Home பெண்கள் தாய்மை நலம் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் எடை குறித்த அதிமுக்கிய தகவல்! – கர்ப்பிணிகள் கவனத்திற்கு .

வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் எடை குறித்த அதிமுக்கிய தகவல்! – கர்ப்பிணிகள் கவனத்திற்கு .

30

images (4)தற்காலத்தில் பெரும்பாலான பிரசவங்கள் அறுவை சிகிச்சைமூலமாக வே நடைபெற்று வருகின்றன• சுகப்பிரசவம் ஆவது மிகவும் குறைந்து வருகிறது. மேலும் பொதுவாக
இந்தியக்குழந்தைகள் பிறக்கும்போது 3.5கிலோவிலிருந்து 4கிலோ வரை எடை இருப்பது வழக்கம். இதுதான் குழந்தையின் சரி யான எடையும்கூட. 4 கிலோவுக்குமேல் எடை அதிக ரிக்கும்போது, பிரசவம் சிக்கலாகிறது.
கருவுக்குள் இருக்கும்போதே “பெரிய குழந்தை”யாக இருப்பதை, மருத்துவமொழியில் “மேக்ரோ சோமியா ” என்கிறோம். இந்தப் பிரச்சனை வரு வதற்கு இரண்டு காரணங்கள்.. ஒன்று தானாகவே ஏற்படுவது. இன் னொன்று நாமாக ஏற்படுத்திக் கொள்வது,

கர்ப்பகாலத்தில் சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும் என நாங்கள் அறிவுறுத்துவது குழந்தை யின் எடை அதிகமாகி பிரசவத்தில் சிக்கல்கள் வரக்கூடாது என்பதற்குத்தான்!
குழந்தைக்கு தானாகவே எடை அதிகரிக்கிறது என்றால் (முதல் வகை) சாப்பாட்டில் கொழுப்பு நிறைந்த உணவை அதிகமாக உண்ணும்போதும் ஐஸ்கிரீம், பாதாம், பிஸ்தா போன்ற கொழுப்பு நிறைந்த பருப்புகளை சாப்பிடும்போது குழந் தையின் எடை அதிகமாகிறது. இது இரண்டாவ து வகை. கர்ப்ப காலத்தில் தாய்க்கு சர்க்கரை நோய்இருக்கலாம். அல்லது, பிற்காலத்தில் சர்க் கரை நோய் வரலாம் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

பொதுவாக, பெரியகுழந்தை பிரச்னை. அது எந்த வகையில் வந்தாலும், “டி.ஐ.சி” என்ற பிரச்சனையை தாய் சந்திக்க நேரி டும். “டி.ஐ.சி என்பது பிரசவத்துக்குப்பின், ரத்தத்தின் உறையும் தன்மை தடுக்கப்பட்டு, அதிகமான உதிரப்போக்கு ஏற்படுவது ! அதோடு, “பெரியகுழந்தை”க்காக வயிறு அதிகமா க விரிந்து கொடுப்பதால், மீண்டும் இயல்பு நிலை க்கு சுருங்குவ து தாமதமாகி, வயிறு “தொள தொள” வென ஆகிவிடும். தவிர, இந்த அம்மாக்களுக்கு பிரச வமும் சிக்கலாகிறது.
முதல் குழந்தை இப்படி “பெரிய குழந்தை”யாக பிறந்ததால், அடுத்தகுழந்தையும் இப்படித்தான் பிறக்கும் என்று பயப்படத் தேவையில்லை. இது அவரவர் உணவுப்பழக்கத்தால் உண்டான பிரச்னை என்பதால், அடுத்த குழந்தை உண்டா கும் போது, சாதாரணமான, சமச்சீரான உணவு உட்கொண்டால் போதுமானது.