Home உறவு-காதல் திருமண வாழ்க்கையின் அடித்தளமே, எல்லையற்ற அன்பு காட்டுவதுதான்!!

திருமண வாழ்க்கையின் அடித்தளமே, எல்லையற்ற அன்பு காட்டுவதுதான்!!

18

imagesதிருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப் பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இ ருப்பதுபோல ஆளாளுக்கு கண்டி ஷன் போட்டு விடுகிறார்கள். ஆ னால் விட்டுக்கொடுத்து வாழ்வ தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவரு க்காவது புரிந்தால்தான் வாழ்க் கை நிலைத்திருக்கும். மண வாழ் வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டு மானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவது ஒன்றுதான் வழி.
01) திருமணத்திற்கு முன்பு கொஞ்சம் தனியாகப் பேசுவோம் என்னும்போதே `இவர் இப்ப டித்தான்’ என்ற முடிவுக்கு வந்து விடுகிறா ர்கள் பலர். எல்லோருக்கு ள்ளும் எதிர்பா ர்ப்பு, லட் சியம், ஆசை, கோப ம் அனை த்தும் இருக்கும் என் பதை மறந்து விட்டு `எனக்கு இவர் வேண்டாம்’ என்று சொ ல்லி விடுகிறார்கள். கேள்வி கேட்பது, கண்டிஷன் போடு வது மட்டும ல்லாமல் சந்தி த்து பேசும்போதே தங்களின் முக்கிய மான எதிர்பார்ப்புகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். திருமணத்தை சுமையாக எண் ணாமல், புனித மானதாக எண்ணுங்கள். இயல்பாக வாழ் வைத் தொடங் குங்கள்.

அப்பா அம்மா சொன்னார்கள் என்பதற்காக கழுத்தை நீட்டி விட க்கூடாது. வாழப்போகும் நீங்கள் வரப்போகிறவர் குண நலன்க ளோடு சமன்பட்டு வாழ முடியு மா? என்பதை புரிந்து கொண்டு முடிவை அறிவியுங்கள்.
02) திருமணம் செய்துவிட்டால் இருவருமே ஒருவருக்கொ ருவர் நம்பிக்கைக்குரியவராய் வாழ்தல் வேண்டும். இருவ ருமே ஆசையில் ஒன்று கூடுவதுபோல லட்சிய பய ணத்தில் மற்றவர் பாதை யில் தடையாக இல்லாமல் துணையாக இருப்பது அவ சியம். அதுவே மகிழ்ச்சியா ன வாழ்வுக்கு அஸ்திவார மாக அமையும்.

03) குறைகளை மறைத்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அது எப்போது வேண்டுமானாலும் பூதாகரமான பிர ச்சினையை ஏற்படுத் தும். மணமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதி யாகவும் திருமண பந் தத்திற்கு தயாராக வே ண்டும். சின்னச்சின்ன விஷயங்களை பெரிது படுத்தாமல் சிக்கல்க ளை தீர்ப்பதில் மட்டு மே திறமையை காட்ட வேண் டும். சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ் வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளி தாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.
04) நண்பர்களின் வேடிக்கைப் பேச் சும், திருமண `ஜோக்கு ’களும் திருமணம் கஷ்டமான விஷயம் என்பது போல்தான் காட்டப்படு கிறது. ஆனால் யதார்த்தத்தில் அ ப்படி கிடையாது. ஜோக்கை நம்பி மனைவி தாயார் வீட்டிற்கு செ ன்றிருப்பது சுகமான தருணம் என் று எண்ணுவதும், பேசுவதும் கூ டாது. கருத்து வேற்றுமையின் போது தவறுகளை மட்டுமே எண் ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். `இல்லறத் தில் காலம் முழுக்க இணைந்தி ருப்பேன்’ என்று உறுதி ஏற்று செய ல்பட்டால் அன்பும், விட் டுக்கொ டுத்தலும் இயல்பாக வந்து விடும்.
05) மணமக்கள் இருவரும் வெவ் வேறு சூழலில் வளர்ந் தவர்கள், வாழ்ந்தவர்கள் என்பதை உணர்ந் தால் `அவர் எனக்காக மாற வேண் டும்` என்ற எண்ணம் யாருக்கும் எழாது. சில மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரும். மகிழ் ச்சி குடியேறும். திருமணம் முடிந்த தும் மனைவியின் கேரக்டரை ஆராயத் தொடங்கிவிடக்கூடாது. மாமியார்-மருமகள் பிரச் சினை தலைதூக்கும்போது நடுநிலையில் செயல் பட வேண் டியது கணவரின் பொறுப்பு. அவர் தான் இருவருக்கும் உறவுப்பாலத் தை உருவாக்க கடமைப்பட்டவர்.
06) கணவன் மனைவியின் சில அந்த ரங்கங்களை எவ்வளவு கருத்து வேறு பாடு ஏற்பட்டாலும் நண்பர்கள் உள் பட யாரிடமும் வெளியிடக்கூடாது. உங்களால் தீர்க்க முடியாத பிரச்சி னைகளுக்கு மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள், பெரியோர் உதவியை நாட வேண்டும். பூசல்கள் மிகுந்தாலும் அயலா ரை மூக்கை நுழைக்க விடக்கூடாது. தம்பதிகள் தங்கள் வளர்ச்சியை மற்றவர்களோ டு ஒப்பிட்டுக் கொள்ளக் கூ டாது. விரும்பிய மாற்றங் கள், வளர்ச்சி ஏற்படாததற்கு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சுமத்தாதீர்கள். தின மும் சிறிது நேரமாவது மனம் விட்டு பேசுங்கள்.
இன்றைய பெண் பணிக்குச் செல்லும் லட்சியப் பெண்ணா கவும், அன்பான தாயாகவும், கடமை மிக்க மருமகளாகவும் பல பொறுப்புகளில் தன்னை ஈடு படுத்திக் கொள்ளும் தலை மைப் பண்புடையவளாக செயல்படு கிறாள். அதை கண வன் புரிந்து கொண்டு பக்கபலமாக இருந்தா லே குடும்பம் குதூக லமாக இரு க்கும். வேலைக்குச் செல்வதை எதிர்ப்பது, வீட்டு வேலைகளை அதிகம் சுமத்துவது, குறை கூறு வது பிரச்சினைகளை வளர்க் கும். சினிமாவில் சித்தரிக்கப்ப டும் வாழ்க்கையையும், சீரியல்க ளில் காட்டப்படும் குரூரங்க ளையும் நிஜ வாழ்க்கையில் ஒப் பிடக்கூடாது.
07) வீட்டுப்பொறுப்புகளிலும் இருவரும் பங்கேற்க வேண் டும். கணவன் வேலையில் ம னைவியும், மனைவி வே லையில் கணவனும் ஒத்தா சைகள் செய்தால் அன்யோ ன்யம் அதிகரிக்கும். அவ் வப்போது பரிசளியுங்கள். கைச் செலவுக்கு கொஞ்சம் கூடுத லாக காசு கொடுங்கள்.
08) திருமணம் என்பது `நீயா நானா’ போட்டியல்ல. கண வன்-மனைவி ஒருவரையொ ருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு ஒரு வரின் தேவையை நிறைவு செய்ய மற்றவர் துணைபுரிய வேண்டும். இருவர் இணைவதே சேர் க்கையால் கிடைக்கும் மு ழுமையை அனுபவிக்கத்தான்.

09) உடலுறவை இயந்திரத்தன மான விஷயமாக அணுகக் கூ டாது. உங்கள் பலவித எதிர்பார்ப்புகளும் உடனே நிறை வேறும் என்று எண்ணக்கூடாது. அது சார்ந்த பிரச்சினை களுக்கு இன்டர்நெட்டிலும், தெரிந் தவர்களிடமும் ஆலோசனை கேட் பதை தவிர்த்திடுங்கள். மருத்து வ ரை அணுகுவது நல்ல பலன் தரும்.
10) தேவையை நிறைவேற்ற நிபந் தனை விதிக்காதீர்கள். நெருக்கம் இருக்கும் இடத்தில் உரிமை எடுத் துக்கொள்வதும் இருக்கும். எனவே கோபம் கொள்வதும், கூடிக்கொள்வதும் குடும் பத்தில் சகஜம் என்பதை மறந்து விடாதீர்கள்.