களை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்…

ஷர்ட் ஸ்கர்ட்

அரைக்கால் உடை அணிந்து ஆண் சாலையில் நடந்து வந்தால் தவறாக பாராத நமது பார்வை. ஏன் அதே ஷர்ட் ஸ்கர்ட் அணிந்து வரும் பெண்ணை மட்டும், உடனே தவறான கண்ணோட்டத்திலும், அவள் தவறானால் என்பது போலவும் எண்ணுகிறோம்?

ஆண் நண்பர்கள்

ஆண்களுக்கு பல பெண் தோழிகள் இருந்தால் அது கெத்து, அதுவே, பெண்களுக்கு பல ஆண் தோழர்கள் இருந்தால் அவள் வேறு மாதிரியானவள்? இது எப்படி நிதர்சனம் ஆகும். இதில் எங்கு சமநிலை இருக்கிறது.

சாட்டிங்

நாள் முழுக்க ஓர் ஆண் தனது சமூக வலைத்தளம், மொபைல் போன்றவற்றில் சாட்டிங் செய்தால் அது தவறல்ல, அதுவே ஓர் பெண் செய்தால் மாட்டும் தவறா? ஏன் அவளுக்கு தோழிகளும், உறவினர்களும் இருக்கவே மாட்டார்களா என்ன…

இரவு நேரம் வெளியே செல்லுதல்

பிறந்தநாள் போன்ற சிறப்பு கொண்டாட்டங்களில் ஆண்கள் இரவு பங்கெடுத்துக் கொண்டு சந்தோஷமாய் இருக்கும் போது, அதை பெண்கள் செய்தால் மட்டும் ஏன் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்? அவர்களுக்கு அந்த நேரத்தில் பாதுகாப்பு கருதி யோசித்தால் தான் நாம் ஆண்மகனே தவிர, அவளை வேசியாக எண்ணி யோசிப்பது அல்ல.

நடிப்பதில் ஆர்வம்
நடிப்பதில் ஆர்வம்
நமது திரையுலகம் தான் இதற்கு பெரும் காரணம். ஓர் பெண் நடிக்க ஆசைப்பட்டால், பெரும்பாலும், முதலில் அவர்களை ஆடை அவிழ்க்க கூறு பழகிவிட்டனர். ஆனால், நடிக்க ஆர்வம் காட்டும் பெண்கள் அனைவரையும் நாம் வேறுப்படக் கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறோம்.

அதிக அலங்காரம்

அழகு என்பது அவரவரது சொந்த விஷயம். அதில் நாம் தலையிடுவது தவறு. ஓர் பெண் அதிகமாக அலங்காரம் செய்கிறாள் என்றால், அவள் ஆண்களை ஈர்க்க நினைக்கிறாள் என்று அர்த்தம் அல்ல, அவள் தன்னை அழகாக வைத்துக்கொள்ள விரும்புகிறாள், அவ்வளவு தான்.

சகஜமாக பேசுதல்

அனைத்து பெண்களும் தன்னுடன் பேச வேண்டும் என்ற ஆசை ஆண்களுக்கு இருக்கின்றது. எடுத்த எடுப்பில் அந்த பெண் சகஜமாக பேச தொடங்கிவிட்டால்.., “டேய் மச்சான் அவ மேட்டரா.. இருப்பாளோ..” என்று புரளிகளை பரப்புவது.