Home பாலியல் பெண்களே திருமணத்திற்கு முன் செக்ஸ் கூடாது?

பெண்களே திருமணத்திற்கு முன் செக்ஸ் கூடாது?

30

downloadஇந்தக் காலத்து சின்னஞ் சிறுசுகளுக்கு, முக்கியமாக டீன்-ஏஜ்ஜில் உள்ளவர்களுக்கு, செக்ஸ் ஒரு விளையாட்டாகவே ஆகிவிட்டது. வாழ்க்கைக்குத் தேவையான செக்ஸ் என்பது முறையாகத் திருமணம் ஆன பின்பு மட்டுமே ஆண்-பெண் இருவர் மனத்திலும் வர வேண்டும்.

அதை விட்டு, டேட்டிங் என்ற பெயரில் ஆடைகளைக் களைந்து விட்டு செய்யப்படும் ஒரு கொச்சையான மொழியாகவே செக்ஸ் மாறிவிட்டது. அதுமட்டுமல்ல, நம் இந்தியா போன்ற நாடுகளில் அது ஒரு பெரும் கலாச்சார சீர்குலைவிற்கும் காரணமாகி உள்ளது. காதல் என்பதைத் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு, இனக் கவர்ச்சிக்கு அடிமையாகி, வயிற்றில் கருவைச் சுமந்து கொண்டு தவிக்கும் எத்தனையோ இளம் பெண்கள் கடைசியில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

• நம் வாழ்க்கைத் துணையை முறையாகத் திருமணம் செய்து கொண்ட பின்பே அவனை கட்டிலில் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். அதுவரை பொறுத்துத்தான் ஆக வேண்டும். அப்போதுதான் இருவருக்குமிடையே அன்பும் அதிகரிக்கும்.

• செக்ஸ் என்பது ஒரே இரவில் முடிந்துவிடக்கூடிய விஷயமல்ல. அதற்காக ஒரு சர்ப்ரைஸோடு காத்திருத்தல் அவசியம். அதற்கு, திருமணம் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

• இந்தக் காலத்தில் செக்ஸ் தொடர்பான பல வியாதிகளிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ள வேண்டுமென்றால், திருமணத்திற்கு முன் செக்ஸைக் கண்டிப்பாகத் தவிருங்கள்.

• நீங்கள் டேட்டிங் தொடர்பு வைத்துள்ள நபருக்கு உங்கள் கவர்ச்சி பிடிக்காமல் போயிருக்கலாம். சந்தோஷமாக குட்-பை சொல்லிவிட்டு வந்து விடுங்கள். செக்ஸ் பிரச்சனையிலிருந்து எளிதில் தப்பித்துக் கொள்ளலாம்.

• எதையாவது பழகி விட்டு, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறீர்களா? அப்படியென்றால், செக்ஸ் விஷயத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அப்படியே மாட்டிக் கொண்டாலும், அந்தப் பழக்கம் திருமணத்திற்குப் பின்பே வரட்டும்.

• தகாத முறையில் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொண்டால், அது தொடர்பான வியாதிகளை நீங்களும் பரப்புவதற்குக் காரணமாகி விடுவீர்கள். அதாவது, செக்ஸ் வியாதிகள் ஏற்கனவே உங்களுக்கு இருந்தால், அது மற்றவர்களுக்கும் பரவ நேரிடும்.