Home பெண்கள் தாய்மை நலம் தாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை!

தாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை!

28

images (15)தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தை க்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணி ற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சி யில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சில குழந்தைகள் 2 அல்லது 3 வய து வரை எந்த பாதிப்பு மில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கு ம், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.
அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலி ருந்து அந்தப் பெண்ணிற்கு உண் டாகும் மாற்றங்கள் கருவிலிரு க்கும் குழந்தைக்கும் உண்டா கும். இவ்வாற ஏற்படும் பாதிப் புகள் அல்லது மாற்றங்கள் குழ ந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்தபின் கூட ஏற்படும்.
ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர் கால த்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவு ம் கருவுற்ற பெண்கள் சில நடை முறைகளைக் கடை பிடித்து வரவேண்டும்.
· கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.
· குளிர்ந்த காற்று, வாடைக் காற்று, பனிக்காற்று வீசும் இடங் களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற் கக் கூடாது.
· மழையிலோ மழைச் சாரலி லோ நனையக் கூடாது. அவ் வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வை த்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலை யையும் நன்கு துடைக்க வே ண்டும்.
· எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண் டும்.
· அதிக சூடான நீரை அருந்து தல் நல்லதல்ல. குளிர் சாதன ப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வை த்த குளிர்பானங்கள், குளிர்ந் த நீர் மற்றும் குளிர்ந்த உண வுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக் கொள் ளலாம். கருவுற்ற பெண்ணு க்கு சளிப் பிடித்தால் அது கரு வில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.
· கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடை க்காமல் போகும்.
· அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண் டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண் டும்.
· சத்து மாத்திரைகளை நேரடி யாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங் கள் காய்கறிகள் போன்றவற் றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங் களில் தாயின் உடல் சமநிலைப் பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பி க்கும். இதனால் குழந் தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்ப டுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.
· மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வே ண்டும். அதிக சூடு, அதிக குளிர் ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.
· கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய் வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத் தைத் தவிர்ப்பது நல் லது.
· தொலைக்காட்சியை அ திக நேரம் பார்த்துக் கொ ண்டிருக்கக் கூடாது. மன தைப் பாதிக்கும் காட்சி களைப் பார்ப்பதைத் தவி ர்க்க வேண்டும்.
· மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.
· அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கரு விற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
· இரவு நேரங்களில் அ திக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வ தைத் தவிர்க்க வேண் டும்.
கரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கட மை.
மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.