Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெரிய மார்பகங்களால் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் – தடுக்கும் வழிமுறைகள்

பெரிய மார்பகங்களால் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் – தடுக்கும் வழிமுறைகள்

15

feebc2e5-c29b-4352-8d41-97455dba11ba_S_secvpfபெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.

பொதுவாக மார்பகங்கள் வயதாகினால், தாய்ப்பால் கொடுப்பதால், சரியான உள்ளாடைகளை அணியாததால், ஊட்டச்சத்து

குறைப்பாட்டினால், இறுதி மாதவிடாய் நெருங்கினால் மற்றும் புவி ஈர்ப்பு விசையினால் தொங்க ஆரம்பிக்கும்.

ஆனால் பெண்கள்

தங்களின் மார்பகங்கள் தொங்கி காணப்படுவதற்கான காரணங்கள் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. மாறாக, அறுவை சிகிச்சை

மூலம் அதனை சரிசெய்ய நினைக்கின்றனர். இதனால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா?

ஆனால், தொங்கும் மார்பகங்களை ஒரு சில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம். இங்கு அசிங்கமாக காணப்படும் தொங்கும்

மார்பகங்களை சரிசெய்வதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி வந்தால், மார்பகங்கள் தொங்கிக்

காணப்படுவதைத் தடுக்கலாம்.

உடலில் புரோட்டீன் குறைபாடுகள் இருந்தால், அவை மார்பக தசைகளை தளரச் செய்து, மார்பகங்களைத் தொங்கச் செய்யும். ஆகவே,

புரோட்டீன் உணவுகளுடன், தக்காளி, வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பூண்டு போன்ற காய்கறிகளையும் உணவில்

அதிகம் சேர்த்து வந்தால், மார்பகங்களை அழகாக சிக் கென்று வைத்துக் கொள்ளலாம்.

தரையில் படுத்துக் கொண்டு டம்ப்பெல்ஸ்(Dumbbells) மார்பகங்களுக்கு மேலே தூக்கி 20 வரை எண்ணிக் கொண்டு பிடித்திருக்க வேண்டும்.

பின் அதனை மார்பகங்களுக்கு பக்கவாட்டில் மடக்கி 20 வரை எண்ணிப் பிடிக்க வேண்டும். இது போல் தினமும் 15 முறை செய்தால்,

மார்பகங்களின் தளர்ச்சியைத் தடுக்கலாம்.

குப்புறப்படுத்துக் கொண்டு, கைகளை தரையில் மார்பங்களுக்கு நேராக நீட்டி உடலே மேலே தூக்கி, கால்களை மேல்புறமாக தூக்கி,

தரையைத் தொடாமல் முன்புறமாக குனிந்து 20 வரை எண்களை எண்ணி, பின் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல வேண்டும்.

இதுபோன்று தினமும் 15 முறை செய்து வந்தாலும், தொங்கும் மார்பகங்களை சரிசெய்யலாம்.

ஐஸ் கட்டிகளை எடுத்து மார்பகத்தின் மீது வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்யும் மசாஜானது ஒரு நிமிடத்திற்கு

மேல் செய்யக் கூடாது. இல்லாவிட்டால், ஐஸ் கட்டிகளானது மார்பகங்களில் கட்டிகளை ஏற்படுத்திவிடும். இப்படி ஒரு நாளைக்கு 3

முறை செயது வந்தால், மார்பக தசைகளானது வலிமையடையும். பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் மார்பகங்களை மசாஜ் செய்து

வந்தாலும், மார்பகங்களானது இறுக்கமடைய ஆரம்பிக்கும்.