Home உறவு-காதல் மனைவியிடம் சத்தியம் செய்து மாட்டிக்கொள்ளும் கணவன்மார்கள்

மனைவியிடம் சத்தியம் செய்து மாட்டிக்கொள்ளும் கணவன்மார்கள்

20

imagesசத்தியங்கள் நீங்கள் செய்து மறப்பதற்கு செய்யாமலேயே இருந்து விடலாம். ஏனெனில் அதன் எதிர்விளைவு மற்றும் வீரியம் ஓரிரு நாட்கள் என்ன, ஓரிரு வாரங்கள் கூட நீடிக்கலாம். சில சமயங்களில் கணவன் செய்யும் சத்தியம் மனைவியிடம் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை மறக்க கூடாது.

நகை மற்றும் புடவை விஷயத்தில் நீங்கள் உங்கள் மனைவியிடம் சத்தியம் செய்து மறப்பதும், தனக்கு தானே சங்கு ஊதிக் கொள்வதும் ஒன்று தான். உங்கள் மனைவியை பத்திரகாளியாக பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் இந்த சத்தியத்தை நீங்கள் செய்யலாம்.

என்னதான் நீங்கள் தங்க தட்டில் வைத்து பார்த்துக் கொண்டாலும் கூட, தனது பிறந்த வீட்டிற்கு செல்வது என்பது பெண்களுக்கு எப்போதுமே குதூகலம் அடையும் ஓர் தருணம். இந்த விஷயத்தில் சத்தியம் செய்து ஏமாற்றினால் இரவு பட்டினியாக தான் தூங்க வேண்டும்.

மனைவி முக்கியமாக, அழுத்தமாக சீக்கிரம் வீட்டிற்கு வர சொல்லும் போது தான், நாம் மிகவும் நேர தாமதமாக செல்வோம்.

திருமணமானவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்த தருணத்தில் பெண்களின் முக பாவனை நவரசத்தையும் தாண்டும் என.

இது மனைவியை மட்டுமல்ல, குழந்தைகளையும் கூட எரிச்சலூட்டும் சத்தியம். அவர்கள் தயாராகி கிளம்பலாம் என்று இருக்கும் போது தான், என்னால் இப்போது முடியாது, முக்கியமான வேலை, தாமதமாகிவிடும் என்று நேற்று செய்த சத்தியத்தை, சுத்தியல் கொண்டு உடைப்பார்கள் ஆண்கள்.

வீட்டு வேளைகளில் ஆண்கள் செய்யும் சத்தியங்களுக்கு எல்லையே கிடையாது, அதை செய்து விடுகிறேன், இதை செய்து விடுகிறேன் என கடைசியில் ஒன்றைக் கூட செய்ய மாட்டார்கள்.

மின்சாரம், தண்ணீர், வீட்டுவரி என ஆண்கள் தான் கட்ட வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் நிறைய பில்கள் இருக்கின்றன. இதை சொல்லும் தேதியில், சரியான நேரத்தில் முடிக்கும் ஆணாக நீங்கள் இருந்தால், உங்களுக்கு நீங்களே ஒரு முறை சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள்.

ஏனெனில் 99.9% பேர் இதை உரிய நேரத்தில் செய்வதில்லை என மனைவிகள் மன்றம் குற்றம் சாட்டுகிறார்கள்.

திருமணம், பிறந்தநாள், நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விசேஷம் போன்றவை ஆண்களின் மண்டையில் சேமிப்பது மிகவும் கடினம். மறந்த பிறகும் கூட நினைவில் இருப்பது போல உளறிக்கொட்டி மனைவியிடம் மாட்டிக் கொள்ளும் ஆண்கள் கூட்டம் மிகவும் பெரிது.