Home பாலியல் பெண்ணும் பாலுறவும்

பெண்ணும் பாலுறவும்

132

53d7a-ileanahotandromanticphotos281729பெண்ணுக்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகரமாக நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு உண்மையாக வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன் மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு இருக்கிறது. இதற்கு மனரீதியாக, உடல் ரீதியாக பல்வேறு காரணங்களும், பாலுறவு பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங்களாக அமைந்திருக்கின்றன.

திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார்களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திருமண உறவில் முழுமையான மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது. இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணும் திருமண உறவில் விரிசல் – விவாகரத்து போன்றவையாகும். எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ்வில் இணையப்போகும் இளம் வயதினரும் பாலுறவு பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது இன்றியமையாதது ஆகும்.

சமீப காலம்வரை பெண்களுடைய பாலுணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோங்கி இருந்தது. இன்று நிலை மிகவும் வேகமாக மாறி வருகிறது. பெண்களும் முழுமையான இன்பம் அனுபவிக்க வேண்டும். அவ்வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இயற்கையில் பார்த்தால் ஆண்களைவிட பெண்களே பாலுறவில் அதிகமான இன்பம் துய்ப்பதற்கான உடலமைப்புடன் காணப்படுகின்றனர்.

இதற்கான சான்றுகள் பல உள்ளன. பெண்ணின் மார்பகம், பெண் உறுப்பு, கிளிட்டோரிஸ் ஆகிய மூன்று உறுப்புகளையும் சொல்லலாம். இவ்வுறுப்புக்களின் மூலம் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும். ஆனால் ஆணோ, ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடைய முடியும்.

இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண், இடைவெளியில்லாமல் பல முறை உச்ச கட்டத்தை அடைய முடியும். ஆனால் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற்றொரு எழுச்சிக்காகக் காத்திருக்க வேண்டும். உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும்பாலும் அனுபவிப்பதே இல்லை இவற்றை போக்குவது எவ்வாறு?

பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டும் உறுப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் ஆண்களிடம் ஒரு தெளிவு இருக்கவேண்டும். உடலுறவின்போது பெண்ணைத் திருப்திப்படுத்துவது எவ்வாறு என்பது பற்றி முழுமையாக அறிந்திருக்கவேண்டும்.

பெண்ணிடம் உள்ள பாலுறவு தொடர்பான குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், பாலியல் நிபுணர் ஒருவர் மூலம் அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டக்கூடாது.

சரி, பெண்ணுடைய பாலுறுப்புக்கள் எவ்வாறு தூண்டப்படுகின்றன என்று பார்க்கலாம்.

பெண்ணுடைய மார்புகள் சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும், அதை, ஆண் தூண்டுவதன் மூலம் பெண்கள் இன்பமும், கிளர்ச்சியும் அடைகிறார்கள்.
உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும்போதே மார்புகளும் பெரிதாகிறது. மார்பகக் காம்புகள் விறைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்புக் காம்புகளை ஆண் தொடும் தூண்டலாலேயே முழுமையான உச்சகட்டத்தை அடைகின்றனர். ஆனால் மற்றும் சிலரோ அந்த அளவு உணர்வுகளைப் பெறுவதில்லை.

கணவன்-மனைவியின் மார்பு காம்புகளை நாக்கினால் வருடுவதாலும், சுவைப்பதினாலும் பெண்ணுடைய உணர்வுகளை மிகவும் தூண்டலாம். பெண்களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுதலினால் எரிச்சலே அடைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களுடைய இன்பத்திற்கேற்றவாறுதான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண்கள் இந்நிலையில் மார்பகங்களை எவ்வாறு தூண்ட வேண்டும்? என தங்கள் துணைவருக்கு இனிமையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

மற்ற தூண்டுதல்களைவிட பெண்கள் அதிக உணர்ச்சிக்கு ஆளாவது கிளிட்டோரிஸ் தூண்டுதல் மூலம்தான். சாதாரணமாகவே சைக்கிள் ஓட்டுதல், தையல் இயந்திரத்தை இயக்குவது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப்படுவதால் பெண்களில் சிலர் ஓரளவு கிளர்ச்சி அடைகின்றனர்.

உடலுறவை ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரிஸைத் தூண்டுமாறு மனைவி கூறலாம். இதை விரல்களின் மூலமும், நாக்கின் மூலமும் தூண்ட முடியும். தொடர்ந்து பல நிமிடங்கள் தூண்டுவதன் மூலம் பெண்களை உச்சக் கட்டத்தை அடைய வைக்கலாம்.

இதன் வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின்போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சினை. பெண்ணுறுப்பின் நுழைவாயில் சில சமயம் இறுக மூடிக்கொள்ளும். ஆணுறுப்பை மட்டுமின்றி, கைவிரலைக்கூட அனுமதிக்காத அளவு இறுக்கமாக இருக்கும். 5 சதவிகிதம் வரை பெண்களுக்கு இந்நோய் இருக்கலாம். இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பயமாக இருக்கும். இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணுக்கு விறைப்புத்தன்மைகூட ஏற்படாமல் போகக்கூடும். இது முழுமையாக குணப்படுத்தக்கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப்படுத்திக்கொள்ள முன் வரவேண்டும். இதன் மூலம் தம்பதியினர் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையையும் குழந்தைப் பேற்றையும் அடைய முடியும்.

உச்ச கட்டத்திற்கு பின்பும் பெண்கள் தங்கள் உடலை ஆண்கள் வருட வேண்டும், தங்களை கட்டி அணைத்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். ஏனெனில் உச்ச கட்டத்திற்கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உடனடியாக கீழிறங்குவதில்லை. மாறாக, ஆண்கள் விந்து வெளியானவுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்களிடம் உச்ச கட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடுகின்றது.

பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச்ச கட்டம் அடையப் போதுமானதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களுக்கு தூண்டுதல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற்கு தனிமை இல்லாமல் குழந்தைகளுடன் தூங்குவது, உடலுறவு கொள்ளும் நேரம், இடம் வசதி, கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை என்று பல காரணங்கள் இருக்கலாம்.

ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவதுபோல பெண்களுக்கு பெண்மைக் குறைவு அல்லது உடலுறவில் நாட்டமின்மை ஏற்படலாம். இப்பெண்கள் உடலுறவில் ஈடுபட்டு கருத்தரித்துக் குழந்தை பெற்றுக்கொண்டாலும், இவர்கள் உடலுறவில் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கையை ஒரு கடமையாகவே செய்கிறார்கள். இதற்கு, சிறு வயதில் ஏற்பட்ட பாலுறவு தொடர்பான கசப்பான அனுபவங்கள், குடும்பச் சூழல் மற்றும் வளர்ப்பு முறை போன்றவையாகும்.

ஆண்களுக்கான ஆண்மைக்குறைவு விந்து முந்துதல் போன்ற பிரச்சினைகளை விஞ்ஞான முறையில் நூறு சதவிகிதம் குணப்படுத்த முடியும். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண்களுடைய பிரச்சினைகளையும் முழுமையாக குணப்படுத்த இயலும். பிரச்சினைக்கான காரணங்களை அறிந்து அதனை முற்றிலுமாக களைந்து குணப்படுத்தலாம்.
சில வகை பொதுவான நோய்களான காசநோய், புற்றுநோய், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின்போது அந்த நோயாளிகளுக்கு எல்லா விடயங்களிலும் கவனமும் ஆர்வமும் குறைந்து வருவதால் இயல்பாக பாலுறவிலும் அவர்களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்துவிடும்.

பல பெண்கள், வெளித்தோற்றத்தில் மிக அழகாக இருந்தாலும் அவர்களது உள்ளுறுப்புக்கள் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். முக்கியமாக பிறப்புறுப்பு. அதில், காளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்படுத்தும். ஹெர்பிஸ் எனும் பிறப்புறுப்பு நோயினாலும் உடல் உறவின்போது வலி ஏற்படலாம். வெஜினியஸ்மெஸ் என்பது<, பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படும். இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலியல் உணர்ச்சிகளை பாதிக்கலாம். இதனை இன்றைய நாளில் எளிதாக குணப்படுத்தி விடலாம். பெண்ணுக்கு மாத விலக்கு நின்ற (மெனோபாஸ்) பின்னர் பாலியல் உணர்ச்சி குறைந்துவிடும் என்று பலர் எண்ணுகிறார்கள். இது தவறு. இயல்பான பாலியல் உணர்ச்சி இருக்கும். இன்னும் சொல்லப் போனால் அந்த உணர்ச்சி கூடுதலாகக் கூட இருக்கலாம். உடல் உறவின்போது திருப்தி என்பது அதிகமாகவும், இன்பமாகவும் இருக்கும். குழந்தை பிறந்து விடுமோ என்கிற அச்சமின்றி உடல் உறவில் ஈடுபடலாம். மாதவிலக்கு நின்றபின் உடல் உறவில் ஈடுபடுவதால் எந்த பாதிப்பும் வராது. இப்பெண்களுக்கு மாதவிலக்கு நின்றுபோனதால் பெண் உறுப்பில் திரவம் சுரக்காது என்பதால் சில சமயம் உடல் உறவின்போது எரிச்சல் இருக்கும். இதற்கு இன்று அதிநவீன ஜெல்லிகள் கிடைக்கின்றன. நிரந்தரமான இன்பம் பெற இவர்கள் மெனோபாஸிற்கு பிறகு ஹார்மோன் ரிபிளேஸ்மென்ட் தெரபி மூலம் சிகிச்சை பெறலாம். மேலை நாடுகளில் இது சகஜமான ஒன்று. பெண்களின் ஓரினச்சேர்க்கைக்கு லெஸ்பியன் என்று பெயர். இது தற்கிளர்ச்சிக்கும், சுய இன்பத்திற்கும் இணையானது. விடுதியில் தங்கியிருக்கும் சில மாணவிகள், பெண்களிடம் இப்பழக்கம் இருக்கிறது. திருமணமான பெண்கள் இதில் ஈடுபடுவதற்கு காரணம் கணவன் மூலம் திருப்திகரமான உச்சக்கட்டம் அடையாததுதான். மாணவிகளுக்கு சூழ்நிலை ஒரு காரணமாக உள்ளது. இந்த லெஸ்பியன் பழக்கம் அளவுடன் இருக்கும்வரை தவறில்லை. அளவுக்கு மீறினால்தான் தவறானது. சில சமயம் அளவுக்கு மீறிப் போகும்போது ஆண்களையே வெறுக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடிய அபாயம் இருக்கிறது. பாலியல் ரீதியான குறையுடனேயே வாழ்நாள் முழுவதும் வாழாமல் குறையை நிவர்த்தி செய்வதற்கு நவீன மருத்துவம் சிறந்த வழிகாட்டுகிறது.