Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களுக்கு வரும் மீசை முடி பிரச்சனைக்கு தீர்வு

பெண்களுக்கு வரும் மீசை முடி பிரச்சனைக்கு தீர்வு

93

சில பெண்களுக்கு ஆண்களைப் போல முகத்தில் முடி வளரலாம். இந்தப் பிரச்னையை மிகவும் கவனமுடன் கையாள்வது நல்லது.

முகம், கை, கால்களில் ஆண்களைப் போல பெண்களுக்கு முடி வளர்வது ஒரு மிகப் பெரிய தாழ்வு மனப்பான்மையை அவர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது. இதற்காக அடிக்கடி அழகு நிலையங்களுக்கு சென்று முடியை எடுத்து விடுவது தான் அனைத்தப் பெண்களும் செய்யும் மிகப் பெரிய தவறாகும்.

இதனால் முன்பை விட முடி இன்னும் வேகமாக வளர்ந்து விடும். அத்துடன் தொடர்ந்து அழகு நிலையங்களுக்கு சென்று முடியை எடுத்து வந்தால் அதனால் தோலுக்கும் ஆபத்து வரலாம். அதாவது தோல் தடித்து தனது அழகை முழுவதுமாக இழந்து விடும். பிறகு இதற்கு என்ன தான் உபாயம் வாருங்கள் பார்ப்போம்.

‘ப்யூனிக்’ என்று ‘மாக்கல்’ போன்ற அமைப்பு கொண்ட ஒரு கல் உள்ளது. அது கொஞ்சம் சொர சொரப்பாக இருக்கும் அழகுக் கடைகளில் கிடைக்கும். அதன் எடை மாக்கல் போலக் கனமாக இருக்காது.

அந்தக் கல்லினால் உடம்பைத் தேய்த்து வந்தால், முடி வளர்ச்சி தடைபட்டு, நாளடைவில் தோல் மிகவும் வழ, வழப்பாக மாறிவிடும். ஒரு வேளை இந்தக் கல் கிடைக்கவில்லை என்றால் சுரக் குடுக்கையை உலர வைத்து, அதனை உடம்பில் (சோப்புப் போட்டுத் தேய்த்துக் கொண்டு) தேய்த்தாலும் முடி வளர்வது குறையும்.

இது தவிர கொஞ்சம் வசதியான பெண்களாக இருந்தால் ஆவிக் குளியல் எடுக்கலாம். இந்த ஆவிக் குளியல் பல வழிகளில் நன்மைகளை செய்யக் கூடியது. ஆவிக் குளியல் சரும வியாதிகளைப் போக்கும் என்று அண்மைக் காலமாக நம்பப் படுகிறது.

வெயில் காலங்களில் அதிக அளவில் வியர்வை வெளியாகும் சமயத்தில் அதில் இருக்கும் நீர் ஆவியாகி விடுகிறது. வியர்வையில் உள்ள உப்புக்கள், உடம்பின் மேல் பகுதி தோலின் மீது படிந்து விடுகிறது. அடிக்கடி தோலை சுத்தம் செய்யாவிடில் தோல் சொர சொரப்பாக ஆகி விடும்.

அதனால் தோலின் இயற்கைச் சுரப்பியான எண்ணெய்ப் பசை, மேல் தோலுக்கு வர முடியாதபடி துளைகள் நன்றாக அடைத்துக் கொண்டு விடும். இந்த நிலையில் அடிக்கடி ஆவிக் குளியல் செய்தால் அத்துளைகள் நன்றாக விரிந்து கொடுக்கும், தோலும் சொரசொரப்பாக இருக்காது. மெருகுடன் காணப்படும்.