Home பெண்கள் உடல் கட்டுப்பாடு தலைசுற்றல், வாந்தி, காது இரைச்சல் பிரச்சனைகளுக்கு ஆகாய முத்திரை

தலைசுற்றல், வாந்தி, காது இரைச்சல் பிரச்சனைகளுக்கு ஆகாய முத்திரை

30

Captureகாது, மூட்டு, இதயம் சார்ந்த தொந்தரவுகளைச் சரிசெய்ய ஆகாய முத்திரையைப் செய்யலாம். இந்த முத்திரை, ஆகாய சக்தியைச் சமன் செய்து, ஆகாய சக்தியின் ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படும் நோய்களைச் சரிசெய்கிறது.

தரை விரிப்பின் மீது சம்மணமிட்டோ, நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றியோ இந்த முத்திரையை செய்யலாம். ஒரு நாளைக்கு இரு வேளை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். நின்றுகொண்டோ, நடந்துகொண்டோ செய்யக் கூடாது. ஆகாய முத்திரையை ஒரு கையில் மட்டும் செய்யக் கூடாது.

செய்முறை :

கட்டை விரல் நுனியுடன் நடுவிரல் நுனியைச் சேர்த்து வைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

பலன்கள் :

* பயணங்களால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, காது இரைச்சல் போன்றவற்றைத் தவிர்க்க, இதைச் செய்யலாம். பயணம் தொடங்குவதற்கு ஐந்து முதல் 10 நிமிடங்களுக்கு முன்பும் இந்த முத்திரையைச் செய்யலாம்.

* வயதாகும்போது காதுகளில் கேட்கும் திறன் குறையும். கேட்கும் திறன் மேம்பட இந்த முத்திரை உதவும்.

* பல்வலி, ஈறுகளில் ஏற்படும் வலி, பற்கூச்சம் ஆகியவற்றுக்கு இந்த முத்திரையைச் செய்யலாம்.

* அதிக நேரம் ஹெட் செட், தொலைபேசி, கைபேசி ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தொந்தரவுகளுக்கு இந்த முத்திரையைச் செய்யலாம்.

* காது அடைப்பு, காது மந்தம், காது சவ்வு கிழிதல், காதில் சீழ் வழிதல் பிரச்சனைகளுக்கு முதலுதவிபோல இந்த முத்திரையைச் செய்த பின், தகுந்த மருத்துவரை அணுகலாம்.