Home உறவு-காதல் பெண்கள், காதலித்து விட்டால் . . . !- அனுபவசாலிகள் கூறும் உண்மைகள்

பெண்கள், காதலித்து விட்டால் . . . !- அனுபவசாலிகள் கூறும் உண்மைகள்

22

பெண்கள், காதலித்து விட்டால் . . . !- அனுபவசாலிகள் கூறும் உண்மைகள்.
காதல் என்பது புனிதமான ஓர் உணர்வு என்றாலும் அதில் ஆண்கள் ஒரு விதமாகவும், பெண்கள் வேறு
விதமாகவும் சிந்திக்கின்றனர்.
காதல் செய்பவர்களில் அதிகம் யோசிப்பவர்கள் யார் என்று பார்த்தால், அது பெண்கள் தான். ஏனெனில் அவர்களுக்கு சற்று பயம் அதிகம். அந்த பயத்தால் தான் அவர்கள் தனக்கு காதல் இருந்தாலும், அதை வெளிப்படுத்த தயங்கு கிறார்கள்.

மேலும் பெண்களின் மன மானது ஒரு பூ போன்றது. அதில் அவர்கள் எப்போ தும் சந்தோஷம் வேண்டு ம் என்றுதான் விரும்பு வார்கள். மேலும் அவர்க ள் மனதில் ஒரு சில கேள்விகள், சந்தேகங்கள் எழுவ தாலும் அவர்கள் வெளிப்படுத்த மறுக்கிறார்கள். சரி, இப்போது பெண்கள் எதனா ல் தங்கள் காதலை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர் என்ற உண்மையை அனுபவ சாலிகள் கூறுகின்றனர்.
அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களே ன்…
* பெண்களின் காதலில் முதலில் தடையாக இருப்பது அவர்களது பெற்றோர்கள் தான். ஏனெனில் இத்தனை நாட்கள் தன்னை பெற்று வளர்த்தெடுத்த பெற்றோர் தன் காதலை ஒப்புக் கொள்ள வில்லையெனில் என்ன செய்வது என்ற ஒரு பயம், எப்போதுமே அவர்களது மனதில் இருக்கும். இத னால் அவர்கள் தங்கள் மனதி ல் காதல் இருந்தாலும், அதனை வெளிப்படுத்தாமல், மன திலேயே வைத்துக் கொள்வர்.
* பொதுவாக பெண்கள் காதல் செ ய்துவிட்டால், காதலிப்பரையே மணக்க வேண்டும் என்று நினை ப்பார்கள் . அது நடக்காவிட்டால், பின் அவர்கள் மனதை கல்லாக் கிக் கொண்டு பெற்றோர் சொல்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் வேண் டுமா என்று நினைத்து, அந்த காதலை மனதிலே யே புதைத்துவிடுவர்.
* நமது சமுதாயம் கூட பெண்களின் காதலை வெளிப் படுத்துவதற்கு ஒருவித தடையாக உள்ளது என்றும் சொல்லலாம். ஏனெனில் நமது சமுதாயத்தில் ஜாதி, மதம் போன்றவற்றை அதி கம் பார்ப்பது வழக்கம். இதனால் எவரும் விரும்பி யவர்களை மணக்க முடியா த நிலை ஏற்படுகிறது.
அதிலும் ஒரு இந்து பெண், கிறித்துவ ஆணை மணந் துவிட்டால், அந்த சமுதாயம் அதனை வித்தியாசமாக பார்ப்பதோடு, தவறாக பேசுவ தால், வீட்டில் இருக்கும் பெற் றோர்களும் அவர்களை ஏற்க மறுக்கின்றனர். இதுவும் பெ ண்களின் காதலுக்கு தடை யாக உள்ளது. ஆண்கள் தைரி யத்துடன் பார்க்கலாம் என்று இருப்பார்கள். ஆனால் பெண்கள் அத்தகையவர் கள் அல்ல.

* சில பெண்கள் தைரியத்துடன் காதலித்து தான் திரு மணம் செய்து கொள்ளலாம் என்று இ ருப்பார்கள். ஆனால் சில ஆண் கள் காதலித்து மணப்பதற்கு தைரியமின்றி, காதலித்தப் பின் அவர்களை விட்டு போ ய்விடுவார்களோ என்ற எண்ணத்தில், காதல் தனக்கு வந்தாலும் மனதை கல்லாக்கிக் கொ ண்டு வெளிப்படுத்த தயங்குவார்கள். இந்த விஷயத்தில் பெண்களுக்கு நம் பிக்கை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
– மேற்கூறிய காரணங்களாலேயே பெண்கள் தங்கள் மனதில் காதல் மலர்ந்தாலும், அவற்றை மறைத்து மனதிலேயே புதைத்து விடுகின்றனர்.