Home பாலியல் பிறப்புறுப்பில் ஏற்படும் பாலியல் நோய்கள்

பிறப்புறுப்பில் ஏற்படும் பாலியல் நோய்கள்

53

பிறப்புறுப்பில் ஏற்படும் உண்ணிகள் (Genital Warts)இது ஹியுமன் பப்பிலோமா எனும் வைரசினால் ஏற்படுகின்ற நோயாகும்.

தொற்ற ஏற்பட்டு இரண்டு வாரமளவில் நோய் வெளிக்காட்டப்படும்.

அறிகுறிகள்

பாலுறுப்புக்களில் உண்ணிகள் வளர்த்தல்-
சிறிய பூக்கோவா போன்ற இளம் சிவப்பு அல்லது செந்நிற உண்ணிகள். இவை நோவை ஏற்படுத்த மாட்டாது .

பாலியல் உறுப்பில் ஏற்பட்ட நோய்களின் படங்கள்

வாய்ப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் தொற்றின் படங்கள்

இந்த உண்ணிகள் பாலியல் தொடர்புக்கு உள்ளாகும் இடங்களான பெண்ணுறுப்பு, ஆணுறுப்பு, குதம் (மல வாயில்) , வாய் போன்ற இடங்களில் ஏற்படும்.
தொடுகை காரணமாக இவற்றில் இருந்து சிலவேளை இரத்தம் வெளிவரலாம்.

இந்த வைரஸ் கருப்பைக் கழுத்திலும் தொற்றை ஏற்படுத்தலாம். இவ்வாறு கருப்பைக் கழுத்திலே தோற்று ஏற்பட்டவர்களுக்கு பிற்காலத்தில் கருப்பைக்
கழுத்து புற்று நோய் கூட ஏற்படலாம். பப் சோதனை (PAP)எனப்படும் சோதனை மூலம் வைரசு தோற்றி உள்ளதா என்று துரிதமாக அறிந்து கொள்ள முடியும்.

கர்ப்பிணிகளுக்கு இந்த நோய் ஏற்பட்டால் பிறப்பின் போது தொடுகை ஏற்படுவதால் குழதைகளுக்கும் இந்த நோய் ஏற்படலாம்.

இப்போதைய வைத்திய வசதிகள் மூலம் இந்த நோயும் முற்றாக குணமாக்கப் படலாம்.

சிபிலிசு (Syphillis)

இது ட்ரிபோனாமா பாலிடம்(Treponema pallidum )எனும் பக்டீரியாவால் ஏற்படுகின்றது.

இது தனது அறிகுறிகளை மூன்று பருவங்களாக வெளிக்காட்டும்.

முதற் பருவத்திலே பிறப்பு உறுப்புக்களைச் சுற்றி காயங்கள் ஏற்படும். அவை சற்றி தடிப்பான காயங்களாக இருந்தாலும் அவை நோவினை ஏற்படுத்தாது.
இந்த பருவத்தில சுகமாக்கப்படா விட்டால் அந்தக் கிருமி பிறப்புறுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்களில் இருந்து குருதியை அடைந்து உடலின் ஏனைய பகுதிகளுக்கு சென்று அறிகுறிகளை ஏற்படுத்தும்.இது இரண்டாவது பருவம் எனப்படுகிறது.

அதாவது இரண்டாம் பருவத்தில் கிருமிகள் உடலின் மற்றைய பாகங்களுக்கு பரவுவதால் உள்ளங்கை , கால் , முகம் போன்ற பகுதிகளில் சிரங்குகள் ஏற்படும். இதன் பொது காய்ச்சல் , மூட்டு வலி , தலை வலி போன்றவையும் ஏற்படலாம்.
இந்த இரண்டாவது பருவமும் சரியாக குனமாக்கப்படா விட்டால் அடுத்த பருவமான மறை பருவம் என்ற நிலை ஏற்படும். அதாவது இரண்டாவது பருவத்தில் ஏற்படும் அறிகுறிகளான சிரங்கு, காய்ச்சல், மூட்டு வலி போன்றவை மறைந்து நோய் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாத நிலையை அடையும்.
இவ்வாறு அறிகுறிகள் மறைந்தாலும் நோய் மற்றவர்களுக்கு தொற்றிக் கொண்டேதான் இருக்கும்.

இந்த மறை பருவமும் சரியான மருத்துவச் சிகிச்சை அளிக்கப் படா விட்டால் நரம்புத் தொகுதி , இதயம் என்பவை பாதிக்கப்பட்டு உயிரிழப்புக்களை ஏற்படுத்தலாம்.

உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால் இந்த நோய் முற்றாக குணமாக்கப் படலாம்.

கர்ப்ப காலத்தில் இந்த நோய் ஏற்படுமானால் கருப்பையில் உள்ள குழந்தைக்கு பல பாதிப்புக்கள் ஏற்படலாம்.

அவையாவன…

கருச் சிதைவு
குழந்தை செத்துப் பிறத்தல்
குறைபாடுள்ள குழந்தைகள்
சிபிலிசு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் போன்றவை.

தெற்காசிய நாடுகளில் உள்ள அனைத்து பெண்களும் கர்ப்பம் தரித்தவுடன் VDRL என்ற சோதனை செய்து தங்களுக்கு இந்த நோய் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுவது உகந்தது.இலங்கையில் உள்ள அனைத்துப் கர்ப்பிணிகளுக்கும் அரசினாலேயே இலவசமாக இந்தச் சோதனை செய்யப் படுகிறது.