Home உறவு-காதல் குடும்ப பந்தத்தை குலைத்து உயிரைக் குடித்த கள்ளக்காதல்!!

குடும்ப பந்தத்தை குலைத்து உயிரைக் குடித்த கள்ளக்காதல்!!

31

vlcsnap-100409-115539162சமூ­கத்தின் மிகச் சிறிய அலகு குடும்பம். ஒரு ஆணும்,பெண்ணும் பாரம்­ப­ரிய ரீதி­யாக திரு­ம­ணத்தின் மூலம் ஏற்­ப­டுத்தும் இரத்த உறவு முறை யின் அடை­யாளம் குடும்பம். பரம்­பரை பரம்­ப­ரை­யாகத் தொடரும்

பந்தம் தான் திரு­மணம்.

இதனால் தான் இது “ஆயிரங் காலத்துப் பயிர்” என்று பெருமை பேசப்­ப­டு­கின்­றது. இத்­த­கைய குடும்­பங்கள் நிலை­கு­லையும் போது அந்த குடும்­பத்­தி­லுள்ள உற­வு­களும் சற்று ஆட்டம் காணத் தொடங்­கு­கின்­றன.

அதிலும் சந்­தேகம் என்­பது கொடிய விஷம். அது கொஞ்சம் கொஞ்­ச­மாகக் கொன்று ஒழித்­து­விடும். அதிலும் குடும்­பத்தில் அது குடி கொண் டால் அங்கு நாசமே விளையும்.

கணவன் மனைவி மீதும் மனைவி – கணவன் மீதும், சந்­தேகம் கொண்டால் அந்தக் குடும்பம் என்­ன­வாகும் என்­ப­தற்கு எடுத்துக் காட்டாக இந்த சம்­பவம் அமை­கின்­றது.

அதே­வேளை, தாய் ஸ்தானத்தில் இருப்­ப­வ­ளுக்கு மிகப் பெரிய பொறுப்­புள்­ளது. காம ஆசை­க­ளுக்கு அப்பால் குடும்பம், பிள்­ளைகள், கணவன் என்று பின்னப்­பட்ட வலையை அவள் ஒரு­போதும் அறுத்­தெ­றியக் கூடாது. அந்த வகையில் இங்கு நடந்­தது என்ன என்று பார்ப்போம்.

அன்று சூரியன் மறைய ஆரம்­பித்­தது, இருள் சூழ்ந்த நிலையில் தியனி வழ­மைக்கு மாறாக சற்று தாம­தித்தே வீட்­டுக்கு வந்தாள். அவள் வரும் போதே 6 மணிக்கு பிந்­தியே இருக்கும். வீட்டில் அவ­ளது தம்­பியும் தங்­கை­யுமே இருந்­தார்கள்.

வழ­மை­யாக அந்த நேரத்தில் தங்கள் காணிக்கு வேலைக்குச் சென்று வந்­தி­ருக்கும் தாயும் தந்­தையும் அன்று வீட்டில் இருக்கவில்லை. தன் தம்பியிடமும், தங்­கை­யி­டமும் விசா­ரிக்க தங்கை, “நாங்கள் வீட்­டுக்கு வரும் போது வீட்டில் யாரும் இருக்க வில்லை அம்மா சமைத்து வைத்­தி­ருந்தார்.

நாங்கள் தான் போட்டு சாப்­பிட்டோம்” எனக் கூறினாள். இந்த நிலையில் பிள்­ளைகள் மூவ­ருமே தங்கள் பெற்­றோரின் வரு­கையை எதிர்­பார்த்து வாசலிலேயே காத்து நின்­றார்கள்.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் மூத்­தவள் திய­னிக்கு தலை சுற்­றி­யது. காரணம். முதல் நாள் இரவு வீட்டில் நடந்த நிகழ்­வு­களே ஆகும்.

முதல் நாள் இரவு நிம்­ம­தி­யற்ற இர­வா­கவே அவர்­க­ளுக்கு கழிந்­தது. நள்­ளி­ரவு வரை தாயும் தந்­தையும் சண்­டை­யிட்ட வண்­ணமே இருந்­தி­ருக்­கின்­றார்கள். எனவே இரவு அவர்கள் மூவ­ருமே ஒழுங்­காக நித்­திரை கொள்ள வில்லை.

காலையில் எழுந்­த­வு­ட­னேயே மூத்த மக­ளான தியனி “அம்மா நீ இன்­னைக்கு தோட்­டத்­திற்கு மிளகு பறிக்கச் செல்ல வேண்டாம். நேற்று இரவு முழுக்க சண்டை பிடித்து நித்­தி­ரையும் கொள்­ள­வில்லை.

எனவே வேலைக்குச் செல்ல வேண்டாம்” எனக் கூறி விட்டு தன் தம்­பி­யையும் தங்­கை­யையும் தன்­னு­டனே அழைத்துக் கொண்டு வேலைக்குப் புறப்­பட்டாள். அதையும் மீறி தாய் எங்கு சென்றாள் என்­பதே அவ­ளுக்கு பெரும் யோச­னை­யாக இருந்­தது.

நேரம் செல்லச் செல்ல பொறு­மை­யி­ழந்­த­வ­ளானாள் தியனி, எனவே அயல் வீட்டில் இருப்­போ­ரிடம் தன் தாய், தந்தை பற்றி விசா­ரிக்கச் சென்றாள். அவர்களும் “தெரி­யாது, காணிக்குப் போவதை தான் கண்டோம்” என்று கூற, திய­னிக்கு பயம் மேலும் இரட்­டிப்­பா­னது.

அய­ல­வர்­களின் உத­வி­யுடன் அவர்­களின் காணிக்குச் சென்று பார்ப்போம் என்று புறப்­பட்­டார்கள்… செல்லும் போதே பிள்­ளை­களின் மனதில் ஏதோ ஒரு­வித சலனம் நிறைந்­தி­ருந்­தது. “ஐயோ, எனது பெற்­றோ­ருக்கு ஏதும் ஏற்­பட்­டி­ருக்கக் கூடாது” என்று ஆயிரம் பிரார்த்­த­னைகள் இறை­வனை நோக்­கி­யி­ருந்­தன.

எனினும், அப் பிள்­ளை­களின் உள­மார்ந்த பிரார்த்­தனை அந்த இறைவன் காதில் விழ வில்லைப் போலும். அவர்கள் கண்ட காட்­சியால் ஒரு கணம் அந்தப் பிள்­ளை­களின் இரத்தம் உறைந்து போனது. அங்கே தாயும் தந்­தையும் தோட்­டத்­தி­லுள்ள அவர்­களின் பழைய வீட்டில் உயி­ரற்ற நிலையில் கிடந்­தார்கள்.

எந்தப் பிள்­ளை­களும் தன் தாய் தந்­தை­களை காணக் கூடாத காட்சி அது. தாய் இரத்த வெள்ளத்தில் கழுத்தில் ஆழ­மான வெட்­டுக்­கா­யத்­துடன் கிடந்தாள். அருகில் தேயிலை செடி­களை வெட்டும் கூரிய கத்­தியும் கிடந்­தது. தந்­தையோ ஒரு அறையில் கயிற்றில் தூக்­கிட்டு தொங்­கிய நிலையில் காணப்­பட்டார்.

உட­ன­டி­யாக அந்த இடத்தில் இருந்­த­வாறே பிள்­ளை­க­ளுடன் வந்த அய­லவர் ஒருவர் பத­றி­ய­டித்து பொலி­ஸா­ருக்கு அறி­வித்தார். அதே நேரம் அக­ருல்ல பொலிஸார் அவ்­வி­டத்தை வந்­தார்கள் தொடர்ந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலி­ஸாருக்கு பல உண்­மைகள் தெரிய வந்­தன.

மல்­லிகா சந்­தி­ராணி வயது (42), ஜய­வர்­தன வயது (47) ஆகிய இரு­வரும் சுமார் 20வரு­டங்­க­ளுக்கு முன் திரு­மண பந்­தத்தில் இணைந்­த­வர்கள். இவர்­க­ளுக்கு தியனி (19), தம­யந்தி (12), மகிந்த(07)ஆகிய மூன்று பிள்­ளைகள்.

திரு­ம­ண­மாகி தமது வாழ்­வினை தொடங்­கி­யமை, கொஞ்சிக் குலாவி மழலை செல்­வங்கள் மூவரின் மழலை மொழி கேட்­டது எல்­லாமே அவர்கள் உயி­ரற்ற நிலையில் ஜடமாய் கிடந்த அந்தப் பழைய வீட்டில் தான்.

கடந்த இரு ஆண்­டு­க­ளுக்கு முன் தான் இந்த பழைய வீட்­டி­லி­ருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலை­வி­லுள்ள ஒரு காணித்­துண்டை வாங்கி தமது வசதிக்கு ஏற்­ற­வாறு ஆசை ஆசையாய் ஒரு வீட்­டைக்­கட்டி. குடி போயி­ருந்­தார்கள். எனவே, அவர்­க­ளு­டைய பழைய வீட்டை பழைய தளபாடங்­களை வைக்கும் களஞ்­சிய அறை­யாக உப­யோ­கித்து வந்­தி­ருக்­கி­றார்கள்.

ஆனால் பல கன­வு­க­ளுடன் கட்­டிய வீட்டில் வெகு நாட்கள் சந்­தோ­ஷ­மாக இருக்க கிடைக்­க­வில்லை. கணவன் மனைவி இரு­வ­ருக்­குள்ளும் சண்டை சச்சரவு­க­ளா­கவே இருந்து வந்­துள்­ளன.

அதற்கு மல்­லி­காவின் நட­வ­டிக்­கை­களும் ஒரு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றது. மல்­லி­காவின் நடத்­தை­களில் சந்­தேகம் எழுந்து ஜய­வர்த்­தன சற்றுப் பொறு­மை­யி­ழந்தான். இது தொடர்பில் தேடிப்­பார்க்கும் போது, மல்­லி­கா­வுக்கும் சிந்­தக்க என்­ப­வ­னுக்­கு­மி­டையில் தொடர்பு இருந்­தது தெரி­ய­வந்­தது.

இதனால் வீட்­டுக்குள் பிரச்­சினை பூகம்­ப­மாக வெடித்­தி­ருந்­தது. தான் திரு­மணம் முடித்து தன்­னோடு சுக துக்­கங்­களில் பங்­கேற்று தன்­னு­டைய குழந்தைகளுக்கு தாயான தன் ஆசை மனைவி வேறொரு ஆட­வ­னோடு பழ­கினாள் என்று தனக்குள் புழுங்கி மடிந்தான்.

உண்­மையில், எந்தக் கணவனும் பொறுத்துக் கொள்ள முடி­யாத அதிர்ச்சி தான் அவ­னுக்கும் ஏற்­பட்­டது.

இதனால் குழம்பிப் போன அவன் கடந்த ஆறு மாதத்­துக்கு முன் வீட்டில் இருக்க பிடிக்­காமல் மனம் நொந்­து­போன நிலையில் ஜய­வர்­தன தனது பழைய காணியில் இருக்கும் பாழ­டைந்த வீட்டில் போய் தங்கி இருந்­துள்ளான்.

எனினும் அடிக்­கடி அவன் மனைவி மல்­லி­காவும், பிள்­ளை­களும் வீட்­டுக்கு வரு­மாறு தொல்லை கொடுத்­த­தினால் தான் கடந்த மாதம் பிள்­ளை­க­ளுக்­காக சரி வீட்­டுக்குப் போவோம் என்று நினைத்து வீட்­டுக்கு வந்­தி­ருக்­கின்றான்.

எனினும் மேலும் சண்டை தொட­ரவே செய்­தி­ருக்­கின்­றது. இதனால் பிள்­ளைகள் மூவ­ருக்கும் தம் பெற்­றோரின் நட­வ­டிக்­கைகள் பெரும் அழுத்­தத்தைக் கொடுத்­தன. இது குறித்து பெற்றோர் சற்றும் சிந்­திக்க வில்லை. குறைந்­தது மல்­லி­கா­வா­வது சரி தனக்கு வய­துக்கு வந்த 19 வயது மகளும் இருக்­கிறாள்,

இன்னும் ஒரு மக­ளுக்கு 12 வயது. அவளும் பரு­வ­ம­டையும் வயதில் இருக்­கின்றாள் என்­பதைக் கூட சிந்­தித்­தி­ருக்கவில்லை. விதி அவர்கள் வாழ்க்­கையில் விளை­யா­டி­யது. அப்­படி சிந்­தித்தி­ருந்தால் இன்று இந்த பிள்­ளை­க­ளுக்கு தாய், தந்தை என்ற இரு­வ­ருமே இல்­லாத ஒரு துர்ப்­பாக்­கிய நிலை வந்­தி­ருக்­காது.

ஏற்­பட்ட எல்லாப் பிரச்­சி­னை­க­ளுக்கும் காரணம் மல்­லி­காவின் கள்ளக் காத­லினால் குடும்­பத்தில் ஏற்­பட்ட சந்­தேகம் தான் என்­பது பொலிஸ் விசா­ர­ணை­களின் மூலம் உறு­தி­யாகி இருக்­கின்­றது.

ஜய­வர்­தன மனைவி மல்­லி­காவை கத்­தியால் கழுத்தில் தாக்கி கொலை செய்து விட்டு தானும் தனக்கு தானே கயிற்­றினால் தூக்கிட்டு தற்­கொலை செய்து கொண்­டுள்ளான்.

என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது. ஜய­வர்த்­த­னவின் உடலை அவ­னது இளைய சகோ­தரன் பொறுப்­பேற்று எடுக்க, மல்­லி­காவின் உடலை அவ­ளது மூத்த சகோ­தரன் பொறுப்­பேற்று எடுத்­துள்ளான்.

இருந்த போதிலும் பிள்­ளை­களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜய­வர்­தன, மல்­லிகா ஆகிய இரு­வ­ரது சட­லங்­களும் அவர்கள் ஒன்­றா­கக்­கூடி வாழ்ந்து மகிழ்ந்த அவர்­களின் பழைய வீடு இருந்த காணி­யி­லேயே புதைக்­கப்­பட்­டன.

பெற்­றோரின் இந்த அவ­ரச முடி­வினால் இனி அந்தப் பிள்­ளை­க­ளுக்­குத்தான் கஷ்டம் அதுவும் இளம் வய­தி­லேயே தியனி குடும்ப பொறுப்­பு­களை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாள். அவர்கள் நிம்மதியாய் போய்ச் சேர்ந்து விட் டார்கள். இருப்பவர்களை பற்றி சிந்திக்க வில்லை.

அண்மைக்காலமாக இலங்கையில் தற் கொலை, கொலை என்பன பாரிய சமூக பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதுவும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்வது என்பது ஒரு தொடர் கதையாகவே போய் விட்டது.

வறுமை, ஒழுக்கமற்ற பொழுது போக்குகள், மனக்குழப்பங்கள் என்பன மானிட வாழ்க்கையைத் திடீரென முடிவுக்குக் கொண்டு வருகின்றன. ஆனால் போராட் டங்கள் நிறைந்தது தானே வாழ்க்கை. இறப்பதற்கு வழி தேடுபவர்கள் சற்று சிந்தித்தால் வாழவும் வழி கிடைக்கும்.