Home பாலியல் “சுய இன்பம் அனுபவித்த‍ல்” – (வெளிவராத) அதிர்ச்சியூட்டும் வரலாற்றுத் தகவல்கள்!

“சுய இன்பம் அனுபவித்த‍ல்” – (வெளிவராத) அதிர்ச்சியூட்டும் வரலாற்றுத் தகவல்கள்!

30

images (3)தென் ஆப்பிரிக்காவில் வாழும் ஜூலுஇன மக்கள். சிறுவர், சிறுமிகளுக்கு வேட்டை மற்றும் போர்பயிற்சி தரும்போது கூட வே சுய இன்பம் செய்வது எப்படி என்றும் அப்பாஅம்மாவே கற்றுத் தருவார்கள். ‘பெரியவர்களாகி த் திருமணம் நடந்ததும் இந்தப் பழக்கத்தை மறந்துவிட

ஹிப்போகிரேடஸ்
வேண்டும்’ என கண்டிப்போடு அட்வைஸ் செய் வார்கள்.
மருத்துவரீதியாக இதுபற்றி தவ றான நம்பிக்கையை விதைத்த வர், நவீன மருத்துவ முறையின் தந்தை என புகழப்படும் ஹிப்போகிரேடஸ். அவரது காலத்தில் விந்தணு முதுகு த் தண்டில் சுரப்பதாக மருத்துவர்க ள் நம்பி வந்தார்கள். ‘‘தொடர்ந்து ஒரு நபர் சுய இன்பத்தில் ஈடுபட்டு தனது செக்ஸ்திரவத்தை வீணாக்கி வந்தால், அவருக்கு முதுகெலும்பி ல் இருக் கும் திரவம் தீர்ந்து போய் விடும். அப்புறம் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு அவரது மனநிலை பாதி க்கப்படும்’’ என்றார் அவர். ‘ சுய இன்பம் பாவம்’ என்ற மத நம் பிக்கை, ‘இது உடல் நலத்துக் கு கேடு’ என்ற மருத்துவ நம் பிக்கையாக மாறியது அப் போதுதான்!
அதன்பிறகு வந்த டாக்டர்கள் இதே ரூட்டில் தங்கள் கற்ப னைக் குதிரையைத் தட்டி விட்டு இஷ்டத்துக்கு கதைவிட்டனர். 18ம் நூற் றாண்டில் வாழ்ந்த சுவிட் சர்லாந்து டாக்டர் டிஸ்ஸாட் என்பவர் சுய இன்பத்தில் ஈடு படுகிறவர்களுக்கு என்னென்ன நோய்கள் வரும் என பெரிய பட்டியலே போட்டார். ‘ஆ ண்கள் இதில் ஈடுபட்டால் நரம்புத் தளர்ச்சி வந்து பை த்தியம் பிடிக்கும். காக்கா வலிப்பு வரும். முகத்தில் பரு வரும். மூளை வளர்ச் சி பாதிக்கப்படும். கண்கள் உள்ளே போ ய்விடும். கண் களுக்குக் கீழே கருவளை யம் விழும். கன்னங்கள் ஒடுங்கி நாக்கு வெளியில் தள்ளிவிடும். பெண்களுக்கு இதை விட பயங்கரமான விளைவுகள் ஏற்படும்… தலைமுடி கொட்டி வழுக்கை விழும். மாதவிலக்கின் போது வலி கடுமையாக இரு க்கும். குழந்தை பிறக்கும்போதும் பயங்கர வலி இருக்கும். குழந் தை செத்துப் பிறக்கும். கடும் வயிற்றுவலி ஏற்பட் டு கர்ப்பப்பை, பெண்குறி வழியாக வெளி யில் வந்துவிடும்.’
இப்படி ஹோட்டல் மெனு கார்டு ரேஞ்சுக்கு இவர் பட்டியல் போட, மற்ற டாக்டர்கள் இதைவிட ஒரு படி மேலே சொல்ல வேண் டிய நிலை வந்தது. இப்படி கற்பனையான விளைவு களைச் சொல்லி, ‘சுய இன்பத்தைக் குணப்படுத்த’ இவர்கள் தந்த சிகிச்சைகள் பயங்கரமானவை.
சுய இன்பம் அனுபவித்தால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி டா க்டர்கள் வெளியிடும் பட்டியல் நீண்டுகொண் டே போக, பெற் றோர் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. பலரும் ரகசியமாகத் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தனர். இது நோய் என்று அறி வித்தபிறகு, இதற்கான சிகிச்சை என்ன என்று கண்டு பிடிக்க வேண்டும் அல்ல வா? டாக்டர்கள் அதற்கான முயற்சி யில் இறங்கினர்.
டாக்டர்கள் முதலில் குறிவைத்தது, உணவுப் பழக்கத்தை! அமெ ரிக்காவில் பிரபலமாக இருந்த டாக்டர் கார்கன் ‘நியூயார்க் மெடிக்கல் டைம்ஸ்’ பத்திரிகையில், 1896ல் ஒரு கட் டுரை எழுதினார். ‘‘திருமணம் ஆகாத இளைஞர்களும், பெண்க ளும் இரவு நேர சாப்பாட்டில் பாலாடை, முட்டை, உப்பு, மிளகு, மீன், சர்க்கரை, வெங்காயம், வாச னைத் திரவியங்கள்
ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். மது, காபி அருந்தக் கூடாது. இவை எல்லாம் நரம்புகளைத் தூண்டிவிட்டு செக்ஸ் உணர்வை ஏற்படுத்துகின்ற ன’’ என்றார் அவர். சில்வஸ்டர் கிர ஹாம் என்ற மதபோதகர் செக்ஸ் உணர்வைக் கட்டுப்படுத்த, சை வ உணவை சாப்பிடச் சொன்னார். பாலீஷ்செய்யப்படாத கோது மையை அரைத்து, அந்த மாவை சிறுசிறு வில்லை கள் போல் ஆக்கி, ‘கிர ஹாம் கிராக்கர்ஸ்’ என்ற உணவை ஸ்பெஷலாக அ வர் உருவாக்கினார். கிட்ட த்தட்ட தவிடு மாதிரி இருக் கும். செக் ஸைக் குறைக் க இதை சாப்பிடச் சொன் னார் அவர். உப்பு, இனிப்பு எதுவும் இல்லாமல் இதை சாப்பிடுவதே ஒரு தண்டனை மாதிரி இருந்தது. போனால் போகிறது என்று, ‘கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடுங்கள்’ என விதிவிலக்கு அளித்தார். இன்னொரு பக்கம் சில டாக்டர்கள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங் கினர். ‘என் பை யன் தப்பு பண்றான்’ என கவலை யோடு ஓர் இளைஞனை யாராவது டாக்டரிடம் கூ ட்டி வந்தால் போச்சு. அவ ன் மீது எல்லா பரிசோத னைகளையும் நடத்தி மு டித்து விடுவார்கள். இதி ல் முதல்படி, குளியலில் ஆரம்பிக் கும். கொட்டும் பனியில், நடுக் கும் குளிரில், பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டுப் பையனைத் தூங்கச் சொல்வார்கள். உடம்பே விறைத்துக்கொள்ள பையன் நடுநடுங்கி விடுவான். காமத்தீ யை இந்தக் குளிர்ந்த நீர் அடக்கி விடும் என நினைத்தார்கள்.
இதற்கும் அடங்காத பையனாக இருந்தால், அவன் நிலைமை பாவ ம். தடிமனான ஒரு போர்வையைத் தண்ணீரில் நனைத்து ஈரம் சொட் டச்சொட்ட அதை போர்த்திக்கொ ண்டு தூங்கச் சொல் வார்கள். ஏ தோ ஃபிரிஜுக்குள் நுழைந்து விட் டது மாதிரி உணர்வு வர, தூக்கம் எங்கே வரும்?
இன்னும் சில டாக்டர்கள் ஏதாவது கஷ்டமான உடற்பயிற்சியை சொல்லிக் கொடுத்து, ‘‘தூங்கறதுக்கு முன்னாடி இதை ஆயிரம் தடவை செய்துடு கண்ணா’’ என்று அனுப்பி வைப்பார்கள். அப்பா கண் காணிக்க, அவர் முன் னால் ஆயிரம் தடவை இதை செய்து முடித்ததும் கண் ணைச் சுழற்றிக்கொண்டு தூக்கம் வந்துவிடும். நடுவி ல் விழிப்பே வராது. அப்புறம் சுய இன்பத்துக்கு ஏது நேரம்?
வேறொரு சிகிச்சை… இரவு நேரத்தில் பையனை கைக ளைப் பக்கவாட்டில் வைத்து க் கட்டிப்போட்டுத் தூங்க வைப்பது. கைகள் கட்டப்பட்டிருக்க, பையனின் ஜட்டிக்குள் ஒரு தடிமனான நூல் கட்டப்பட்டு, அதன் இன்னொரு முனை அப்பாவின் அறைக்கு செல்லும். அந்த முனை யில் மணி கட்டித் தொங்கவிட ப்பட்டு இருக்கும். பையன் ஏதா வது தப்பு செய்ய முயன்றால்,
அப்பாவின் அறையில் மணி அடி க்கும். பையன் மாட்டிக் கொள் வான். சிலர் இதையே மின்சார இணைப்பு கொடுத்து, அலாரம் இணைத்து வைத்தி ருந்தார்கள்.
இதைவிட கொடூரமான இன் னொரு சிகிச்சை இருந்தது. எலிப் பொறிமாதிரி கூரான பற்களோடு ஒரு வளையம் இருக்கும். இதை ஆணுறுப்பின் மீது மாட்டி, இடுப்போடு இணைத்து ஒரு பூட் டுப் போட்டுப் பூட்டி விடுவார்கள். சாவி அப்பா கையில் இருக்கும். பரவசமான செக்ஸ் உணர்வு கிள ர்ந்தால், இந்தக் கூரான பற்கள் குத்திக்காயப்படுத்திவிடும். அத னால்பையன் அடங்கிஇருப் பான்.
அமெரிக்காவின் டெக்சாஸ் பகு தியில் வில்லியம் ஆக்டன் என்ற டாக்டர் இருந்தார். இவர் ‘சுய இன்பத்தை’ தடுக்கும் அறுவை சிகிச் சைகளில் புகழ் பெற்றவர். ஆணுறுப்பின் மேற்புறத் தோலு க்குள் ஆபரேஷன் மூலம் மெல் லிய வெள்ளி க் கம்பியை நுழைத்து விடுவா ர் இவர். சுய இன்பம் அனுபவிக்கும் நோக்கத்தி ல் பையன்தொட்டால், வலி உயிர்போ கும். இந்த வலிக்குப் பயந்து பையன்கள் கையைக் கட்டிக்கொண்டு அடங்கி இருந்தார்கள்.
இளம்பெண்களும் கூட டாக்டர்களிடம் மாட்டிக் கொண்டு அவதி ப்பட்டார்கள். இதில் பயங்கரமானது ‘கற்பு வளையம்’ எனப்படும் ஒரு பெல்ட். இரும்பில் செய் யபட்ட இந்த பெல்ட், ஒரு ஜட்டி மா திரி இருக்கும். பெற்றோர்கள் பெண்ணுக்கு இதை மாட்டி விடுவா ர்கள். இடுப்புப் பக்கம் இருக்கும் வளையத்தை இறுக்கிப் பூட்டி விட்டால் அவி ழ்க்க முடியாது. இயற்கை உபாதைக்காக சின்ன தாக ஒரே ஒரு துவாரம் மட்டும் இ ருக்கும்.
இதுதவிர கொடூரங் கள் நீண்டன… பெண்ணுறுப்பில் சூடு வைத்துக் காய மாக்கி விடுவார்கள் . காயமான இடத்தில் கைவைத்தால் வலிக்கும் என்பதால், பெ ண்கள் தொடமாட்டார்கள் என நினைத் தார்கள். இன்னும் சிலர் தையலே போட்டு பெண்ணுறுப்பை முக் கால்வாசி மூடினார்கள்.
1856ல் தொடங்கி 1932 வரை இந்த மாதிரி சுய இன்பத்தை தடுக்கு ம் கருவிகள் முப்பத்துமூன்றுக்கு அமெரிக்கக் காப்புரிமை அலுவ லகம் உரிமை கொடுத்திருந்தது! இதுதவிரவும், இன்னும் பல மாடல் கருவிகள் மார்க் கெட்டில் விற்றன.
சிகிச்சை என்ற பெயரில் டாக்டர்கள் மேற்கொண்ட கொடூரங்க ளுக்குப் பயந்தே பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். இயல் பான ஒரு பழக்கத்தை நோய் என அடையாளம் காட்டி, ஆயிரக் கணக்கானவர்களை சாகடித்தது, வரலாற்றில் வேறு எப்போதும் நடக்காத கொடுமை.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம் பத்தில் தான் மருத்துவ உலகம் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவ ம் கொடுத்தது. ஆராய்ந்து சொல் லப்படும் உண்மைகளை மட்டுமே நம்ப ஆரம்பித்தது. மருத்துவப் புத் தகங்களில் ‘சுய இன்பம் தப்பான விஷயம்… பயங்கரமான நோய்’ என்று இருந்த பாடத்தை, 1940ம் ஆண்டு நீக்கினர். அமெரிக்க அரசு வெளியிடும் ‘குழந்தைகள் பரா மரிப்பு கையேட்டில்’ 1951 ம் ஆண்டு புதிதாக ஒரு அறிவுரையைச் சேர்த்தனர். ‘பிள்ளைகள் சுய இன்பம் அனுபவித்தா ல் அதைத் தடுக்காதீர்கள்’ என்பதுதான் அந்தப் புதிய அட்வைஸ். 1972ம் ஆண்டு அமெரிக்க டாக்டர்கள் சங் கம், ‘சுய இன்பம் இயல் பான ஒரு பழக்கம்தான்’ என அறிவித் தது.
இந்தியாவைப் பொறுத்தவரை சுய இன்பம் தப்பு என்றோ, சரி என் றோ மருத்துவ நூல்கள் சொல்லவில்லை. ஆயுர்வேத நூலான சரக சம்ஹிதையில், ‘இச் சைகளை அடக்கக்கூடாது ’ என்று இருக்கிறது. பழங் கால சிற்பங்களில் கூட சுய இன்பம் அனுபவிப்பது மாதிரி காட்சிகளைப் பார் க்கமுடியும். இந்தப் பழக்க த்துக்கு ‘பாநி மந்தன்’ என பெயர் வைத் திருக்கும் வாத்ஸாயனர், வயதான காலத்தில் செக்ஸ் அனுபவிக்கும் ஆசை உள்ளவர்களு க்கு இதைத் ஒரு தீர்வாக சொல்கிறார்.
நவீன கால செக்ஸ் சிகிச்சை யிலும்கூட, சுய இன்பம் ஒரு சிகிச்சை முறையாக இருக் கிறது. நோய் என்று கருதப் பட்ட ஒரு பழக்கம், இப்போது மருந்தாக மாறி இருப்பதற்குக் காரணம் அறிவியல் தான்.
ஆனாலும் சில நம்பிக்கைகளை மாற்றுவது கஷ்டம். இரண்டாயி ரம் ஆண்டுகளாக இருக்கும் ஒரு நம்பிக்கையை ஐம்பது ஆண்டு களில் மாற்றி விட முடியாது. ‘சுய இன்பம் தப்பில்லை’ என மக்க ள் உணர்ந்து கொள்ள கொஞ்சம் காலம் பிடிக்கும்.
சுய இன்பம் அனுபவிப்பதைவிட, இது தப்பு என மனதில் தோன்று ம் குற்ற உணர்வுதான் ஒருவரை மனநோயாளி ஆக்கும் அளவு ஆபத்தானது. விந்தணுவை ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே கொ டுக்க, கடவுள் ரேஷன் ஆபீஸர் இல்லை. மனிதன் ஆரோக்கி யமாக இருந்தால், அவன் சாகிற வரை இது சுரந்துகொண்டே இருக்கும். ஞாயிறு விடுமுறை எல்லாம் கிடையாது. அதனால் சுய இன்பத்தில் இது வீணாகிவி ட்டது என நினைக்க முடியாது.
ஆனால், மனதில் குற்ற உணர் வைக் கிளப்பி விட்டுக் காசு பார்க்க ஏகப்பட்ட போலி டாக்டர்கள் கிளம்பிவிட்டார்கள். ‘சுய இன்பம் அனுபவிப்பவர்களுக்கு ஆணு றுப்பு சிறியதாகிவிடும்’ என்பது உட்பட பல வதந்திகளைக் கிள ப்பிவிட்டு இவர்கள் பணம் பறி க்கிறார்கள். இவர்கள் கிளப்பு ம் பீதியை வேதவாக்காக பலர் நம்பு கிறார்கள். சிகிச்சை செய் துகொள்ளும் வசதி இல்லை யே என ஏங்கித் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த க் குற்ற உண ர்வு வரக்கூடாது என்பதற்காகவே இவ்வளவு விவரமாக சொல்கிறேன். மனிதர்கள் மட்டுமில்லை… குரங்கு, முள்ளம்பன்றி, யானை, பூனை, நாய் என பல விலங்குகளுக்கு இந்தப் பழக்கம் உண்டு.
திருமணத்துக்கு முன்பு இந்தப் பழக்கத்தைத் தவிர்க்க விரும்புகி றவர்கள், தனிமையில் இருக்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு தியானம், தோட்ட வேலை, பகுதி நேர வேலை என வேறு எதிலாவது மன தை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. திருமண த்துக்குப் பிறகு இது சரியாகிவிடும். அப்படி சரி யாகாவிட்டால், அதற்குதான் சிகிச்சை அவசிய ம். ஒவ்வொரு வயதிலும் ஒரு பழக்கத்தை கட ந்து வருவது மனித இயல்பு. அப்படி ஒரு இயல்பு தான் இது. ‘இளமையில் சுய இன்பம் அனுபவி த்தது இல்லை’ என சொல்கிற ஆசாமிகளில் பலர்தான் செக்ஸ் பிரச்னை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.