Home உறவு-காதல் பெண்களுக்கான பொதுவான அம்சங்கள்

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள்

36

பெண்ணின் உடம்பு மென்மையாக இருக்குமானால் ஆரோக்கியமாகவும், சகல ஐஸ்வர்யங்களை உடையவளாகவும் விளங்குவாள். பெண்ணின் உடம்பு இரத்தத்தை ஒத்த நிறத்துடன் இருக்குமானால், அவள் உலகத்தார் வணங்கும் அளவுக்கு உன்னத நிலையை அடைவாள்.
அளவுக்கு அதிகமாக குட்டையான அல்லது மிகவும் உயரமாக அல்லது உடம்பு தடித்து இருக்குமானால் அப்பெண்ணை எளிதாக நம்பக்கூடது. மேலும் இத்தகையவள் வறுமையில் வாடுவாள்.
உடல் இளைத்துள்ளவள் பரத்தையாக இருப்பாள். உறுதியான தேக அமைப்பைக் கொண்டு இருந்தாலும், கிழத்தன்மையை இளம்வயதிலேயே கொண்டிருந்தாலும், அவள் கேட்ட எண்ணம் கொண்டவளாக இருப்பாள்.
வலது புறத்து அங்கம் ஏதாவது இடதுபுறத்து அங்கத்தைக் காட்டிலும் சிறிதாக இருப்பின் அவள் சகல வித போகங்களையும் வசதி வாய்ப்புகளையும் பெறுவாள். அப்படி இல்லாமல் பெரிதாக இருக்குமானால் அவள் தரித்திரம் பிடித்தவளே வாழ்வாள்.
ஒரு பெண்ணின் உடம்பில் வேம்பின் வாடை அல்லது கற்றாழை வாடை, அல்லது மாமிச வாடை வீசுமானால் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல.
ஒரு பெண்ணுக்கு பாதங்கள் செந்தாமரை மலரைப் போன்று நிறத்துடன் இருந்து, அவள் நடக்கும் பொழுது பாதம் பூமியில் படாமல் இருந்தால் அவள் வேசியாக வாழ்வாள்.
ஒரு நூல் கயிற்றை எடுத்து, பெண்ணின் ஐந்து விரல்களின் மொத்த நீளத்தையும் அளந்து அந்த நீள அளவை முழங்கையில் இருந்து பாம்பு விரல் நுனி வரை வைத்துப் பார்க்கும்போது, சமமாய் இருக்குமானால் அப் பெண்ணாகப்பட்டவள், அரசனின் மனைவியாகும் பாக்கியத்தை உடையவளாவாள். இவ்வளவில் சற்றுக் குறைந்திருக்குமாயின், அரச பதவிக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சனின் மனைவியாவாள். நூலின் நீளம் பாம்பு விரலின் அடிமட்டம் வரை மட்டுமே இருக்குமானால் அவள் சராசரி வாழ்க்கை வாழ்வாள்.
கருமையான மரு ஒன்று பெண்ணினுடைய கண்ணில் இருந்தால் அவள் சகல வித ஐஸ்வர்யங்களையும் பெற்று லட்சுமி கடாசத்துடன் வாழ்வாள்.
முன் குறைப்பாடா மருவனது, முன் குறைப்பட்ட அங்கங்களில் வலப்புறத்தில் இருக்குமானால் அவளுக்கு தீராத துன்பங்கள் உண்டாகி, எந்நாளும் வருந்தி நலிந்து துன்புறுவால்.
ஒரு பெண் பேசும்பொழுது அவளுடைய மூக்கு திரண்டு சுளித்திடுமனால், அப்பெண் சுப சகுனத்திற்கு ஏற்புடையவள் ஆவாள். அவளைத் தரிசித்துச் சென்று செய்திடும் காரியங்கள் யாவும் ஜெயமடையும் என்றாலும், அவளைக் கூடுவது பாவமாகும்.
ஒரு பெண்ணுடைய இடுப்புப் பகுதிக்கு இடப்புறமாக அல்லது அந்தரங்கப் பகுதிகளில் அல்லது தொடையை ஒட்டி மருக்கள் அமைந்து இருக்குமானால், ஏல்வாஸ் செழிப்பு குறைந்து, கணவனை இழந்து, இருந்த இடத்தை விட்டு நீங்கிச் சென்று, அலைந்து திரிந்து துயரம் கொள்வாள்.
ஒரு பெண்ணின் நெற்றி பகுதியில் ஐந்து வரிகள் அதாவது ரேகைகள் இருந்தால், அவள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பாள்.
மீனைப் போன்ற தோற்றமுடைய கண்களைப் பெற்றுள்ளவள் மன்மதனுக்கு நிகரான அழகனைக் கணவனாக அடைந்து மகிழ்வோடு வாழ்வாள். இவளுடைய கணவன் அகம்பாவம் கொண்டவனாய் காணப்படுவான்.