Home பெண்கள் உடல் கட்டுப்பாடு குண்டான பெண்களுக்கு கர்ப்பம் ஏன் தடைபடுகிறது.?

குண்டான பெண்களுக்கு கர்ப்பம் ஏன் தடைபடுகிறது.?

30

30 வயதுகளின் துவக்கத்தில் இருக்கும் சில்பி சச்தேவா கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்ப்பமடைய முயற்சி செய்தும் பலன் சிறிதும் இல்லை. இவ்வாறு கர்ப்பமடைய எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிந்ததை அடுத்து, சச்தேவா தம்பதிகள் ஒரு செயற்கை கருவூட்டல் நிபுணரின் ஆலோசனையைப் பெற முடிவு செய்தனர். சேயற்கை கருவூட்டல் கிளினிக்கில் நன்கு பரிசோதனை செய்து பார்த்த போது, சில்பியின் கருமுட்டைகளில் ஏற்பட்டிருந்த பிரச்சனைகளின் காரணமாக அவளால் கருத்தரிக்கவே முடியாது என்று தெரிந்தது.

இந்த முடிவுக்கு காரணம் அதிகபட்ச உடல் பருமன் தான்! இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில் சில்பி தனியாக இல்லை என்பது தான் சோகமாகும். ஐசிஎம்ஆர்-ன் அறிக்கையின் படி, 60 முதல் 80 மில்லியன் தம்பதிகளுக்கு கருத்தரிப்பது தொடர்பான பிரச்சனைகள் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறது, இதில் இந்தியாவின் பங்கு 15 முதல் 20 மில்லியன்கள் வரையில் உள்ளது. ‘மேலும் மலட்டுத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதிகளில் 10 சதவீதம் பேர், அதிக உடற்பருமனையே காரணமாக கொண்டுள்ளனர்.

எனவே, நீங்கள் பருமனான உடலுடன் இருந்து கொண்டு, கருத்தரிக்க திட்டமிட்டால், முதல் செயலாக உடல் எடையை குறைக்க வேண்டும்’ என்கிறார் ஒரு செயற்கை கருவூட்டல் நிபுணர் (IVF Specialist). அதிகமான உடல் பருமனால், கர்ப்பமடைவது சவாலான விஷயமாக இருப்பதுடன், பிரச்சனையானதாகவும் மாறிவிடுகிறது. இந்த கட்டுரையில், அதிகமான உடல் பருமன் காரணமாக கர்ப்பம் எப்படி தடைபடுகிறது என்பதைப் பற்றிக் காண்போம்….

மலட்டுத்தன்மைக்கான வாய்ப்புகள் அதிகம்

முட்டை உற்பத்தி மற்றும் கருவுறுதலுக்குத் தேவையான சராசரியான ஹார்மோன் வகைகளை அதிகமாக இருக்கும உடற்பருமன் பாதிக்கிறது. இதன் மூலம் அண்டம் இயற்கையாக செயல்படும் முறை பாதிப்படைகிறது. இதன் மூலம் சமநிலையற்ற அல்லது ஒழுங்கற்ற முறையிலான மாதவிடாய் வரத் துவங்கும். இதுவும் இயற்கையான கருவுறும் முறையை பாதிக்கிறது. அடிவயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்புகளிலிருந்து உருவாகும் ஆண் ஹார்மோன்கள் ஃபோலிக்குலர் மெச்சூரேசன் (Follicular Maturation) செயல்பாட்டை தடுக்கும் திறன்களை கொண்டவையாக இருப்பதால், கருவுறும் செயல்பாட்டுக்கு வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது.

கருவுறுதலுக்கான சிகிச்சையின் பலனை குறைத்தல்

சாதாரண பெண்களின் கருவுறுதலுக்கான சிகிச்சையின் பலனை விட, உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்களின் கருவுறும் சிகிச்சையின் பலன் மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, கருவுறும் சிகிச்சை முழு வெற்றியடைய வேண்டும் என்று விரும்பினால், உடல் எடையை முடிந்த அளவுக்கு குறைக்க வேண்டும்.

கர்ப்பம் கலையும் வாய்ப்புகளை அதிகரித்தல்

எடை போன்ற பிரச்சனைகளை எல்லாம் தாண்டி இயற்கையாகவே கருவுற்று விட்டால் கூட, அதிகமான உடல் பருமனைக் கொண்ட பெண்கள் தங்களுடைய வயிற்றில் உள்ள குழந்தையை பராமரிப்பது மிகவும் கடினமாகும். அதிகமாக இருக்கும் உடல் பருமன், குழந்தை பிறக்கும் போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் கரு கலைதல் போன்ற விஷயங்களை மும்மடங்கு அதிகரித்து விடுகிறது. மேலும், உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்ணின் கரு கலைந்து விட்டால், அவள் இரண்டாம் முறை கருத்தரிப்பது மிகவும் அறிய விஷயமாகி விடும்.

பி.சி.ஓ.எஸ் நோயை வரவழைத்தல்

அதிகமான உடல் எடையின் காரணமாக உடலில் அதிகமாக சுரக்கும் இன்சுலின் காரணமாக, கரு முட்டைகளின் உருவாக்கம் ஒழுங்கற்று நடக்கும். அதிகமான உடல் பருமன், அதிகமான இன்சுலின் மற்றும் மலட்டுத் தன்மை ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்புகளை கொண்ட நோயாக பல்பையுரு கருப்பை நோய் உள்ளது (Pழடலஉலளவiஉ ழுஎயசயைn ளுலனெசழஅந). PCOS என்பது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, கருமுட்டை உற்பத்தி (Polycystic Ovarian Syndrome), உடல் பருமன் மற்றும் அதிகமான ஆண் ஹார்மோன்கள் உற்பத்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய மருத்துவ நிலையாகும்.

வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுத்தல்

அதிகமான உடல் பருமன் உடையவர்கள் ஒன்று அல்லது வேறு ஏதாவது ஒரு வகையான வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சனைகளை அனுபவித்து வருவார்கள் என்பது நிச்சயம். அதாவது, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிகமான கொழுப்பு போன்ற பிரச்சனைகளை அவர்கள் சந்திப்பார்கள். ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் இந்த பிரச்சனைகளெல்லாம், பெண்களின் இடுப்பளவை அதிகமாக்கி விட்டு, அவர்களின் கருத்தரிக்கும் கனவை தவிடு பொடியாக்கி விடுகின்றன.

எடையைக் குறையுங்கள்

நீங்கள் கர்ப்பத்திற்கு திட்டமிடும் முன்னதாகவே எடையைக் குறையுங்கள். நீங்கள் அதிகமான எடையுடன் உள்ளதாக நினைத்தால், அதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். 15 சதவீதம் அளவிற்கு உடல் எடையைக் குறைத்தால் போதும், எந்தவித மருத்துவ உதவியும் இல்லாமல் கருத்தரிக்க முடியும். அதே போல, ‘PCOS நோயால் பாதிக்கப்பட்ட பெண்களும், தங்களுடைய உடல் எடையை முறையாக பராமரித்தால் போதும், கர்ப்பத்திற்கான வழி மருந்துகள் இல்லாமல் சுமூகமாகத் திறக்கும்’ என்கிறார் டாக்டர் குப்தா என்பவர். வேகமாக நடப்பது, ஏரோபிக்ஸ் பயிற்சிகள் மற்றும் நீச்சல் பயிற்சிகள் என எண்ணற்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி, குறைவான வலியுடன் எண்ணத்தை நிறைவேற்றலாம். இன்றே முயற்சி செய்யுங்கள்.

தீய பழக்கங்களை விடுதல்

புகைப் பழக்கம் மற்றும் குடிப்பழக்கம் போன்றவைகளுடன் உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகள் கைகோர்க்கும் போது, கர்ப்பம் கனவாகி விடுகிறது. மேற்கண்ட பழக்கங்களோ அல்லது வேறு ஏதாவது கெட்ட பழக்கங்களோ உங்களுக்கு இருந்தால், அதையெல்லாம் விட்டு விட்டு ஆரோக்கியமான கர்ப்பத்தை நோக்கி நடை போடுங்கள்.

சரிவிகித உணவு உண்ணுங்கள்

உங்களுடைய காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவுகளையும், உணவுகளுக்கு முன்னும் பின்னும் இரண்டு முறை நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதையும் விட்டு விடத் தேவையில்லை. ஆனால், நீங்கள் சாப்பிடும் உணவு அல்லது பானங்களின் அளவைக் குறைப்பதன் மூலம், அதிகபட்சமான சர்க்கரை மற்றும் கொழுப்பைக் குறைக்க முடியும். எனவே, அதிகமான பழங்கள், பசுந்தழைக் காய்கறிகள் மற்றும் கலவையான சாலட்களைச் சாப்பிட்டு ஆரோக்கியத்தைப் பேணுங்கள்.

செயற்கை கருவூட்டும் நிபுணரின் ஆலோசனை

நீங்கள் எல்லா முயற்சிகைளயும் செய்திருந்தாலும், உங்களுடைய எடை குறைவுக்கும், சாப்பிடும் உணவுகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றியும் ஒரு செயற்கை கருவூட்டல் நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும். இந்த ஆலோசனையை அவ்வப்போது பெற்று, உடலின் நிலை மற்றும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

துணைவரின் ஆரோக்கியம்

உடல் பருமன் உங்களுடைய கருத்தரிக்கும் முயற்சிக்கு ஒரு பிரச்சனையாக வரலாம். ஆனாலும், உங்களுடைய துணைவரின் உடல் ரீதியான பிரச்சனைகளும் இதில் சம அளவு பங்கு வகிப்பதை கர்ப்பத்திற்கு திட்டமிடும் முன்னர் உணர்ந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு இருப்பது போன்ற பிரச்சனைகள் துணைவருக்கும் இருந்தால், அவருடைய எடையைக் குறைக்கச் சொல்லுங்கள், வல்லுநரின் ஆலோசனையைப் பெறுங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைப் புகுத்தி கர்ப்பத்தின் வழியைத் திறந்து வையுங்கள்….!