Home பெண்கள் அழகு குறிப்பு அழகான புருவம் வேண்டுமா? இரவில் மசாஜ் செய்யுங்கள்

அழகான புருவம் வேண்டுமா? இரவில் மசாஜ் செய்யுங்கள்

25

625-0-560-350-160-300-053-800-668-160-90பொதுவாக பெண்களின் கண்களை அழகாக காட்டுவது அவர்களின் அடர்த்தி மிகுந்த புருவங்கள்.

அடர்த்தியான புருவங்களினால் பெண்களின் முகம் அழகாக இருக்கும்.

பெரிய கண்களைக் கொண்ட பெண்கள் அடர்த்தியான புருவங்கள் இல்லாமல் பென்சில், மை போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் இயற்கையான புருவத்தின் அடர்த்தியை பெற முடியாது.

புருவங்களில் அடர்த்தியான முடிகளைப் பெறுவதற்கு சில இயற்கைப் பொருட்களைக் கொண்டு இரவு நேரங்களில் தொடர்ந்து மசாஜ் செய்வதின் மூலம் புருவத்தின் அடர்த்தியான முடிகளைப் பெறலாம்.

மசாஜ் செய்யும் முறைகள்

சிறிய வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளதால், இரவு நேரத்தில் சிறிய வெங்காயத்தின் சாற்றினை எடுத்து, பஞ்சுக்களைப் பயன்படுத்தி புருவங்களில் மஜாஜ் செய்து, காலையில் கழுவ வேண்டும்.
எலுமிச்சை பழத்தினை துண்டுகளாக நறுக்கி, கண் புருவத்தின் மீது சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின் எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து, 10 நிமிடங்கள் மஜாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்து புருவங்கள் மீது வைத்து மஜாஜ் செய்து, பின் 10 நிமிடம் ஊற வைத்து நீரில் கழுவ வேண்டும்.
விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த எண்ணெயை இரவி நேரங்களில் தினமும் புருவங்களுக்கு தடவி மஜாஜ் செய்து காலையில் கழுவ வேண்டும். இதனால் அழகான மற்றும் அடர்த்தியான புருவங்களை பெறலாம்.