Home பாலியல் தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகளின் கவனத்திற்கு!

தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகளின் கவனத்திற்கு!

25

menopause-500x500சராசரியாக 45 – 50 வயதில் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுவிடும். இதற்கு பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சரியா? அல்லது மாதவிடாய் நின்ற பிறகு பெண்கள் உறவில் ஈடுபட விரும்புவார்களா? இல்லையா? அவரது மனநிலை மற்றும் உடல்நிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலும், மாதவிடாய் நின்ற பிறகு உறவில் ஈடுபடுவது பெண்களுக்கு வலி மிகுந்ததாக இருக்கும். அவர்களால் முன்பு போல உறவில் ஈடுபட முடியாது. ஏனெனில், அவர்களுக்கு வலி அதிகமாக ஏற்படும். எனவே, மாதவிடாய் நின்ற பிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடுபவர்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்….
செய்திகூறு # 1
மாதவிடாய் முற்றிலுமாக நின்ற பிறகு பெண்களுக்கு உணர்ச்சியின் அளவு குறைந்திருக்கும். அவர்களுக்கு உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற தூண்டுதல் குறைந்திருக்கும். மேலும், உறவில் ஈடுபட்டாலும் முந்தைய அளவிற்கு அவர்களால் இன்பம் காண இயலாது.
செய்திகூறு # 2
வலி மிகுந்த உடலுறவு! மேலும், மாதவிடாய் முடிந்த பிறகு உறவில் ஈடுபடும் போது, சில பெண்கள் மிகுந்த வலியை உணர்வதாக கூறுகின்றனர்.
செய்திகூறு # 3
மாற்று வழிகள்! உறவில் ஈடுபட உணர்சிகளை தூண்ட என்ன மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் கூட, அவை பெரியதாக பயனளிக்காது என மாதவிடாய் முடிந்த பெண்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
செய்திகூறு # 4
மாதவிடாய் நின்ற பிறகு உறவில் ஈடுபடுவதால் பெண்களுக்கு, தூக்கமின்மை, மன அழுத்தம், ஆரோக்கியப் பிரச்சனைகள், சிறுநீர் கட்டுப்படுத்துவதில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் எழுகின்றன.
செய்திகூறு # 5
அப்படியும், நீங்கள் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று எண்ணினால், முதலில் அவர்களுக்கு உணர்ச்சியை தூண்டும் வண்ணம் செய்த பிறகு ஈடுபடுவது நல்லது. இல்லையேல் கண்டிப்பாக அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிக வலியை உணர்வார்கள்.
செய்திகூறு # 6
நிபுணர்கள், மாதவிடாய் நின்ற பிறகு உறவில் ஈடுபடும் தம்பதிகள், முதலில் ஃபோர்ப்ளேவில் ஈடுபடுவதால் பெண்களை உணர்ச்சி ரீதியாக மேலோங்க வைக்க முடியும் என தெரிவிக்கின்றனர்.
செய்திகூறு # 7
மேலும், மாதவிடாய் முடிந்த பிறகு தாம்பத்யத்தில் ஈடுபடும் ஆண்கள், முதலில் உங்கள் துணையிடம் அவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள், அவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் என்னென்ன என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.
செய்திகூறு # 8
பெண்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் மாதவிடாய் நின்ற பிறகு உறவில் ஈடுபடுவது சிரமமற்றதாக இருக்கும். மேலும், இது ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை சீராக்கும் எனவும் கூறப்படுகிறது.