Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ந‌மது உடலிலிருந்து வியர்வை அதிகளவில் வெளியேறினால் . . .

ந‌மது உடலிலிருந்து வியர்வை அதிகளவில் வெளியேறினால் . . .

22

ந‌மது உடலிலிருந்து வியர்வை அதிகளவில் வெளியே றினால் . . .
வியர்ப்பது நல்லதுதான் என்பது எல்லோருக்கும் தெரி யும், ஆனால் அளவுக்கு அதிகமாக வியர்த்தால்? அது வும் குண்டாக இருப்பவர்களுக்கு
அதிகளவில் வியர்க்கும் இது நல்லதா? நிச்சயம் நல்ல துதான். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக வியர்க்கின்றதோ அந்தள விற்கு நல்லதாம். பலர் அந்த வியர் வையைக் கட்டுப்படுத்த நிறைய முய ற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனா ல், வியர்ப்பதால் உடல் எடை குறை யுமாம். வியர்வை அதிகம் வந்தால், உடல் பருமனானது குறையும். அது மட்டுமின்றி, விய ர்வை வெளியேறுவதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. எனவே, அதிகம் வியர்த்தால், சற்று வியர்க்க வழி விடுங்கள்.
ஆனால், தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் வியர்வை அதிகம் வெளியேறினால், உட லின் நீர்ச்சத்தானது குறைந்து விடும். பொலிவானசருமம் வேண்டுமென்று நீங்கள் ஆ சைப்பட்டால், நன்கு வியர்க்க விடுங்கள். ஏனெனில் வியர்க் கும்போது சருமத்துளைகளானது விரி வடைந்து, அதன்வழியே வியர்வை வெளியேறுவதால், சருமத்துளைகளி ல் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, சருமத்தை பொலிவாக வும், மென்மையாகவும் மாற்றுகிறது.
வியர்வை அதிகம் வெளியேறினால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது ஊக்குவிக்கப்படும். அதனால்தான் காய்ச்சலின்போது வியர்த்தால், காய்ச்சலானது குண மாகி விடுகிறது. உடற்பயிற்சியின் போது வெளிவரும் வியர்வையானது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. அதிலும் வாக்கிங் அல்லது வேறு ஏதேனும் உடற் பயிற் சி செய்தால், இதயமானது வேகமாக இரத்தத்தை அழு த்துவதால், உடல்முழுவது ம் இரத்த ஓட்டம் சீராக இரு ந்து, உடலின் மெட்டபாலிச மானது அதிகரித்து, உடல்எடை குறைய வழிவகுக்கிற து.
தினமும் தொடர்ந்து செய்து வந்தால், சிறுநீரகமானது சீராக செயல்பட்டு, சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப் பு குறையும் என்று நிரூபிக் கப்பட்டுள்ளது. இதற்கு உட ற்பயிற்சி செய்து முடித்த பின்னர், அதிகளவில் தண்ணீ ர் மற்றும் இதர பானங்களான இளநீரை குடிக்க தோன் றுவதே காரணமாகும். இதனால்தான் சிறு நீரகத்தில் நச்சுக்கள் தங்காமல் வெளியே றிவிடுகிறதாம்.
மேலும், ஆய்வுஒன்றில் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது நன்கு வியர்வையானது வெளியேறினால், மன அழுத்தம், சோர்வு போன்றவை நீங்கி, மன நிலையானது புத்துணர்ச்சி அடைவ தாக சொல்கிறது. இதற்கு காரணம் உடற்பயிற்சியின் போது மூளையில் உள்ள கெமிக்கல் களானது ஊக்குவி க்கப்பட்டு, ஒருவரின் மனதை சந்தோ ஷமாகவும், ரிலாக் ஸாகவும் வைக்க உதவுகிறது.