Home பாலியல் ஆண்களின் செக்ஸ்

ஆண்களின் செக்ஸ்

30

”விடலைப்பருவத்தை எட்டும் பையன்களுக்கு கடவுள் அற்புதமான ஒரு திரவத்தை பரிசாகக் கொடுப்பார். அது அவர்கள் உடலில் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கும். அவர்கள் வேகமாகவும், உயரமாகவும் வளர, திடகாத்திரமான கட்டுடல் பெற்ற வாலிபனாக மாறுவதற்கு இந்த திரவம்தான் உதவுகிறது. எனவே அதை எந்த வழியிலும் வீணாக்கி விடக்கூடாது. பத்திரமாக சேமித்து வைத்தால் மட்டுமே அவர்கள் வளர முடியும்.” சார்லஸ் கின்ஸி என்ற செக்ஸ் ஆராய்ச்சியாளர் பள்ளியில் படிக்கும் போது அவருக்கு கொடுக்கப்பட்ட ஒழுக்க கையேட்டில் மேலே கண்ட விசயம் இருந்தது.

இது கின்ஸியை பெரிதும் குழப்பியது. செக்ஸ் தொடர்பான புத்தகங்களைத் தேடிப் பார்த்தார். கிடைக்கவில்லை. எனவே பெரியவரானதும் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சியில் அவரே இறங்கினார். 521 கேள்விகள் அடங்கிய படிவத்தை வடிவமைத்தார். அதில் 300 கேள்விகள் செக்ஸ் தொடர்புடையவை. மற்றவை தகவல் கொடுப்பவர் பற்றிய விவரங்கள். கின்ஸி ஒவ்வொரு நபரிடமும் தனித்தனியாக நேரடியாக பேட்டி எடுத்தார். ஒருவரிடம் முடிக்கவே ஒரு மணி நேரம் ஆனது. கின்ஸி ஒரு நாளில் 17 மணி நேரம் சலிக்காமல் உழைத்தார். அமெரிக்கா முழுவதும் சுற்றி பல ஆண்களை பேட்டி எடுத்தார்.

இதை ‘ஆண்களின் செக்ஸ் பழக்கம்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். அமெரிக்காவே ஆடிப்போனது. இப்போது போல, எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் மனநிலை கொண்டவர்களாக அன்றைய அமெரிக்கர்கள் இல்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம். அதோடு, காலம் காலமாக செக்ஸ் விசயத்தில் மதம் புகுத்திய கட்டுப்பாடுகள் வேறு தளராமல் இருந்தன. இந்த நிலையில் கின்ஸி வெளியிட்டிருந்த அத்தனை சமாச்சாரங்களும் அதிர்ச்சி தரக் கூடியவையாகவே இருந்தன. கணவன்-மனைவி இருவருக் குள்ளும் நடக்கும் உடலுறவைத் தவிர வேறு எந்த தவறும் சமுதாயத்தில் நடக்கவில்லை என்று நம்பிக்கொண்டிருந்த காலம் அது.

கின்ஸி தன் புத்தகத்தில் ”நான் பேசிய அத்தனை ஆண்களில் 90 விழுக்காடு பேர் வாழ்க்கையில் ஒரு தடவையாவது சுய இன்பம் அனுபவித்ததாக ஒப்புக் கொண்டார்கள். மீதி 5 விழுக்காடு பேர் அப்படி ஒரு பழக்கம் எனக்கு இல்லை என்று மறுத்தார்கள். அநேகமாக அவர்கள் சொல்வது பொய்தான். அதேபோல் ஆண்களில் பெரும்பாலோனோர் ஓரினச் சேர்க்கை எப்படிப்பட்ட உணர்வைத் தரும் என்று ஒரு தடவையாவது முயன்று பார்த்ததாகச் சொன்னார்கள். அமெரிக்க ஆண்களில் 10 விழுக்காடு பேர் பெரியவர்கள் ஆனதும் ஓரினச் சேர்க்கைப் பிரியர்களாக மாறுகிறார்கள்.

ஆண்களில் 85 விழுக்காடு பேர் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் உறவை அனுபவித்து இருக்கிறார்கள். 30 முதல் 45 விழுக்காடு பேர் திருமணத்துக்கு பின்பு மனைவியைத் தவிர வேறு பெண்களோடு உறவு வைத்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

புத்தகம் வெளியான 5 மாதங்களில் இரண்டு லட்சம் பிரதிகள் விற்று தீர்ந்தன. இதன் விற்பனை வேகத்தைப் போலவே இதற்கு எதிரான விவாதங்களும், எதிர்ப்புகளும் அதிகரித்தன. ஆனால் எதற்கும் கலங்காத முரட்டுப் பிடிவாதக்காரரான கின்ஸி செக்ஸ் விசயத்தில் ஆண்களை அம்பலப்படுத்தியது போல் பெண்களின் செக்ஸ் குறித்த ஆய்வைத் தொடங்கினார். அது ஏற்படுத்திய பிரச்சனை எல்லாவற்றிலும் உச்ச கட்டம் என்பது தனிக்கதை.