Home பாலியல் நீங்கள் சுய இன்பத்தில் இருந்து முழுவதுமாக விடுபட.

நீங்கள் சுய இன்பத்தில் இருந்து முழுவதுமாக விடுபட.

301

பாலியல் செய்திகள்:உலகம் முழுவதும் பருவமடைந்த ஆண்கள், பெண்கள் பலரிடம் சுய இன்பப் பழக்கம் நிலவி வருகிறது. சிலரிடம் பருவமடையும் முன்னரே சிறு பிராயத்திலேயே இப்பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இவர்கள் பிஞ்சிலே பழுத்தவர்கள். சிலரிடம் மணமான பின்னரும் கூட நாற்பது, ஐம்பது வயதுக்கு மேலும் கூட இப்பழக்கம் நீடிக்கிறது.
சாதாரணமாகப் பிறப்புறுப்பை தீண்டும் போது ஏற்படும் வித்தியாசமான புலனுணர்வு, அடிக்கடித் தொட்டு, அசைத்து அதிக இன்பம் அனுபவிக்கும் மனநிலை ஏற்பட்டு பின்னர் அப்பழக்கத்திற்கு பலரும் #அடிமையாகி (#Addict) விடுகின்றனர். தற்செயலாகத் துவங்கும் சுய இன்பப் பழக்கத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் எவரும் மீள முடிவதில்லை.

துணையின்றி, தன்னந்தனியாக உறுப்புகளை அசைத்து சுயமாக காம இன்பம் காணும் இப்பழக்கத்திற்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன. ஆபாச பத்திரிகைகள் வாசிப்பு, ஆபாச படங்கள் பார்த்தல், நட்பின் மூலமாக ஆபாசங்களைப் பேசிப் பகிர்தல், ஆபாசச் சிந்தனைகள், கனவுகளில் மூழ்குதல், மன எழுச்சி போன்ற அகபுறக் காரணிகளும், வாழ்நிலைகளும், சூழ்நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சுய இன்பப் பழக்கம் குறித்து நவீன மருத்துவர்களும், மாற்றுமுறை மருத்துவர்களுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

சுய இன்பப் பழக்கம் இயற்கையானது. இதனால் உடல் நலத்திற்கு எந்தக் கேடுகளும் ஏற்படுவதில்லை. உடலுறவுக்குப் பின்னர் ஏற்படும் சிறு பலவீனத்தைப் போலவே சுய இன்பத்திற்குப் பிறகு சிறிய பலவீனம் ஏற்படும். ஓய்வுக்குப் பின்னர் சரியாகி விடும். சிறுநீர் கழிப்பதிலோ, உமிழ்நீரை துப்புவதிலோ எப்படி எந்தப் பாதிப்பும் இல்லையோ அதேபோல விந்து வெளியேற்றத்திலும் எந்தப் பாதிப்பும் இல்லை.

சுய இன்பப் பழக்கத்தின் விளைவுகள் குறித்து மாற்றுமுறை மருத்துவர்கள் கூறும் கருத்துக்கள் எல்லாம் நூறு சதவீதம் பொய் என்று ஓங்கி உரைக்கும் நவீன மருத்துவ நிபுணர்கள் ‘சுய இன்பப் பழக்கமுள்ள ஆண்கள், பெண்களில் பாதிக்கு மேற்பட்டோர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்’ என்பதை நிரூபிக்க முடியுமா?

பள்ளியிலேயே மாணவியர்களுக்கு சுய இன்பப் பழக்கத்தில் ஆண், பெண் இருவரும் உள்ளத்தாலும், உடலாலும் ஒன்றி தான்தோன்றித்தனமான நினைத்த போதெல்லாம் எச்சில் துப்புவது போல் விந்தினை வெளியேற்றுவதும் இயல்பானதுதான். அதனால் எந்த பாதிப்புமில்லை என்று தைரியமூட்டுகின்றனர்.

♦பிறந்த #குழந்தைக்கும்_எச்சில் சுரக்கும். ஆனால் #விந்து_சுரக்க #பதினைந்து_ஆண்டுகள் #காத்திருக்க_வேண்டும். விந்து இனப்பெருக்க ஆற்றலுள்ளது.

விந்து ஒவ்வொரு முறை வெளியேறும் போதும் தலை முதல் கால் வரை மொத்த உணர்வு மண்டலமும் பரவசக் கிளர்ச்சி ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கையிலும், எச்சில் துப்பும் போதும் எவருக்கும் இந்த அனுபவம் ஏற்படாது. நரம்பு மண்டலத்தினூடே ஓடிப் பாய்ந்த உணர்வு எழுச்சி ஏற்படுத்தி அதுவே தொடர்கதையானால், நரம்பு மண்டலத்தையே நாசப்படுத்தி விடும் வீரியமுள்ள விந்தினை சிறுநீருடன், எச்சிலுடன் எப்படி ஒப்பிட முடியும்?

நான்காண்டு பழக்கம் என்றும், எட்டாண்டுப் பழக்கம் என்றும் தினமும் சுய இன்பத்தில் நகர்ப்புறங்களில் திரும்பும் திசையெல்லாம் ஆபாச சுவரொட்டிகள், விரசமான காட்சிகள், ஆபாசமான ஆடல், பாடல்களும் நிறைந்த திரைப்படங்கள், ஆபாசப் படங்களும், கதைகளும் நிறைந்த பத்திரிகைகளின் அதிகரிப்பால் இயற்கைக்கு மாறாக பாலியல் கிளர்ச்சி தூண்டப்பட்டு அடிக்கடி இளம் வயதினர் சுய இன்பத்தில் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வு வேண்டாமா? வெளிச்சத்திலேயே விழும் விட்டில் பூச்சிகளாக மாறிவிட்ட இளம் வயதினர் பாதங்களை ஆக்கப்பூர்வமான பாதைகளில் திருப்பி விடுவதில் மருத்துவர்களுக்கு பங்கில்லையா?

சுய இன்பப் பழக்கத்தினால் நன்மைகள் அதிகமா?
தீமைகள் அதிகமா? என்று சாதக(Positive side) பாதகங்களை (Negative sides) விரிவாக அனைத்து முறை மருத்துவர்களும் விவாதித்து ஒருங்கிணைந்த முடிவுகளுக்கு வர வேண்டியதும் அதனடிப்படையில் இளைய தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டியதும் நிகழ்காலத்தின் அவசியம்.

சுயஇன்பம் என்றசொல்லையும் அது தொடர்பான விசயங்களையும்
மற்றவர்கள்முன் பேசுவதற்கு நாம் தயங்குகிறார்கள். அதேபோல கேட்பவர்களு ம் அருவருப்பு அடைவார்கள்.

அவ்வாறு பேசப்படாததன்
காரணமாக எத்தனை இளம் வயதினர் தங்கள் பிரச்சனைகளை வெளிப்டையாகச் சொல்ல முடியாது தங்களுக்குள் மறுகுவதும் குற்றவுணர்வு டன் சோர்ந்து இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தங்கள் திருமண வாழ்வு, எவ்வாறு அமையும், மனைவியைத் திருப்திப்படுத்த முடியுமா,
குழந்தைப்பாக்கியம் கிட்டுமா என்றெல்லாம் பயந்து வாழ்கிறார்கள் என்பதை எத்தனை பெற்றோர்கள்
அறிந்திருக்கிறார்கள்.

ஆயினும் இது ஒரு #போதை போலாகி அதை விட முடியாமல் அதிலியே மூழ்கிக் கிடந்தால், வாழ்க்கையானது சேற்றில் சிக்கிய வண்டி போல முன்னேற முடியாது முடங்கிவிடும்.

அத்தகைய நிலையில் ஒருவர் செய்ய வேண்டி யவை எவை?

சுயஇன்பத்தைத் தேடவேண்டிய அவசியம் எத்த கைய நேரங்களில் வருகிறது என்பதை அடையாளங் காணுங்கள்.

ஆபாசப்படங்கள் பார்ப்பதைத் தவிருங்கள்.
தனிமை, பொழுது போக்கின்மை,
போன்றவை அணு காமல் தவிருங்கள்.

சுய இன்பத்தைத் தூண்டுகிற நண்பர் களின் உறவைத் தள்ளி வையுங்கள்.

உற்சாகமும் மகிழ்ச்சியும் தரக் கூடிய வேறு நடவடிக்கைகளால் உங்கள் பொழுதுகளை நிறையுங்கள்.

இசை, எழுத்து, ஓவியம்,
இசைவாத்தியங்கள், போன்ற ஏதாவது ஒரு படைப்பூக்கம் தரும் செயற்பாட்டில் முழுமையாக மனதைச் செலுத்துங்கள்.

கால்பந்தாட்டம், துடுப்பாட்டம் உடற் பயிற்சி, போன்ற
விளையாட்டுகளில் ஈடுபடுங்கள்.

யோகாசனம் போன்றவை உடலுக்கும் உள்ளத் திற்கும்
நலத்தைத் தரும்.

பழவகைகளும், காய்கனிகளும் நிறைந்த ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்ளுங்கள்.

ஏதாவது சமூகப்பணிகளில்
ஈடுபடுவது உங்கள் மனதைத் திசை திருப்பும். வறிய மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் கொடுப்பது போன்ற ஏதாவது பணியில் ஈடுபடலாம்.

இளம் வயதில் அடிக்கடி தலைத்தூக்கும் காம உணர்வை கட்டுப்படுத்த தெரிந்து கொள்வது அவசியம். இளம் வயதுகாரர்களுக்கு எச்.ஐ.வி தொற்றி எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் வருவதை பார்க்கும் போது தான் பாலுணர்வு கட்டுப்பாட்டு யுக்திகளின் முக்கியத்துவத்தை நாம் உணருவது கட்டாயமாகிறது.

#யுக்திஒன்று:

எப்போதும் உங்களை பிஸியாகவே உங்களை வைத்திருங்கள். இளம் வயதில் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதால் அதற்கு சதா தீனி தேவைப்படுகிறது. நீங்கள் சரியான தீனி போடாவிட்டால் மனம் தன் விருப்பத்திற்கு ஏதாவது முருங்கை மரத்தில் ஏறி ஆடு ஆரம்பித்து விடும். அதனால் கதை, கவிதை, அறிவியல் ஆராய்ச்சி என்று அறிவுக்கு உணவு போட்டுக் கொண்டே இருந்தால் மனதில் வெறுமை தோன்றாது.

#யுக்திஇரண்டு:

தனிமையை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். செய்வதற்கு எதுவுமே இல்லாத போது, தனியாக இருப்பது கண்டதையும் பரீட்சித்து பார்க்க தூண்டி விடும். எனவே எப்போதும் பலர்சூழ இருக்க முயற்சி செய்யுங்கள்.

#யுக்திமூன்று;

விளையாட்டில் ஈடுபடுங்கள்-& அது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஹார்மோன்களைச் செலவழிக்க ஒரு நல்ல வடிகாலாகவும் அமைகிறது.

#யுக்திநான்கு:

ஏதாவது சுவவாரசியமான பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த பொழுது போக்கில் ஈடுபடும் போது பிற தேவையில்லாத எண்ணங்களை மறந்து சுவாரஸ்யத்தில் மனம் லயிக்குமாறு செய்யுங்கள்.

#யுக்திஐந்து:

பெற்றோருக்கு உதவி செய்யும் வகையில் வீட்டு வேலைகளில் உடலை வருத்தி உழைத்தால் கூட சில தேவையில்லாத காம எண்ணங்கள் வருவதை அறவே தவிரிக்க இயலும்.

#யுக்திஆறு:

காம உணர்வு தலைதூக்கினால் சுய இன்பமா, வெறும் கற்பனையா,
சைட் அடிப்பதா ஏதாவது ஒரு சமாதான நடவடிக்கை தானாக தலைதூக்கும்.

கொஞ்ச நேரத்தில் மனம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். உடனே அடுத்தடுத்த வேலையை பாக்க நகருங்கள்.

இன்னும் கொஞ்ச நேரம் என்று இதிலேயே மூழ்கி வேதாளத்தை உயர உயர முருங்கை மரத்தில் ஏற்றி விடாதீர்கள்.