Home பாலியல் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதற்கான 13 காரணங்கள்

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதற்கான 13 காரணங்கள்

103

மாதவிடாய் காலம் என்பது பெண்கள் அனைவரும் மாதம் தோறும் சந்திக்க கூடிய ஒன்று தான். அந்த சமயத்தில் பெண்கள் வேடிக்கையான செயல்களில் ஈடுபடமாட்டார்கள். குதிப்பது, வேகமாக நடப்பது போன்றவற்றை கூட செய்யமாட்டார்கள். மிகவும் சோர்வாகவும், மன இறுக்கத்துடனும் காணப்படுவார்கள். இதற்கு காரணம் உடலில் ஏற்பட்டிருக்கும் பிடிப்புகள், இரத்தப்போக்கு மற்றும் மோசமான பசி போன்றவையாகும். இந்த சமயத்தில் மனைவிகள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என குறை கூறும் கணவர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலான தம்பதிகள் மனதில் எழும் சந்தேகமாக இருப்பது, மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா என்பதே. இங்கு மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதற்கான 13 காரணங்களை பார்க்கலாம்.

1 தசைப் பிடிப்புகள்

இது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை சரி செய்ய உதவுகிறது. பெண்கள் உடலுறவில் உச்சநிலையை அடையும் போது, அவர்களின் உடலில் இருந்து ஆக்ஸிடாசின், டோபமைன் மற்றும் பிற எண்டோர்பின் வெளியேற்றப்படுகிறது. இது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தொந்தரவு மற்றும் வலியை போக்க உதவுகிறது.

2 மசகு எண்ணெய்

உடலுறவு சமயத்தில் பயன்படுத்தும் மசகு எண்ணெயை தவிர்த்திடுங்கள். மாதவிடாய் காலத்தில் இரத்தமும், கருப்பையும் மசகு எண்ணெய் போன்று செயல்படும். இது உங்கள் பணத்தையும் மிச்சப்படுத்தும்.

3 நிரந்தரமானதல்ல

இது மாதம் மாதம் ஏற்படக்கூடிய இயற்கையான ஒன்று தான். இது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஏற்படக்கூடியது. இந்த சமயத்தில் கவலையடையாமல் ஆதரவாக இருங்கள். இதை தவிர்க்க நீங்கள் குழந்தைக்கான படிநிலைகளை துவங்குங்கள் மற்றும் ஆணுறை அணியுங்கள்.

4 வேகமாக முடிவது

பெண்கள் உடலுறவில் உச்சம் அடையும் போது, அவர்களது கருப்பை சுருக்கம் அடைகிறது. இதனால், அவர்களது கருப்பையில் இருக்கும் இரத்தம் மற்றும் கருப்பை தேவையற்றதை வேகமாக வெளியேற்றி விடும். இதனால் அவர்களது மாதவிடாய் விரைவில் முடிவடையும். விரைவில் நீங்கள் மாதவிடயற்ற உடலுறவில் ஈடுபடலாம்.

5 அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும்

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது, உண்மையில் அதிக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உங்களை பாதிக்காத படி, விட்டுக்கொடுத்து அக்கறையுடன் இருப்பதால் அதிக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.

6 சௌகர்யத்தை விட்டுவிடுதல்

உங்கள் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால், சௌகரியமாக இருக்கும் நிலைகளுடன், மற்ற உடலுறவு நிலைகளை முயற்சியுங்கள். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

7 கவர்ச்சி

பெண்கள் அவர்களது மாதவிடாய் காலத்தில் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பார்கள். மாதவிடாய் காலத்தின் மூன்றாவது நாளில் ஈஸ்ட்ரோஜன் அளவு மிகவும் அதிகரிக்கும் மற்றும் பிறப்புறுப்பு பகுதி வீக்கம் கொண்டதாகவும், மிகவும் மென்மையானதாகவும் இருக்கும்.

8 இரத்த கசிவு

உங்கள் பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் வெளிவருவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே நீங்கள் உடலுறவின் போது உங்கள் துண்டை உபயோகித்தால், போர்வைகளை துவைப்பதிலிருந்து விடுபடலாம்.

9 இரத்தப்போக்கு

பெண்கள் அவர்களின் மாதவிடாய் காலத்தில் மூன்றாவது மற்றும் ஐந்தாவது நாளில், 30 முதல் 40 மி.லி இரத்தத்தை இழக்கிறார்கள். எனவே, இது நீங்கள் யோசிக்கும் அளவிற்கு அதிகமாக இருக்காது.

10 இரத்தம்

இது சாதாரண இரத்தம் மற்றும் அது பூதாகரமான ஒன்றல்ல. உடலுறவு முடிந்தது சுத்தமாக குளியுங்கள். இது எளிதான ஒன்றுதான்.

11 விந்து

இதுவும் ஆண்களின் விந்தணுக்களை போன்றதே. உடலுறவில் ஈடுபடும் போது, அவர்களின் உடலின் உட்பகுதியில் நடப்பதை யாராலும் பார்க்க முடியாது. இதையும் அதை போலவே யோசியுங்கள்.

12 உடல்

பெண்கள் இந்த மாதவிடாய் காலத்தில் மிகவும் களங்கமாகவும், அவமானமாகவும் உணர்கிறார்கள். இது போன்ற முட்டாள் தனமான சிந்தனைகளை தவிர்க்க வேண்டும். இதனால் நீங்கள் உங்கள் உடலை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் துணையுடன் உடலுறவை மேற்கொள்ளலாம்.

13 வயிற்று வலி

மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி ஏற்படும் போது பெண்கள் சாக்லேட்களை சாப்பிடுவார்கள். ஆனால் இது போன்ற சமயத்தில் அவற்றை தவிர்த்து, உடலுறவில் ஈடுபடுவது, நல்ல பலனை தரும். இது உடலில் கலோரிகளை குறைப்பதுடன், வயிற்று வழியையும் குறைக்க உதவுகிறது.