Home பெண்கள் தாய்மை நலம் செரிமானக் குறைவாலும் மலட்டுத் தன்மை ஏற்படுமாம்!!!

செரிமானக் குறைவாலும் மலட்டுத் தன்மை ஏற்படுமாம்!!!

37

திருமணமான நிறைய தம்பதியருக்கு கருவுறுதலில் பிரச்சனைகள் எதற்கு ஏற்படுகிறதென்று தெரியாது. அதிலும் இருவருமே நல்ல ஆரோக்கியத்துடனும், அவர்களது இனப்பெருக்க உறுப்புகள் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி இருக்கும். ஆனால் அவர்களுக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கும். அதற்கான காரணங்கள் என்னவென்று சொல்ல முடியாது இருக்கும். அவ்வாறு இனப்பெருக்க உறுப்பில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், கருவுறுதலில் பிரச்சனை இருந்தால், அதற்கான காரணங்களில் ஒன்று சரியான செரிமானம் நடைபெறாததே ஆகும். சரி, இப்போது எப்படி செரிமானக் கோளாறுகளும், இரைப்பையில் ஏற்படும் நோய்களும் கருவுறுதலைத் தடுகின்றன என்பதைப் பற்றி பார்ப்போமா!!!

ஊட்டச்சத்துக் குறைவு: பொதுவாக கருவில் உள்ள குழந்தை வளர்வதற்கு சரியான ஊட்டச்சத்து வேண்டும். ஏனெனில் வயிற்றில் இருக்கும் குழந்தை தாயின் வயிற்றில் சரியாக செரித்து வரும் உணவைத் தான் உண்டு வளரும், ஆனால் அந்த செரிமானம் நன்கு நடைபெறவில்லையென்றால், பிறகு எப்படி குழந்தை உணவை உண்டு வளரும். அதனால் தான் செரிமானக் கோளாறு இருந்தால், கருவுறுதல் தடைபடுகிறது.

ஹார்மோன் குறைவு: எப்போது உடலில் ஹார்மோன் இயக்கத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளதோ, அப்போது அண்டவிடுப்பிற்கு தேவையான ஹார்மோனை நாளமில்லா சுரப்பிகள் வெளியிட முடியாத நிலையில் இருக்கும். இதுவே நீண்ட நாட்கள் நீடித்தால், பின் கருவுறுதல் மிகவும் கடினமாகிவிடும்.

எடை குறைவு: இரைப்பையில் ஏற்படும் ஒரு வகை நோயான குடல் எரிச்சலால், உடல் எடை குறையக் கூடும். மேலும் எப்போது உடல் எடை இருக்க வேண்டிய எடையை விட குறைவாக இருக்கிறதோ, அப்போது மாதந்தோறும் வரும் மாதவிடாய் நின்றுவிடும். அதிலும் இந்த பிரச்சனை உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு ஏற்படும்.

நாள்பட்ட அனீமியா: உடலில் இரத்த அணுக்களான ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் அனீமியா ஏற்படும். இரத்த குறைவு ஏற்படுவதற்கு காரணமும் ஊட்டச்சத்து குறைவினால் தான். ஆகவே உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், குழந்தை ஆரோக்கியமாக பிறப்பது கடினம். சிலசமயங்களில் கர்ப்பம் தறிப்பது கூட கடினமாகிவிடும்.

செலியாக் நோய்: இந்த நோய் செரிமானக் கோளாறால் ஏற்படும். இவை குழிக்குடலில் ஏற்படும் ஒருவித நோய். மேலும் இந்த நோய் உடலில் வந்தால், அவ்வளவு சீக்கிரம் தெரியாது. ஏனெனில் அதற்கான அறிகுறிகள் தெரிந்தாலும், அதை அனைவரும் சாதாரணமாக விட்டுவிடுவோம். இதற்கான அறிகுறி வயிற்றுப்போக்கு ஏற்படுவது போல் தான் இருக்கும். ஆனால் அவ்வாறு போகும் போது அடிவயிற்றில் வலியோடு, வயிற்றுப்போக்கு போகும். மேலும் இந்த செலியாக் உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவிடாமல், வெளியேற்றிவிடும். இதனால் கருவுறுதல் தடைபடும்.

ஆகவே இவற்றையெல்லாம் நினைவில் கொண்டு, உடல் நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். சரியான ஊட்டச்சத்து உணவுகளை உண்டு, அழகான குழந்தையை பெற்றெடுங்கள்…