Home உறவு-காதல் இந்து திருமணங்களில் மணப்பெண் – மணமகனுக்கு உரிய நெறிமுறைகள்

இந்து திருமணங்களில் மணப்பெண் – மணமகனுக்கு உரிய நெறிமுறைகள்

40

தோழிப்பெண்(தோழிமாப்பிள்ளை) முன் செல்ல மணமகள் (மண மகன்) தொடர் ந்து வர மணவறையை ஒரு முறை வலம் வந்து மணவறையில் நின்று வருகையாளர்களுக்கு வணக்கம் செலுத் தி வலதுகாலை முன்வைத்து உள்ளே வரவும் பின்னர் மரமணையின் மேல் அமரவும்
மணமகன் வேஷ்டி (பேன்ட் தவிர் க்கவும்) அனிந்துமுன் நாள் பயன் படுத்திய மாலையை சாற்றி வரவும்
மணமக்கள் ஒவ்வொரு முறை மணவறையில் நுழையும் பொழு தும் வலதுகாலை முன்வைத்து உள்ளே வரவும் வருகை யாளர்க ளை பார்த்து தலைவணங்கி வண க்கம் செலுத்தவும்.
திருமண சடங்கு முடியும் வரை சிரித்த முகத்துடன் காட்சியளிக்க வும்
தோழி, நன்பர்கள் சிலரை தங்கள் அருகில் திருமண சடங்கு முடியு ம் வரை இருக்கசொல்லவும்
யார் அருகில் வந்தாலும் தலை வணங்கி வணக்கம் செலுத்தவும்
திருக்கோயில் போன்று மிகவும் புனிதமான இடம் மணவறை ஆகும் எனவே அதற்குரிய மரியாதையி னை தரவும்
கைபேசியை மண மேடையில் பூஜையின் பொழுது பயன்படுத்த வேண்டாம்
வேண்டுகோள்:மது அருந்துபவராக இருந்தால், முன்நாள் இரவில் யார் வற்புறுத்தினாலும் மது அருந்த வேண்டாம்
மணமேடையில் ஆடை விலகாம ல் பார்த்துக்கொள்ளவும்
தாலிகட்டும் பொழுது தங்களின் குலதெய்வத்தை பிரார்த்த னை செய்யவும்
திருமண சடங்குகள் முடியும் வரை மனதில் இறைவனது நாமங்க ளை உச்சரிக்கவும்
இறைஉணர்வான ஒரு இந்த நிகழ்ச்சி யின்பொழுது தங்களின் குல வழக்கப் படி நெற்றியில் நாமம் அல்லது விபூதி இடவும். இதில் கூச்சப் பட வேண்டிய அவசியம் இல்லை
தங்களின் பாரம்பரிய உடை (பஞ்ச கச்சம்) உடுத்தினால் தான் திரும ணத்திற்கு அழகு, வாழ் நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் புனி தமான வாய்ப்பு ஆகும்
மாதா, பிதா, குரு, தெய்வம் என வே திருமணத்திற்கு உங்களின் ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களை வரு கைதந்து வாழ்த்த அழையுங்கள், மண மேடைக்கு அவர்களை வர வழைத்து உரிய மரியாதை செலுத் துங்கள்
வாழ்க்கையில் 100 ஆண்டு சேர்ந்து வாழவேண்டும் என்று பிரார்த்தனை செய்து முதன்முறையாக மண மகளின் கைப் பற்றி அக்னியை வலம் வரும் பொழுது இடையில் யாரேனும் கை குலுக்க முனைந்தால் கட்டாயம் அன்பாக பேசி தவிர்க்கவும் (இணந்த கைகளை பிரிக் ககூடாது)
திருமண சடங்கை எடுக்கத்தான் புகைப்பட ம் (புகைப்படத்திற்க்காக நடக்கும் சடங்கு திரைப்படம்)
பாதஅணியுடன் வரும் நட்பு, உறவுகளுடன் மணமேடயில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்கவும், திருமண சடங்கு முடிந் த தும் மண மேடைக்கு முன்னர் தரை யில் புகைப்படம் எடுத்துக்கொள்ள வும்
தோழி மாப்பிள்ளை பட்டு அல்லது கதர் வேட்டி கட்டிக்கொள்ள சொல்ல வும் அதுதான் அழகு, மரபும்கூட
பெரியவர்கள் மேடையில் வந்து ஆசி ர்வாதம் செய்யும் பொழுது கூச்சப்ப டாமல் தலைவணங்கி, பாதம் தொட்டு மரியாதை செலுத் தவும்
திருமணத்தின் பின்னர் இருவீட்டாரி ன் நன்பர்களும், உறவினர்களும் பொதுவானவர்களை என வே மணமகள் உறவினர், மண மகன் உறவினர் என பாகுபாடு இன்றி வணக்கம் தெரிவிக்கவும்
மணமக்கள் தங்களின் உறவினர் கள் மேடைக்கு வரும் பொழுது பரஸ்பரம் உறவுமுறை சொல்லி அறிமுகம் செய்ய வும்
மெட்டி போடும் பொழுது மணமகளின் பாதங்களை இருகை களால் தாங்கி அம்மியின் மீது பதிக்கவும்.