Home உறவு-காதல் பெண்மை என்பது மென்மை

பெண்மை என்பது மென்மை

32

நீரின்றி அமையாதுலகு என்பதே போல., பெண்ணின்றி விளங்காதுலகு என்பதும் உண்மைதான்.!
ஈராயிரம் ஆண்டு பண்பாட்டினைப் பறைசாற்றிவரும் நம் இலக்கியங்களில் பெண்மையின் பல பரிமாணங்கள் ஆராய்தலுக்குரியது. கல்வி, வீரம், காதல், இயற்கை, ஆன்மீகம் என எல்லா துறைகளிலும் பெண்மை பல இடங்களில் வளர்ச்சிக்குரியது..!

விளக்கென்றால் திரியாக இருப்பாள்., விரலென்றால் நகமாக இருப்பாள். வானமென்றால் இருளில் நிலவாக ஒளி வீசுவாள்., வாழ்க்கையென்றால் இதயத்தில் துணைவியாக ஒளி வீசுவாள்.!

ஆண்மக்களின் உள்ளங்களை ஆட்டிப்படைப்பவலும் பெண் தான்., ஆளுமை திறத்துடன் உலகத்தை ஆள்பவலும் பெண் தான்., மழை தரும் கருநிற மேகமும் பெண் தான்., மனதில் சுகம் தரும் இதய துடிப்பும் பெண் தான்.

கடலில் அலையும் பெண் தான்., கண்ணில் விழியும் பெண் தான்., நம்மை சுமக்கும் பூமித்தாயும் பெண் தான்., நட்போடு நடை பழகியவலும் பெண் தான்.,
அன்போடு ஆதரித்த அன்னை தெரேசாவும் பெண் தான்., அன்புள்ளம் கொண்ட தாய்மை குழந்தைக்காக அகத்தில் இரத்தத்தை பாலாக மாற்றி ஊட்டும் அன்னையும் பெண் தான்.,

உன்னை மடியினில் சுமந்தவளும் பெண் தான்., என்னை கருவறையில் சுமந்தவளும் பெண் தான்..!
பெண்மையை போற்றுவோம்..!