Home ஆண்கள் மலட்டுத் தன்மையை வரவழைத்துக் கொள்ளும் ஆண்கள்..!!

மலட்டுத் தன்மையை வரவழைத்துக் கொள்ளும் ஆண்கள்..!!

30

02அரிது அரிது மானிடராதல் அரிது என்பார்கள். மனித பிறவி அத்துணை உயரிய-அரிய பிறவி அப்படிப் பட்ட ஒரு பிறப்பினை எய்தியவர்கள், இவ்வுலக வாழ்க்கையை முறைப்படி வாழும் போது தெய்வத்துக்குச் சமானமானவர்கள் ஆகிறார்கள்.

ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர், தங்கள் மனம்போல வாழ்ந்து, கண்டபடி திரிந்து, வரைமுறையற்றுப் போய் இருக்கிறார்கள்

அண்மைக் காலமாக ஆண்மைக் குறைவு, ஆண் மலட்டுத் தன்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.

முற்காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை வரைமுறையான வாழ்வுச் சூழல் இரசாயனக் கலப்பற்ற இயற்கை உணவுகள், பெரியவர்களின் வழி நடத்துதல், ஒழுக்கமான வாழ்வு முறை, ஆண்கள் சமூகத்தில் நல்ல சரீர-மன வளத்துடன் வாழ உதவின. ஆண்மைக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் தலை தூக்கியது இல்லை

ஆனால் இன்று இதற்கு நேர்மாறான நிலை இருக்கிறது

நாம் சுவாசிக்கிற காற்றில்கூட கலப்படம், குடிக்கிற தண்ணீர் கூட சுத்தமானதாக, சுகாதாரமானதாக இல்லை மனிதன் எந்திரங்களோடு எந்திரமாகவே மாறிப் போய் வாழ்ந்து வருகிறான்.

எதிலும் நாரிகம், அவசரம் என்ற பெயரில் பாஸ்ட் புட் அந்த ரசாயனக் கலவைகள் உடலில் பக்க விளைவுகளை சேர்த்துக் கொண்டு இருக்கின்றன. இந்த விளைவுகளால்தான் ஆண் விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கை உலகளாவிய அளவில் குறைந்து விடுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆண் விந்துவில் உயிரணுக்கள் அறவே இல்லாதவர்களும் கூடி வருகிறார்கள். இன்னும் சிலருக்கு விந்துவில் செத்த அணுக்களே பிரதானமாக இருக்கின்றது.

சுதந்திரத்துக்குப் பிறகு சுதந்திரம் என்ற பெயரில் மேற்கத்திய கலாச்சாரத்தால் கெட்டுப் போன நிலைதான் இன்றைய ஆண்களின் ஆண்மைக் குறைவு, ஆண் உயிரணு அறவே இல்லாத நிலைமை, பாலியல் நோய்கள், எய்ட்ஸ் போன்ற பிரச்சினைகள்

பெற்றோர்களும் இன்றைய பிள்ளைகளை எப்படி வழி நடத்துவது என்று தெரியாமல், திகைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சிலருக்கோ பிள்ளைகளை வழி நடத்த நேரமும் இல்லை.

இளம் வயதிலே-குறிப்பாக டீன் ஏஜ் பருவத்திலே ஆண்களை ஒழுக்கமான வாழ்வுக்கு வழி நடத்தாததின் விளைவுதான் சுய இன்பம், பிஞ்சிலே பழுத்து பிற மாதர் உறவு, விலைமகள் தொடர்பு, ஹோமோ செக்ஸ் என்ற ஓரினப் புணர்ச்சி உள்ளிட்ட விபரீதங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

இத்தகைய செயல்பாடுகள், பின்னாளில் மலட்டுத் தன்மைக்கு வழி நடத்துகின்றன. சிலருக்கோ உயிரையே பறிக்கிற எய்ட்ஸாக மாறுகின்றது. இன்னும் சிலருக்கோ திருமணம் முடிந்து, முறைப்படி அனுபவிக்க வேண்டிய தாம்பத்ய இன்பத்தை மனைவியுடன் அனுபவிக்க இயலாமல் அவதியுறுகிற அவலம்… சொல்லிக் கொண்டே போகலாம்.

இளைய தலைமுறை பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல அவர்களும் சுதந்திரம் என்ற பெயரில், நினைத்த நேரத்தில், நினைத்தவருடன் சுற்றித்திரிந்து, திருமணத்துக்கு முன்பே தாம்பத்ய சுகத்தை பெற்று விடுகிற அவலமும் நடக்கிறது. இதனால் பிறப்புறுப்பிலே தொற்று, கருப்பையிலே தொற்று உள்ளிட்ட பல பிரச்சினைகளை தாங்களே வரவழைத்துக் கொள்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலோர் திருமணமாகி முறைப்படியான தாம்பத்ய உறவு, குழந்தைப் பேறு போன்றவற்றுக்கு வழியற்று, கண்ணீரில் வாழ்க்கையை கரைத்துக்
கொண்டிருப்பதை என் மருத்துவ அனுபவத்தில் நாளும் பார்க்கிறேன்.

இப்படிப்பட்ட ஆண்மைக்குறைவு, பெண் மலட்டுத் தன்மை, திருமணத்துக்கு முன்னதாகவே பாலுறவு போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க தகுந்த விழிப்புணர்வு இங்கே உருவாக்கப்பட வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்வுக்கு, ஒழுக்கமும், இயற்கை உணவும், பெரியவர்களின் வழிநடத்துதலும், சித்த மருத்துவமும் இணைந்து கை கொடுக்கும் ஏற்கத்தான் இன்றைய தலைமுறை தயாராக வேண்டும்.