Home பெண்கள் அழகு குறிப்பு முகப்பொலிவிற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும்… அரிசி கழுவிய தண்ணீர் – ஆச்ச‍ரியத் தகவல்

முகப்பொலிவிற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும்… அரிசி கழுவிய தண்ணீர் – ஆச்ச‍ரியத் தகவல்

22

imagesஅரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி கழுவிய
நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை (Elasticity ) அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
அரிசியை நன்றாக 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும், பின்னர் அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்ட வேண்டும். பின்னர் அந்நீரால் முகத்தையும், கூந் தலையும் பராமரிக்கலாம். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்கு வதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும். அரிசி கழுவியநீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சருமசெல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கிய மாகவும் பொலிவோடும் இருக்கும்.

அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும். கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மை யின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிதுநேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் மென்மைத் தன்மை அதி கரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும். இந்நீரில் கார்போ ஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.