Home பெண்கள் அழகு குறிப்பு சுலபமாக கடைபிடிக்ககூடிய பெ‌ண்களு‌க்கான அழகுக்குறிப்புகள்

சுலபமாக கடைபிடிக்ககூடிய பெ‌ண்களு‌க்கான அழகுக்குறிப்புகள்

17

imagesகூந்தலை அலசும்போது கடைசியில் சிறிதளவு வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அலசினா ல், கூந்தல் பளபளப்பாகும்.
இரவில் தூங்கச்செல்லும் முன் முகம், கை மற்றும் கால்களை நன் றாகக் கழுவி சுத்தம் செய்யவும். கைமற்று ம் கால்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசரைக் கொண்டு மசாஜ் செய்தால் மென்மையாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும்.
பாலில் சிறிதளவு மஞ்சள் மற்றும் கடலை மாவைக் கலந்து குளித்து வந்தால் நல்ல நிறம் கிடைக்கும்.
கை முட்டிகளில் உள்ள கருமை நீங்க, எலுமிச்சைப்பழத்தின் சாறை த் தேய்க்க வேண்டும்.
உருளைக்கிழங்கின் சாறை முகத்தி ல் தடவினால், பிளீச்சிங் செய்த பல ன் கிடைக்கும்.
கண் இமைகளில் பாதாம் அல்லது விளக்கெண்ணெயை இரண்டு துளி கள் விட்டுத்தூங்கினால், கண்இமை கருப்பாக நீண்டு வளரும்.
குளித்தபின் கைகளில், கிளிசரின் மற்றும் பன்னீர் கலந்து தடவினா ல் கைகள் மென்மையாக மாறும்.
உதடுகளில் பாலாடையைத் தடவி வந்தால், வறண்டுபோன உதடுகள் மென்மையாக மாறும்.களைப்படைந்த கால்களை மிதமா ன உப்புக் கலந்த சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்து, பின் சிறிதளவு தேங்காய் எண்ணெயைத் தடவி விட்டு தூங்கி னால் இர வில் ஆழ்ந்த உறக்கம் வரும்.
தேங்காய் எண்ணெயில் சிறிதளவு கரு வேப்பிலை, காய்ந்த நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி இலை ஆகியவற் றைக் கலந்து, கொதிக்க வைத்து, பின்னர் ஆற விடவும். இதனை தினமும் கூந்தலுக்குத் தடவிவர கருமையாக, பளபளப்பாக மாறும்.